LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நீர்ப்பாசன மேலாண்மைக்கென பொற்கொல்லர்களின் பங்களிப்பைச் சொல்லும் ,புதுக்கோட்டை மாவட்டம் குமிழிக்கால் கல்வெட்டு

 நீர் பாசன மேலாண்மைக்கென பொற்கொல்லர்களின் பங்களிப்பைச் சொல்லும் புதுக்கோட்டை மாவட்டம் குமிழிக்கால் கல்வெட்டு

பாசனத்தின் போது கண்மாயில் தண்ணீரை திறப்பதற்கும், நிறுத்துவதற்கும் குமிழி எனப்படும் முறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு அருகில் உயரமான குமிழிக்கால்கள் நடப்பட்டு இருக்கும்.

புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம், மேலூர் பாசன கண்மாயில் உள்ள குமழிக்காலில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதைக் கண்ட வேளாண் பொறியாளர் நாராயணமூர்த்தி புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக ஆய்வாளர் மணிகண்டன் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை ஆய்வு செய்து மணிகண்டன் அதில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் பல மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிகமான குமிழிக் கல்வெட்டுகள் புதுக்கோட்டை,திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

42 குமிழிக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர் இக் கல்வெட்டுகள் தமிழரின் நீர்ப்பாசன மேலாண்மையில் அவர்களது நுட்பம் மற்றும் நீர்ப்பங்கீட்டிற்கு அவர்கள் பின்பற்றிய நடைமுறைகளை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குமிழிக்கல்வெட்டில் "ஸ்வஸ்தி சிறுவாயி ஞாட்டு மேலூர் தட்டான் திறமன் திருவிளப்படிக்கு நட்டுவித்த பெருமடைக்கால்"என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிறுவாயில் நாட்டு மேலூர் தட்டான்  (பொற்கொல்லரைக் குறிக்கும் சொல்) திறமன்  என்பவர் இறைவனின் எண்ணப்படியாகபெருமடைக்கால் நட்டுவித்தது என்பது இதன் பொருளாகும்.

பொற்கொல்லர் போன்றோரின் பங்களிப்பு நீர்ப்பாசனத்திற்கு இருந்துள்ளது என்பது இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தியின்  மூலம் அறிய முடிகிறது.

பயிர்த்தொழிலே உயிருக்கு அடிப்படையானது என்பதை உணர்ந்து, தமிழர் இணைந்து செயல்பட்டு இருப்பதையும் அறிய முடிகிறது.

by R.Gnanajothi   on 11 Aug 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.