|
|||||
மிகச் சிறந்த கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் |
|||||
ஐராவதம் மகாதேவன் (1930 - 2018)
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதன் மகாதேவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது 1987 முதல் 1991 வரை நான்கு வருடங்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி பத்திரிகையுலக நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், இலக்கிய, அறிவியல் உலகத்துக்கு அரிய கருத்துகளையும் விதைத்தவர்.
இவரது வயது 88. இவரது இழப்பு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரது ஆன்மா இறையருளில் கலக்க வலைத்தமிழ் குழு பிரார்த்திக்கிறது.
திரு.தெய்வ சுந்தரம் நயினார் முகநூளில் எழுதியுள்ள அஞ்சலி குறிப்பு: இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகள் வெறும் ஓவியமா அல்லது ஒரு இயற்கைமொழியின் எழுத்துகளா என்ற ஒரு வினாவிற்கு. இயற்கைமொழியின் எழுத்துகளே என்று நிறுவியுள்ளனர் அறிவியல் துறைகளைச் சேர்ந்தவர்கள். உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்விதழில் அது வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் உருவாக்கத்தில் பங்குபெற்ற அயல்நாட்டு அறிஞர்களுடன் இணைந்த ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ஐராவதம் அவர்கள். இன்று வளர்ந்தோங்கி நிற்கும் கணினிமொழியியல் (Computational Linguistics) அடிப்படையில் இக்கருத்தை அவர்கள் நிறுவியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொழியியல், புள்ளியியல் , கணினிமொழியியல் ஆகியவற்றின் துணைகொண்டு மொழி ஆராய்ச்சியில் இந்த ஆய்வாளர்கள் இக்கருத்தை முன்வைத்துள்ளனர். ( திரு.மணி மணிவண்ணன் தனது குறிப்பில் அதுவரை அந்தக் கல்வெட்டுகள் வட இந்தியா விலிருந்து வந்த பௌத்த துறவிகளால் பிராமியிலும், பிராகிருத மொழியிலும் எழுதப்பட்டவை, அவற்றுக்கும் தமிழக வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றுதான் வரலாற்றாசிரியர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். அதை மறுத்து, குகைக் கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துகளான ழ, ள, ற, ன போன்ற எழுத்துகள் இருப்பதையும், தமிழ்ச் சொற்கள் இருப்பதையும், தமிழ் இலக்கணம் இருப்பதையும் சுட்டிக்காட்டி முதன்முதலாக நிரூபித்தார். அவரது கருத்து அறிஞர்களிடையே உடனடித் தாக்கம் எதையும் நிகழ்த்தவில்லை. அடுத்து தி.நா.சுப்பிரமணியம் 1938-ல் வெளியிட்ட ‘பண்டைத் தமிழ்க் கல்வெட்டுகள்’ என்ற நூலில் ஆந்திர மாநிலம், பட்டிப்புரோலுவில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளோடு ஒப்பிட்டுத் தமிழ்க் கல்வெட்டுகளைப் படிக்க ஒரு புதிய முறையைச் சுட்டிக்காட்டினார். இந்த இரு ஆளுமைகளின் பங்களிப்புகளுக்குப் பின்னரும்கூட கல்வெட்டியல் தொய்வடைந்துதான் கிடந்தது. அதைப் போக்கும் நோக்கில்தான் ஐராவதம் மகாதேவனை கே.வி.சுப்ரமணிய அய்யர், தமிழ் பிராமி ஆராய்ச்சியை நோக்கித் திசை திருப்பிவிட்டார் போலும். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மொழி உணர்வில் தமிழகம் தகித்துக்கொண்டிருந்தபோதுதான் சங்க காலத்தைச் சேர்ந்த புகளூர் கல்வெட்டுகளைக் கண்டறிந்து ஐராவதம் மகாதேவன் வெளிப்படுத்தினார். அதுவரை சங்க காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. திரு.ரவிக்குமார் தனது அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிடும்போது:
|
|||||
by Swathi on 30 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|