LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

ஐங்குறுநூறு-3

 

11. தாய்க்கு உரைத்த பத்து.
அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்
ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே. 101
அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்
நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது
துன்புறு துயரம் நீங்க
இன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே. 102
அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்
இவட்குஅமைந் தனெனால் தானே
தனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே. 103
அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப்
பலர்மடி பொழுதின் நலம்மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வன தூரே. 104
அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தணம் த்றவன் வந்தெனப்
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நூதலே. 105
அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்
தன்கடல் வளையினும் இலங்கும்இவள்
அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. 106
அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து
தண்கடல் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே. 107
அன்னை வாழிவேண் டன்னை கழிய
முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தனன் ஆயின்
எவன்கொல் மற்றவன் நயந்த தோளே. 108
அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்
நீர்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எந்தோள் துறந்த காலை எவன்கொல்
பன்னாள் வரும்அவன் அளித்த போழ்தே. 109
அன்னை வாழிவேண் டன்னை புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே இவ்வூர்
பிறதொன் றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே. 110
12. தோழிக்கு உரைத்த பத்து.
அம்ம வாழி தோழி பாணன்
சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே. 111
அம்ம வாழி தோழி பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே
மற்ந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே. 112
அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டென மொழிய என்னை
அதுகேட் டன்னாய் என்றனள் அன்னை
பைபய வெம்மை என்றனென் யானே. 113
அம்ம வாழி தோழி கொண்கன்
நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடலம் பெண்ணை அவனுடை நாட்டே. 114
அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்துநின் றோனே. 115
அம்ம வாழி தோழி நாம் அழ
நீல இருங்கழி நீலம் கூம்பு
மாலைவந் தன்று மன்ற
காலை யன்ன காலைமுந் துறுத்தே. 116
அம்ம வாழி தோழி நலனே
இன்ன தாகுதல் கொடிதே புன்னை
யணிமலர் துறைதொறும் வரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே. 117
அம்ம வாழி தோழி யான் இன்று
அறன்இ லாளன் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குறவன் சென்றனென்
பின்நினைந்து இரங்கிப் பெயர்தந் தேனே. 118
அம்ம வாழி தோழி நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி
அன்பிலன் மன்ற பெரிதே
மென்புலக் கொண்கன் வாரா தோனே. 119
அம்ம வாழி தோழி நலமிக
நல்ல ஆயின அளியமெல் தோளே
மல்லல் இருங்கழி நீரறல்விரியும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே. 120
13. கிழவற்கு உரைத்த பத்து
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
முண்டகக் கோதை நனையத்
தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே. 121
கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினைவு வோளே. 122
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே. 123
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற் பாவை வெளவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே. 124
கண்டிகும் அல்லமோ கொண்கநின்
தெண்டிரை பாவை வெளவ
ஊண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. 125
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
யுண்கண் வண்டினம் மொய்ப்பத்
தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே. 126
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
தும்பை மாலை இளமுலை
நுண்பூண் ஆகம் விலங்கு வோளே. 127
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
உண்ணாப் பாவையை ஊட்டு வோளே. 128
கிடைக்காத பாடல் 129.
கிடைக்காத பாடல் 130.
14. பாணற்கு உரைத்த பத்து
நண்றே பாண கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ்வூர்க்
கல்லென் கௌவை எழாஅக் காலே. 131
அம்ம வாழி பாண புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்
அலரா கின்றுஅவர் அருளு மாறே. 132
யானெவன் செய்கோ பாண ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனஎன் புரிவளைத் தோளே. 133
காண்மதி பாண இருங்கழிப் பாய்பரி
நெடுந்தேர்க் கொண்க னோடு
தான்வந் தன்றுஎன் மாமைக் கவினே. 134
பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே. 135
நாணிலை மன்ற பாண நீயே
கோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல்உகுப் போயே. 136
நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்
திண்தேர்க் கொண்கனை நய்ந்தோர்
பண்டைத் தந்நலம் பெறுபவோ. 137
பண்பிலை மன்ற பாண இவ்வூர்
அன்பில கடிய கழறி
மென்புலக் கொண்கனைத் தாரா தோயே. 138
அம்ம வாழி கொண்க எம்வயின்
மாண்நலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலம்சிதைக் கும்மே. 139
காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
விறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே. 140
15. ஞாழற் பத்து
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே. 141
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்
புள்இறை கூரும் துறைவனை
உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே. 142
எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை
இனிய செய்த நின்றுபின்
முனிவு செய்தஇவள் தடமெல் தோளே. 143
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குரு உறங்கும் துறைவற்கு
இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. 144
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன் இனியே. 145
எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்றஎன் மாமைக் கவினே. 146
எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒள்தழை அயரும் துறைவன்
தண்தழை விலையென நல்கினன் நாடே. 147
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீஇனிது கமழும் துறைவனை
நீயினிது முயங்குதி காத லோயே. 148
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு
அணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ. 149
எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே. 150

11. தாய்க்கு உரைத்த பத்து.
அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபுநெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்பூப்போல் உண்கண் மரீஇயநோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே. 101
அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாதுதுன்புறு துயரம் நீங்கஇன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே. 102
அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடுஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்இவட்குஅமைந் தனெனால் தானேதனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே. 103
அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப்பலர்மடி பொழுதின் நலம்மிகச் சாஅய்நள்ளென வந்த இயல்தேர்ச்செல்வக் கொண்கன் செல்வன தூரே. 104
அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்தணம் த்றவன் வந்தெனப்பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நூதலே. 105
அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்தன்கடல் வளையினும் இலங்கும்இவள்அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. 106
அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழிசுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்துதண்கடல் படுதிரை கேட்டொறும்துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே. 107
அன்னை வாழிவேண் டன்னை கழியமுண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்எந்தோள் துறந்தனன் ஆயின்எவன்கொல் மற்றவன் நயந்த தோளே. 108
அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்நீர்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்எந்தோள் துறந்த காலை எவன்கொல்பன்னாள் வரும்அவன் அளித்த போழ்தே. 109
அன்னை வாழிவேண் டன்னை புன்னைபொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனைஎன்னை என்றும் யாமே இவ்வூர்பிறதொன் றாகக் கூறும்ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே. 110

12. தோழிக்கு உரைத்த பத்து.
அம்ம வாழி தோழி பாணன்சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச்சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மைபிரிந்தும் வாழ்துமோ நாமேஅருந்தவம் முயறல் ஆற்றா தேமே. 111
அம்ம வாழி தோழி பாசிலைச்செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்தான்வரக் காண்குவம் நாமேமற்ந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே. 112
அம்ம வாழி தோழி நென்னல்ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்குஊரார் பெண்டென மொழிய என்னைஅதுகேட் டன்னாய் என்றனள் அன்னைபைபய வெம்மை என்றனென் யானே. 113
அம்ம வாழி தோழி கொண்கன்நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோகடலின் நாரை இரற்றும்மடலம் பெண்ணை அவனுடை நாட்டே. 114
அம்ம வாழி தோழி பன்மாண்நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடியதண்ணந் துறைவன் மறைஇஅன்னை அருங்கடி வந்துநின் றோனே. 115
அம்ம வாழி தோழி நாம் அழநீல இருங்கழி நீலம் கூம்புமாலைவந் தன்று மன்றகாலை யன்ன காலைமுந் துறுத்தே. 116
அம்ம வாழி தோழி நலனேஇன்ன தாகுதல் கொடிதே புன்னையணிமலர் துறைதொறும் வரிக்கும்மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே. 117
அம்ம வாழி தோழி யான் இன்றுஅறன்இ லாளன் கண்ட பொழுதில்சினவுவென் தகைக்குறவன் சென்றனென்பின்நினைந்து இரங்கிப் பெயர்தந் தேனே. 118
அம்ம வாழி தோழி நன்றும்எய்யா மையின் ஏதில பற்றிஅன்பிலன் மன்ற பெரிதேமென்புலக் கொண்கன் வாரா தோனே. 119
அம்ம வாழி தோழி நலமிகநல்ல ஆயின அளியமெல் தோளேமல்லல் இருங்கழி நீரறல்விரியும்மெல்லம் புலம்பன் வந்த மாறே. 120

13. கிழவற்கு உரைத்த பத்து
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளேமுண்டகக் கோதை நனையத்தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே. 121
கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளேஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தெனவெள்ளாங் குருகை வினைவு வோளே. 122
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளேஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே. 123
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளேவண்டற் பாவை வெளவலின்நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே. 124
கண்டிகும் அல்லமோ கொண்கநின்தெண்டிரை பாவை வெளவஊண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. 125
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளேயுண்கண் வண்டினம் மொய்ப்பத்தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே. 126
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளேதும்பை மாலை இளமுலைநுண்பூண் ஆகம் விலங்கு வோளே. 127
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளேஉறாஅ வறுமுலை மடாஅஉண்ணாப் பாவையை ஊட்டு வோளே. 128
கிடைக்காத பாடல் 129.
கிடைக்காத பாடல் 130.

14. பாணற்கு உரைத்த பத்து
நண்றே பாண கொண்கனது நட்பேதில்லை வேலி இவ்வூர்க்கல்லென் கௌவை எழாஅக் காலே. 131
அம்ம வாழி பாண புன்னைஅரும்புமலி கானல் இவ்வூர்அலரா கின்றுஅவர் அருளு மாறே. 132
யானெவன் செய்கோ பாண ஆனாதுமெல்லம் புலம்பன் பிரிந்தெனப்புல்லென் றனஎன் புரிவளைத் தோளே. 133
காண்மதி பாண இருங்கழிப் பாய்பரிநெடுந்தேர்க் கொண்க னோடுதான்வந் தன்றுஎன் மாமைக் கவினே. 134
பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்ஐதுஅமைந்து அகன்ற அல்குல்நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே. 135
நாணிலை மன்ற பாண நீயேகோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்தகானலம் துறைவற்குச் சொல்உகுப் போயே. 136
நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்திண்தேர்க் கொண்கனை நய்ந்தோர்பண்டைத் தந்நலம் பெறுபவோ. 137
பண்பிலை மன்ற பாண இவ்வூர்அன்பில கடிய கழறிமென்புலக் கொண்கனைத் தாரா தோயே. 138
அம்ம வாழி கொண்க எம்வயின்மாண்நலம் மருட்டும் நின்னினும்பாணன் நல்லோர் நலம்சிதைக் கும்மே. 139
காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகைதுறைகெழு கொண்கன் பிரிந்தெனவிறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே. 140

15. ஞாழற் பத்து
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்துவலைத் தண்துளி வீசிப்பயலை செய்தன பனிபடு துறையே. 141
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்புள்இறை கூரும் துறைவனைஉள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே. 142
எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறைஇனிய செய்த நின்றுபின்முனிவு செய்தஇவள் தடமெல் தோளே. 143
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்தனிக்குரு உறங்கும் துறைவற்குஇனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. 144
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினைஓதம் வாங்கும் துறைவன்மாயோள் பசலை நீக்கினன் இனியே. 145
எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்நறிய கமழும் துறைவற்குஇனிய மன்றஎன் மாமைக் கவினே. 146
எக்கர் ஞாழல் மலரின் மகளிர்ஒள்தழை அயரும் துறைவன்தண்தழை விலையென நல்கினன் நாடே. 147
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினைவீஇனிது கமழும் துறைவனைநீயினிது முயங்குதி காத லோயே. 148
எக்கர் ஞாழல் பூவின் அன்னசுணங்குவளர் இளமுலை மடந்தைக்குஅணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ. 149
எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்புணரி திளைக்கும் துறைவன்புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே. 150

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.