LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

அகநானூறு-6

 

126. மருதம்
நின் வாய் செத்து நீ பல உள்ளி, 
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், 
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் 
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் 
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று 5
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, 
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர் 
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, 
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், 
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் 10
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், 
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் 
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி 
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், 
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி, 15
திதியனொடு பொருத அன்னி போல 
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச் 
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய 
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் 
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், 20
மின் நேர் மருங்குல், குறுமகள் 
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே? 25
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் 
127. பாலை
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும், 
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய 
வலம் படு முரசிற் சேரலாதன் 
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து 
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, 5
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் 
பணி திறை தந்த பாடுசால் நன்கலம் 
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் 
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண் 
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன 10
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள் 
தங்கலர் வாழி, தோழி! செங் கோற் 
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர் 
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி, 
கல்லா மழவர் வில் இடம் தழீஇ, 15
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை 
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், 
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.  
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் 
128. குறிஞ்சி
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே; 
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே 
யாமம் கொள வரின் கனைஇ, காமம் 
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே. 
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி 5
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் 
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு, 
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில் 
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி, 
கான நாடன் வரூஉம், யானைக் 10
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி, 
மாரி வானம் தலைஇ நீர் வார்பு, 
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின், 
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர் 
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? 15
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர் 
129. பாலை
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என 
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் 
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து 
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி, 
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், 5
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் 
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப் 
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி, 
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் 
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் 10
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப, 
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், 
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும் 
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல் 
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், 15
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என 
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் 
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.  
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - குடவாயில் கீரத்தனார் 
130. நெய்தல்
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று 
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ 
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை 
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, 
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை 5
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன் 
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, 
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் 
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம் 
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் 10
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை 
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் 
போது புறங்கொடுத்த உண்கண் 
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.  
கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார் 
131. பாலை
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் 
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, 
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் 
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை 
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என 5
வீளை அம்பின் விழுத் தொடை மழவர் 
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து 
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் 
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் 
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் 10
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் 
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் 
வெருவரு தகுந கானம், 'நம்மொடு 
வருக' என்னுதிஆயின், 
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. 15
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் 
132. குறிஞ்சி
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, 
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி 
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், 
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, 
வால் நிணப் புகவின், கானவர் தங்கை 5
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் 
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், 
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! 
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் 
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை 10
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் 
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை 
இருங் கவுட் கடாஅம் கனவும், 
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.  
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார் 
133. பாலை
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், 
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை 
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, 
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, 
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், 5
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் 
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், 
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு 
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, 
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று 10
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; 
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் 
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! 
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி 
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் 15
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த 
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் 
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.  
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் 
134. முல்லை
வானம் வாய்ப்பக் கவினி, கானம் 
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, 
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, 
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல 
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் 5
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; 
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் 
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, 
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை 
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த 10
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு 
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை 
கடுமான் தேர் ஒலி கேட்பின், 
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.  
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார் 
135. பாலை
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, 
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் 
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, 
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, 
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, 5
பேதுற்றிசினே காதல்அம் தோழி! 
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, 
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ, 
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம் 
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், 10
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை, 
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த 
கழுவுள் காமூர் போலக் 
கலங்கின்றுமாது, அவர்த் தௌந்த என் நெஞ்சே.  
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர் 
136. மருதம்
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு 
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, 
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தௌ ஒளி 
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் 
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, 5
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, 
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, 
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, 
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, 
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, 10
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் 
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற 
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் 
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, 
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, 15
மழை பட்டன்ன மணல் மலி பந்தர், 
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, 
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், 
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! 
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, 20
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் 
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என 
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், 
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, 
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே பேணி, 
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, 
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த 
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.  
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார் 
137. பாலை
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட 
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, 
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் 
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே 
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் 5
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், 
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று 
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் 
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், 
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் 10
தீ இல் அடுப்பின் அரங்கம் போல, 
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும், 
தோளா முத்தின் தெண் கடற் பொருநன் 
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் 
நல் எழில் நெடு வேய் புரையும் 15
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.  
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர் முதுகூத்தனார் 
138. குறிஞ்சி
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! 
குவளை உண்கண் தெண் பனி மல்க, 
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை 
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் 
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, 5
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, 
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், 
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் 
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, 
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, 10
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு 
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் 
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு 
நின்னொடு தௌத்த நல் மலை நாடன் 
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, 15
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், 
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் 
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி 
நல் நிறம் மருளும் அரு விடர் 
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. 20
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார் 
139. பாலை
துஞ்சுவது போல இருளி, விண் பக 
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு 
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ, 
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு, 
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்; 5
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை 
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை, 
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை, 
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து 
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை; 10
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல், 
காமர் துணையொடு ஏமுற வதிய; 
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் 
பரப்பியவைபோற் பாஅய், பல உடன் 
 நீர் வார் மருங்கின் ஈரணி திகழ; 15
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்! 
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர் 
கருவிக் கார்இடி இரீஇய 
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே.  
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார் 
140. நெய்தல்
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் 
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த 
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, 
என்றூழ் விடர குன்றம் போகும் 
கதழ் கோல் உமணர் காதல் மடமகள் 5
சில் கோல் எல் வளை தௌர்ப்ப வீசி, 
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச் 
சேரி விலைமாறு கூறலின், மனைய 
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய 
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, 10
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் 
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு 
எவ்வம் தீர வாங்கும் தந்தை 
கை பூண் பகட்டின் வருந்தி, 
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. 15
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார் 
141. பாலை
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் 
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் 
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; 
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது 
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, 5
மழை கால்நீங்கிய மாக விசும்பில் 
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, 
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; 
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, 
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! 
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, 
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் 
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் 
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, 15
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் 
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, 
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் 
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு 
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; 20
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் 
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் 
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன 
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் 
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை  
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, 
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, 
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய 
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.  
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் 
142. குறிஞ்சி
இலமலர் அன்ன அம் செந் நாவின் 
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, 
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் 
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் 
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற 5
குறையோர் கொள்கலம் போல, நன்றும் 
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி 
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற 
கறை அடி யானை நன்னன் பாழி, 
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் 10
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி 
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் 
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து 
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், 
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, 15
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் 
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை 
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், 
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, 
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, 20
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை 
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, 
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை 
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, 
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; 25
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.  
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 
143. பாலை
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக் 
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின், 
நீடு சினை வறிய ஆக, ஒல்லென 
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும் 
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, 5
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச் 
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும் 
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய! 
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே, 
வசை இல் வெம் போர் வானவன் மறவன் 10
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும், 
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன் 
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் 
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த 
தண் கமழ் நீலம் போல, 15
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.  
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார் 
144. முல்லை
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன; 
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; 
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை 
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை 
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், 5
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் 
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச் 
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், 
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, 
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல 10
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் 
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் 
கடாஅ யானை கொட்கும் பாசறை, 
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை 
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, 15
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி 
வான மீனின் வயின் வயின் இமைப்ப, 
அமர் ஓர்த்து, அட்ட செல்வம் 
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.  
வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் 
145. பாலை
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், 
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், 
வற்றல் மரத்த பொற் தலை ஓதி 
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, 
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு 5
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு 
வாள்வரி பொருத புண் கூர் யானை 
புகர் சிதை முகத்த குருதி வார, 
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் 
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் 10
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் 
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய 
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, 
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் 
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், 15
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, 
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், 
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் 
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, 
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், 20
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் 
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!  
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் 
146. மருதம்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு 
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, 
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, 
படப்பை நண்ணி, பழனத்து அல்கும் 
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், 5
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் 
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை 
யார்கொல் அளியள்தானே எம் போல் 
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, 
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் 10
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, 
ஆயமும் அயலும் மருள, 
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?  
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் 
147. பாலை
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த 
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன 
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை 
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, 
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, 5
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை 
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் 
நெறி படு கவலை நிரம்பா நீளிடை, 
வெள்ளி வீதியைப் போல நன்றும் 
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, 10
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், 
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் 
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, 
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே!  
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அவ்வையார் 
148. குறிஞ்சி
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, 
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், 
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை 
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; 
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; 5
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! 
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் 
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, 
காணிய செல்லாக் கூகை நாணி, 
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை 10
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் 
மாலை, வருதல் வேண்டும் சோலை 
முளை மேய் பெருங் களிறு வழங்கும் 
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.  
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் 
149. பாலை
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த 
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், 
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் 
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் 
அத்த நீள் இடைப் போகி, நன்றும் 5
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் 
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் 
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, 
யவனர் தந்த வினை மாண் நன் கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, 
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய 
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் 
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, 
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, 
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து 
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் 
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.  
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் 
150. நெய்தல்
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென 
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் 
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; 
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, 
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, 5
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் 
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, 
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் 
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, 
மாலை மணி இதழ் கூம்ப, காலைக் 10
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் 
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; 
'வாரார்கொல்?' எனப் பருவரும் 
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!  
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார்

126. மருதம்
நின் வாய் செத்து நீ பல உள்ளி, பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று 5அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர் காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் 10பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி, 15திதியனொடு பொருத அன்னி போல விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச் சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், 20மின் நேர் மருங்குல், குறுமகள் பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே? 25

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் 

127. பாலை
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும், கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய வலம் படு முரசிற் சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, 5நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் பணி திறை தந்த பாடுசால் நன்கலம் பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண் நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன 10ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள் தங்கலர் வாழி, தோழி! செங் கோற் கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர் சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி, கல்லா மழவர் வில் இடம் தழீஇ, 15வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், பழி தீர் காதலர் சென்ற நாட்டே.  

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் 

128. குறிஞ்சி
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே; கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே யாமம் கொள வரின் கனைஇ, காமம் கடலினும் உரைஇ, கரை பொழியும்மே. எவன்கொல் வாழி, தோழி! மயங்கி 5இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு, இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில் குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி, கான நாடன் வரூஉம், யானைக் 10கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி, மாரி வானம் தலைஇ நீர் வார்பு, இட்டு அருங் கண்ண படுகுழி இயவின், இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர் தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? 15

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர் 

129. பாலை
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி, கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், 5கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப் பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி, போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் 10கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப, கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும் அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல் திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், 15குவளை உண்கண், இவளொடு செலற்கு' என நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - குடவாயில் கீரத்தனார் 

130. நெய்தல்
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை 5எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன் வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம் கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் 10நல் தேர் வழுதி கொற்கை முன் துறை வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் போது புறங்கொடுத்த உண்கண் மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.  

கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார் 

131. பாலை
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என 5வீளை அம்பின் விழுத் தொடை மழவர் நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் 10பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் வெருவரு தகுந கானம், 'நம்மொடு வருக' என்னுதிஆயின், வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. 15

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் 

132. குறிஞ்சி
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, வால் நிணப் புகவின், கானவர் தங்கை 5அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை 10வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை இருங் கவுட் கடாஅம் கனவும், பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.  

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார் 

133. பாலை
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, கார் தலைமணந்த பைம் புதற் புறவின், 5வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று 10வான் கொள் தூவல் வளி தர உண்கும்; எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் 15மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.  

'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் 

134. முல்லை
வானம் வாய்ப்பக் கவினி, கானம் கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, செம் புற மூதாய் பரத்தலின், நன் பல முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் 5செய்கை அன்ன செந் நிலப் புறவின்; வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த 10ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை கடுமான் தேர் ஒலி கேட்பின், நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.  

வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார் 

135. பாலை
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, 5பேதுற்றிசினே காதல்அம் தோழி! காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ, கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம் காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், 10வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை, ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போலக் கலங்கின்றுமாது, அவர்த் தௌந்த என் நெஞ்சே.  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர் 

136. மருதம்
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தௌ ஒளி அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, 5கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, 10பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, 15மழை பட்டன்ன மணல் மலி பந்தர், இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், 'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, 20பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென 25நாணினள் இறைஞ்சியோளே பேணி, பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.  

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார் 

137. பாலை
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் 5இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் 10தீ இல் அடுப்பின் அரங்கம் போல, பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும், தோளா முத்தின் தெண் கடற் பொருநன் திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும் 15தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.  

'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர் முதுகூத்தனார் 

138. குறிஞ்சி
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! குவளை உண்கண் தெண் பனி மல்க, வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, 5உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, 10கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் ஆடினர் ஆதல் நன்றோ? நீடு நின்னொடு தௌத்த நல் மலை நாடன் குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, 15நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி நல் நிறம் மருளும் அரு விடர் இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. 20

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார் 

139. பாலை
துஞ்சுவது போல இருளி, விண் பக இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ, நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு, ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்; 5ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை, புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை, தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை; 10வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல், காமர் துணையொடு ஏமுற வதிய; அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் பரப்பியவைபோற் பாஅய், பல உடன்  நீர் வார் மருங்கின் ஈரணி திகழ; 15இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்! யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர் கருவிக் கார்இடி இரீஇய பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே.  

பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார் 

140. நெய்தல்
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, என்றூழ் விடர குன்றம் போகும் கதழ் கோல் உமணர் காதல் மடமகள் 5சில் கோல் எல் வளை தௌர்ப்ப வீசி, 'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச் சேரி விலைமாறு கூறலின், மனைய விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, 10இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு எவ்வம் தீர வாங்கும் தந்தை கை பூண் பகட்டின் வருந்தி, வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. 15

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார் 

141. பாலை
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, 5மழை கால்நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10விழவு உடன் அயர, வருகதில் அம்ம! துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, 15கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; 20நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை  நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.  

'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் 

142. குறிஞ்சி
இலமலர் அன்ன அம் செந் நாவின் புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற 5குறையோர் கொள்கலம் போல, நன்றும் உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற கறை அடி யானை நன்னன் பாழி, ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் 10கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, 15நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, 20உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; 25வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.  

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 

143. பாலை
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக் காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின், நீடு சினை வறிய ஆக, ஒல்லென வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும் தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, 5முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச் சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும் 'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய! சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே, வசை இல் வெம் போர் வானவன் மறவன் 10நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும், பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன் மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த தண் கமழ் நீலம் போல, 15கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.  

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார் 

144. முல்லை
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன; அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், 5அருள் கண்மாறலோ மாறுக அந்தில் அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச் சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, துனி தீர் முயக்கம் பெற்றோள் போல 10உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறை, போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, 15மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி வான மீனின் வயின் வயின் இமைப்ப, அமர் ஓர்த்து, அட்ட செல்வம் தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.  

வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் 

145. பாலை
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், வற்றல் மரத்த பொற் தலை ஓதி வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு 5ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு வாள்வரி பொருத புண் கூர் யானை புகர் சிதை முகத்த குருதி வார, உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் 'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் 10அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் குஞ்சரக் குரல குருகோடு ஆலும், 15துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், 20'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!  

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் 

146. மருதம்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, படப்பை நண்ணி, பழனத்து அல்கும் கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், 5ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை யார்கொல் அளியள்தானே எம் போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் 10கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, ஆயமும் அயலும் மருள, தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?  

வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் 

147. பாலை
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, 5பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் நெறி படு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, 10உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், தோளும் தொல் கவின் தொலைய, நாளும் பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே!  

செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அவ்வையார் 

148. குறிஞ்சி
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; 5சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, காணிய செல்லாக் கூகை நாணி, கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை 10பெரிதால் அம்ம இவட்கே; அதனால் மாலை, வருதல் வேண்டும் சோலை முளை மேய் பெருங் களிறு வழங்கும் மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.  

பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் 

149. பாலை
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் அத்த நீள் இடைப் போகி, நன்றும் 5அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினை மாண் நன் கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 10வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, 15ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.  

தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் 

150. நெய்தல்
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; 'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, 5அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, மாலை மணி இதழ் கூம்ப, காலைக் 10கள் நாறு காவியொடு தண்ணென மலரும் கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; 'வாரார்கொல்?' எனப் பருவரும் தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!  

பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.