|
|||||
நீர்ப்பாசன மேலாண்மைக்கென பொற்கொல்லர்களின் பங்களிப்பைச் சொல்லும் ,புதுக்கோட்டை மாவட்டம் குமிழிக்கால் கல்வெட்டு |
|||||
நீர் பாசன மேலாண்மைக்கென பொற்கொல்லர்களின் பங்களிப்பைச் சொல்லும் புதுக்கோட்டை மாவட்டம் குமிழிக்கால் கல்வெட்டு பாசனத்தின் போது கண்மாயில் தண்ணீரை திறப்பதற்கும், நிறுத்துவதற்கும் குமிழி எனப்படும் முறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு அருகில் உயரமான குமிழிக்கால்கள் நடப்பட்டு இருக்கும். புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம், மேலூர் பாசன கண்மாயில் உள்ள குமழிக்காலில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதைக் கண்ட வேளாண் பொறியாளர் நாராயணமூர்த்தி புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக ஆய்வாளர் மணிகண்டன் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை ஆய்வு செய்து மணிகண்டன் அதில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிவித்துள்ளார். நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் பல மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிகமான குமிழிக் கல்வெட்டுகள் புதுக்கோட்டை,திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 42 குமிழிக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர் இக் கல்வெட்டுகள் தமிழரின் நீர்ப்பாசன மேலாண்மையில் அவர்களது நுட்பம் மற்றும் நீர்ப்பங்கீட்டிற்கு அவர்கள் பின்பற்றிய நடைமுறைகளை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன என்று கூறியுள்ளார். புதுக்கோட்டையில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குமிழிக்கல்வெட்டில் "ஸ்வஸ்தி சிறுவாயி ஞாட்டு மேலூர் தட்டான் திறமன் திருவிளப்படிக்கு நட்டுவித்த பெருமடைக்கால்"என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவாயில் நாட்டு மேலூர் தட்டான் (பொற்கொல்லரைக் குறிக்கும் சொல்) திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படியாகபெருமடைக்கால் நட்டுவித்தது என்பது இதன் பொருளாகும். பொற்கொல்லர் போன்றோரின் பங்களிப்பு நீர்ப்பாசனத்திற்கு இருந்துள்ளது என்பது இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தியின் மூலம் அறிய முடிகிறது. பயிர்த்தொழிலே உயிருக்கு அடிப்படையானது என்பதை உணர்ந்து, தமிழர் இணைந்து செயல்பட்டு இருப்பதையும் அறிய முடிகிறது. |
|||||
by R.Gnanajothi on 11 Aug 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|