LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

ஐங்குறுநூறு-4

 

16. வெள்ளங் குருகுப் பத்து
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப நக்க கண்போல் நெய்தல்
கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே. 151
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கையறுபு இரற்றும் கானலம் புலம்பம்
துரைவன் வரையும் என்ப
அறவன் போலும் அருளுமார் அதுவே. 152
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவுமணல்
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே. 153
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானற் சேக்கும் துறைவனோடு
யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே. 154
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடுபெயரும் துறைவதற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே. 155
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெள்கழிப் பரக்கும் துரைவன்
எனக்கோ காதலன் அனைக்கோ வேறே. 156
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன்எம் காத லோனே. 157
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந் துறைவன் கண்டிக்கும்
அம்மா மேனிஎம் தோழியது துயரே. 158
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப
நின்ஒன்று இரக்குவன் அல்லேன்
தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே. 159
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ
பண்டையின் மிகப்பெரிது இனைஇ
முயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே. 160
17. சிறுவெண் காக்கைப் பத்து.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்தநுதல் அழியச் சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்தே. 161
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே. 162
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்துஎன்
இறையேர் முன்கை நீக்கிய வளையே. 163
இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது அலர்பயந் தன்றே. 164
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
ஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல்என்
இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே. 165
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி
நல்ல வாயின நல்லோள் கண்ணே. 166
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும் தொல்கே என்னே. 167
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி அகமனை ஈனும்
தண்ணந் தூறைவன் நல்கி
ஒள்நுதல் அரிவை பாலா ரும்மே. 168
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை யறிந்தும்
என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே. 169
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்
நல்லன் என்றி யாயின்
பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ. 170
18. தொண்டிப் பத்து.
திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே. 171
ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல்ஒலித் திரையென
இரவி னானும் துயிலறி யேனே. 172
இரவி னானும் இந்துயில் அறியாது
அரவுறு துயரம் எய்துப தொண்டித்
தண்நறு நெய்தல் நாறும்
பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே. 173
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழை
பொங்கரி பரந்த உண்கண்
அம்கலில் மேனி அசைஇய எமக்கே. 174
எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்
நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியா மடந்தை
தொண்டி யன்னநின் பண்புல கொண்டே. 175
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
கொய்தளிர் மேனி கூறுமதி தவறே. 176
தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற
இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு
முண்டக நறுமலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள்உற் றோரே. 177
தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி யன்ன
என்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே. 178
நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப
அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்
இன்னொலித் தொண்டி அற்றே
நின்னலது இல்லா இவள்சிறு நுதவே. 179
சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்
துரைகெழு தொண்டி அன்னஇவள் நலனே. 180
19. நெய்தற் பத்து.
நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண்மணல் குரவை நிறூஉந்
துறைகெழு கொண்கன் நல்கி
உறைவுஇனிது அம்மஇவ் அழுங்கள் ஊரே. 181
நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
அருந்திறல் கடவுள் அல்லன்
பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே. 182
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே. 183
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுநுண் குருகுஇளங் கானல் அல்கும்
கடல்அணிந் தன்றுஅவர் ஊரே
கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே. 184
அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை
இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்புஆர்த் தன்ன தீங்கிள வியனே. 185
நாரை நல்லினம் கடுப்ப மகளிர்
நீர்வார் கூந்தல் உளரும் துறைவ
பொங்குழி நெய்தல் உறைப்ப இத்துறை
பல்கால் வரூஉம் தேரெனச்
செல்வா தீமோ என்றனள் யாயே. 186
நொதும லாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக் குற்ற சிலபூ வினரே. 187
இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும்நெய்தல் போலத்
தகைபெரி துடை காதலி கண்ணே. 188
புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியில் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென
நல்லன வாயின தோழியென் கண்ணே. 189
தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்றஎம்
பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே. 190
20. வளைப் பத்து.
கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்
கழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல்
கானல் ஞாழற் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள்என்
நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே. 191
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்
பாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தொழிஎன் வளையே. 192
வலம்புரியுழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துரைகெழு கொண்கநீ தந்த
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே. 193
கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை
ஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க
நன்னுதல் இன்றுமால் செய்தெனக்
கொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே. 194
வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடலரும் துயரம் நல்கிப்
படலின் பாயல் நல்கி யோளெ. 195
கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தென்கழி சேயிறாப் படூஉம்
தன்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ. 196
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. 197
வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை
இளையர் ஆடும் தளைஅவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே. 198
கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே 199
இலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே
விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர் பசலையை நகுக நாமே. 200

16. வெள்ளங் குருகுப் பத்து
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைமிதிப்ப நக்க கண்போல் நெய்தல்கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்குநெக்க நெஞ்சம் நேர்கல் லேனே. 151
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைகையறுபு இரற்றும் கானலம் புலம்பம்துரைவன் வரையும் என்பஅறவன் போலும் அருளுமார் அதுவே. 152
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைஉளர ஒழிந்த தூவி குலவுமணல்போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மைநன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே. 153
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைகானற் சேக்கும் துறைவனோடுயானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே. 154
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைபதைப்பத் ததைந்த நெய்தல் கழியஓதமொடுபெயரும் துறைவதற்குப்பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே. 155
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைபதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவிதெள்கழிப் பரக்கும் துரைவன்எனக்கோ காதலன் அனைக்கோ வேறே. 156
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைகாலை யிருந்து மாலைச் சேக்கும்தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்தான்வந் தனன்எம் காத லோனே. 157
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைகானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்தண்ணந் துறைவன் கண்டிக்கும்அம்மா மேனிஎம் தோழியது துயரே. 158
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைபசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்பநின்ஒன்று இரக்குவன் அல்லேன்தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே. 159
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைநொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவபண்டையின் மிகப்பெரிது இனைஇமுயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே. 160

17. சிறுவெண் காக்கைப் பத்து.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைகருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்பயந்தநுதல் அழியச் சாஅய்நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்தே. 161
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைநீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டுபூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்துறைவன் சொல்லோ பிறவா யினவே. 162
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஇருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்துறைவன் துறந்தெனத் துறந்துஎன்இறையேர் முன்கை நீக்கிய வளையே. 163
இருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஇருங்கழி மருங்கின் அயிரை ஆரும்தண்ணந் துறைவன் தகுதிநம்மோடு அமையாது அலர்பயந் தன்றே. 164
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்துறைவன் சொல்லிய சொல்என்இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே. 165
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைவரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம்மெல்லம் புலம்பன் தேறிநல்ல வாயின நல்லோள் கண்ணே. 166
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஇருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்நல்குவன் போலக் கூறிநல்கான் ஆயினும் தொல்கே என்னே. 167
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைதுறைபடி யம்பி அகமனை ஈனும்தண்ணந் தூறைவன் நல்கிஒள்நுதல் அரிவை பாலா ரும்மே. 168
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைபொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்நெஞ்சத்து உண்மை யறிந்தும்என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே. 169
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஇருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்நல்லன் என்றி யாயின்பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ. 170

18. தொண்டிப் பத்து.
திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலதுமுழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்தொண்டி அன்ன பணைத்தோள்ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே. 171
ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சேவண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்உரவுக் கடல்ஒலித் திரையெனஇரவி னானும் துயிலறி யேனே. 172
இரவி னானும் இந்துயில் அறியாதுஅரவுறு துயரம் எய்துப தொண்டித்தண்நறு நெய்தல் நாறும்பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே. 173
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்னமணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழைபொங்கரி பரந்த உண்கண்அம்கலில் மேனி அசைஇய எமக்கே. 174
எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலிவந்திசின் வாழியா மடந்தைதொண்டி யன்னநின் பண்புல கொண்டே. 175
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடிஐதுஅமைந்து அகன்ற அல்குல்கொய்தளிர் மேனி கூறுமதி தவறே. 176
தவறிலர் ஆயினும் பனிப்ப மன்றஇவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டுமுண்டக நறுமலர் கமழும்தொண்டி அன்னோள் தோள்உற் றோரே. 177
தோளும் கூந்தலும் பலபா ராட்டிவாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்குட்டுவன் தொண்டி யன்னஎன்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே. 178
நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்பஅலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்இன்னொலித் தொண்டி அற்றேநின்னலது இல்லா இவள்சிறு நுதவே. 179
சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்பறைதபு முதுகுருகு இருக்கும்துரைகெழு தொண்டி அன்னஇவள் நலனே. 180

19. நெய்தற் பத்து.
நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள்பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்குப்பை வெண்மணல் குரவை நிறூஉந்துறைகெழு கொண்கன் நல்கிஉறைவுஇனிது அம்மஇவ் அழுங்கள் ஊரே. 181
நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்அருந்திறல் கடவுள் அல்லன்பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே. 182
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்குறும்பொறை நாடன் நல்வய லூரன்தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்கடும்பகல் வருதி கையறு மாலைகொடுங்கழி நெய்தலும் கூம்பக்காலை வரினும் களைஞரோ இலரே. 183
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கிமீனுநுண் குருகுஇளங் கானல் அல்கும்கடல்அணிந் தன்றுஅவர் ஊரேகடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே. 184
அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறைஇலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்அரம்போழ் அவ்வளைக் குறுமகள்நரம்புஆர்த் தன்ன தீங்கிள வியனே. 185
நாரை நல்லினம் கடுப்ப மகளிர்நீர்வார் கூந்தல் உளரும் துறைவபொங்குழி நெய்தல் உறைப்ப இத்துறைபல்கால் வரூஉம் தேரெனச்செல்வா தீமோ என்றனள் யாயே. 186
நொதும லாளர் கொள்ளார் இவையேஎம்மொடு வந்து கடலாடு மகளிரும்நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்உடலகம் கொள்வோர் இன்மையின்தொடலைக் குற்ற சிலபூ வினரே. 187
இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும்கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறைவைகறை மலரும்நெய்தல் போலத்தகைபெரி துடை காதலி கண்ணே. 188
புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்பொன்படு மணியில் பொற்பத் தோன்றும்மெல்லம் புலம்பன் வந்தெனநல்லன வாயின தோழியென் கண்ணே. 189
தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூவெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்மெல்லம் புலம்பன் மன்றஎம்பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே. 190

20. வளைப் பத்து.
கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்கழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல்கானல் ஞாழற் கவின்பெறு தழையள்வரையர மகளிரின் அரியள்என்நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே. 191
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்பாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும்துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தனவீங்கின மாதோ தொழிஎன் வளையே. 192
வலம்புரியுழுத வார்மணல் அடைகரைஇலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்துரைகெழு கொண்கநீ தந்தஅறைபுனல் வால்வளை நல்லவோ தாமே. 193
கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளைஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்கநன்னுதல் இன்றுமால் செய்தெனக்கொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே. 194
வளைபடு முத்தம் பரதவர் பகரும்கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்கெடலரும் துயரம் நல்கிப்படலின் பாயல் நல்கி யோளெ. 195
கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்தென்கழி சேயிறாப் படூஉம்தன்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ. 196
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டிமுகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனேபுலம்புகொள் மாலை மறையநலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. 197
வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகைஇளையர் ஆடும் தளைஅவிழ் கானல்குறுந்துறை வினவி நின்றநெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே. 198
கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்வானுயர் நெடுமணல் ஏறி ஆனாதுகாண்கம் வம்மோ தோழிசெறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே 199
இலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப்பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியேவிலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதிநலங்கவர் பசலையை நகுக நாமே. 200

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.