LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 2015ம் ஆண்டு முதல் வாரத்தில் ஆறு வேலை நாட்கள் !!

மத்திய அரசின் கல்வி வாரியத்தால்(சி.பி.எஸ்.இ) நடத்தப்படும் பள்ளிகளில் வரும் 2015ம் ஆண்டு முதல், வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அடிப்படையில், வரும் 2015ம் ஆண்டு முதல், தினமும், 6 மணி, 10 நிமிடம் வீதம், வாரத்திற்கு ஆறு நாட்களில், 45 மணி நேரம் பள்ளிகள் இயங்கும்.

 

பள்ளி வேலை நேரத்திற்குப் பின், ஒரு மணி, 20 நிமிடங்களுக்கு, அடுத்த நாளுக்கான திட்டமிடல், பாடங்களை தயார் செய்தல் மற்றும் வரவுள்ள நாட்களுக்கான வேலைகளுக்குத் தேவையான தகவல்களை திரட்டுதல் போன்ற பணிகளை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும். 

 

முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள், ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 1,200 மணி நேரம் கல்வி கற்பிக்க வேண்டும்.

 

பள்ளி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக, ஆசிரியர்கள், 200 மணி நேரம் ஒதுக்க வேண்டும். 

 

பள்ளி பாடத்திட்டத்தில், தினசரி எட்டு பாடவேளை இருந்தால், முதல் பாடவேளையில் இருந்து ஐந்தாவது பாடவேளை வரை, 45 நிமிடங்களாகவும், அதற்குப் பின், 40 நிமிடங்கள் வீதம் வகுப்புகள் நடைபெறும்.இவ்வாறு, சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவித்துள்ளது.

by Swathi   on 04 Dec 2013  0 Comments
Tags: CBSE   CBSE Schools   சி.பி.எஸ்.இ   சி.பி.எஸ்.இ பள்ளிகள்           
 தொடர்புடையவை-Related Articles
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டணம் அதிகம் வசூலித்தால் எங்கே புகார் அளிப்பது? சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டணம் அதிகம் வசூலித்தால் எங்கே புகார் அளிப்பது?
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு !! சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு !!
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 2015ம் ஆண்டு முதல் வாரத்தில் ஆறு வேலை நாட்கள் !! சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 2015ம் ஆண்டு முதல் வாரத்தில் ஆறு வேலை நாட்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.