LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

ஐங்குறுநூறு-7

 

31. செலவு அழுங்குவித்த பத்து
மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை யிறக்குவை யாயின்
மைவரை நாட வருந்துவள் பெரிதே. 301
அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே
பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்
செல்லாய் அயினோ நன்றே
மல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே. 302
புதுக்கலத் தன்ன கனிய ஆலம்
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்
தண்ணிய இனிய வாக
எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே. 303
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன்நீர்ப் பத்தல் யானை வெளவும்
கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்
புயல்நெடுங் கூந்தல் புலம்பும் 
வயமான் தோன்றல் வல்லா தீமே. 304
களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது
பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச்
சுடர்தொடிக் குறுமகள் இனைய
எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே. 305
வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்
பல்கழ் அல்குல் அவ்வரி வாடக்
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவொலி கூந்தல் மாஅ யோளே. 306
ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ்சுரம் செலவயர்ந் தனையே
நன்றில் கொண்கநின் பொருளே
பாவை யன்னநின் துணைபிரிந்து வருமே. 307
பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்
கால் எறுழ் ஒள்வி தாஅய
முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே. 308
வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவுஅயர்ந் தனையால் நீயே நன்று
நின்னயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே. 309
பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்
இலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப்
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே. 310
32. செலவுப் பத்து
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்
காடுஇறந் தனரே காதலர்
நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே. 311
அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே
வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற அருவிக்
கோள்வல் என்னையை மறிந்த குன்றே. 312
தெறுவது அம்ம நும்மகள் விருப்பே
உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்ப்
பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க
நாடுஇடை விலங்கிய வைப்பின்
காடுஇறந் தனள்நம் காத லோனே 313
அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக்
கர்ங்கண் காக்கையொடு கழுகுவிசும்பு அகலச்
சிறுகண் யானை ஆள்வீழ்துத் திரித்ரும்
நீளிடை அருஞ்சுரம் என்பநம் 
தோளிடை முனிநர் சென்ற ஆறே. 314
பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்
பூசல் கேளார் சேயர் என்ப
விழைநெகிழ் செல்லல் உறீஇக்
கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே. 315
பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்
தேரகல் அல்குல் அவ்வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்குலைப்
புல்லரை ஓமை நீடிய
புலிவழங்கு அதர கானத் தானே. 316
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ர நெஞ்சம் நீடிய பொருளே. 317
ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய
வேய்மருள் பணைத்தோள் வில்லிலை நெகிழ
நசைநனி கொன்றோர் மன்ற இசைநிமிர்ந்து
ஓடெரி நடந்த வைப்பின்
கோடுயர் பிறங்கல் மலை இறந் தோரே. 318
கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்
மண்புரை பெருகிய மரம்முளி கானம்
இறந்தன ரோநம் காதலர்
மறந்தன ரோதில் மறவா நம்மே. 319
முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ
முழங்கல் அசைவளி எடுப்ப வானத்து
உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்
கவலை அருஞ்சுரம் போயினர்
தவலில் அருநோய் தலைதந் தோரே. 320
33. இடைச்சுரப் பத்து.
உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
அலறுதலை ஓமை அம்கவட் டேறிப்
புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்து
மொழிபெயர் பன்மலை இறப்பினும்
ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே. 321
நெடுங்கழை முனிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய வாயினை முன்னே இனியே
ஒண்ணுதல் அரிவையை யுள்ளுதொறும்
தண்ணிய வாயின சுரட்திடை யாறே. 322
வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்
கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்
வெஞ்சுரக் கவலை நீந்தி
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே. 323
எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச்
சிறிதுகண் படுப்பினும் காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர்
வேங்கை வென்ற சுணங்கின்
தம்பாய் கூந்தல் மாஅ யோளே. 324
வேணில் அரையத்து இலையொலி வெரீஇப்
போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும்
வெம்பலை அருஞ்சுரம் நலியாது
எம்வெம் காதலி பண்புதுணைப் பெற்றே. 325
அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாது
மடமான் அமபினை மறியொடு திரங்க
நீர்மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற சுரமே
இனிய மறையான் ஒழிந்தோள் பண்பே. 326
பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச்
சிறுகண் யானை நிலந்தொடல் செல்வா
வெயின்முளி சோலைய வேய்உயர் சுரனே
அன்ன ஆர்இடை யானும்
தண்மை செய்தஇத் தகையோன் பண்பே. 327
நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த்
தண்ணிய வாயினும் வெய்ய மன்ற
மடவரல் இந்துணை ஒழியக்
கடமுதிர் சோலைய காடிறத் தேற்கே. 328
ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை
வெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடு
மறுதரு வதுகொல் தானே செறிதொடி
கழிந்துகு நிலைய வாக
ஒழிந்தோள் கொண்டஎன் உரங்கெழு நெஞ்சே. 329
வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்தி
வந்தனம் ஆயினும் ஒழிகஇனிச் செலவே
அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்
கதிர்தெறு வஞ்சுரம் நினைக்கும்
அவிர்கொல் ஆய்தொடி உள்ளத்துப் படரே. 330
34. தலைவி இரங்கு பத்து.
அம்ம வாழி தோழி அவிழிணர்க்
கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூ
அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள
இனிய கம்ழும் வெற்பின்
இன்னா என்பஅவர் சென்ற ஆறே. 331
அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறநில மன்ற தாமே விறன்மிசைக்
குன்றுகெழு கானத்<ட பண்பின் மாக்கணம்
கொடிதே காதலிப் பிரிதல்
செல்லல் ஐய என்னா தவ்வே. 332
அம்ம வாழி தோழி யாவதும்
வல்லா கொல்லோ தாமே அவண
கல்லுடை நன்னாட்டுப் புள்ளீனப் பெர்ந்தோடு
யாஅம் துணைபுணர்ந்து உறைதும்
யாங்குப் பிந்துறைதி என்னா தவ்வே. 333
அம்ம வாழி தோழி சிறியிலை
நெல்லி நீடிய கல்வாய் கடத்திடைப்
பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
ப்ல்லிதல் உண்கண் அழப்பிர்ந் தோரே. 334
அம்ம வாழி தோழி நம்வயின்
நெய்தோ ரன்ன வெவிய எருவை
கற்புடை மருங்கில் கடுமுடை யார்க்கும்
கடுநனி கடிய என்ப
நீடி இவன் வருநர் சென்ற ஆறே. 335
அம்ம வாழி தோழி நம்வயின்
பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற
நின்றதில் பொருட்பிணி முற்றிய
என்றூழ் நீடிய சுரன்இறந் தோரே. 336
அம்ம வாழி தோழி நம் வயின்
மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே. 337
அம்ம வாழி தோழி சாரல்
இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம்
மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும்
பிரிவருங் காலையும் பிரிதல்
அரிதுவல் லுநர்நம் காத லோரே. 338
அம்ம வாழி தொழி சிறியிலைக்
குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல் காதலவர் சென்ற நாடே. 339
அம்ம வாழி தொழி காதலர்
உள்ளார் கொல்நாம் மருள்உற் றனம்கொல்
விட்டுச் சென்றனர் நம்மே
தட்டைத் சென்றனர் நம்மே
தட்டைத் தீயின் ஊரலர் எழவே. 340
35. இளவேனிற் பத்து.
அவரோ வாரார் தான்வந் தன்றே
குயிற்பெடை இன்குரல் அகவ
அயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே. 341
அவரோ வாரார் தான்வந் தன்றே
சுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே. 342
அவரோ வாரார் தான்வந் தன்றே
திணிநிலைக் கோங்கம் பயந்த
அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே. 343
அவரோ வாரார் தான்வந் தன்றே
எழில்தகை இஅள்முலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. 344
அவரோ வாரார் தான்வந் தன்றே
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்
மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. 345
அவரோ வாரார் தான்வந் தன்றே
அஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச்
செங்கண இருங்குயில் அறையும் பொழுதே. 346
அவரோ வாரார் தான்வந் தன்றே
எழில்தகை இளமுலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. 347
அவரோ வாரார் தான்வந் தன்றே
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்
மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. 348
அவரோ வாரார் தான்வந் தன்றே
பொரிகால் மாஞ்சினை புதைய
எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே. 349
அவரோ வாரார் தான்வந் தன்றே
வேம்பின் ஒண்பூ உறப்பத்
தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே. 350

31. செலவு அழுங்குவித்த பத்து
மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்அவ்வரை யிறக்குவை யாயின்மைவரை நாட வருந்துவள் பெரிதே. 301
அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தேபெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்செல்லாய் அயினோ நன்றேமல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே. 302
புதுக்கலத் தன்ன கனிய ஆலம்போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்தண்ணிய இனிய வாகஎம்மொடுஞ் சென்மோ விடலை நீயே. 303
கல்லாக் கோவலர் கோலின் தோண்டியஆன்நீர்ப் பத்தல் யானை வெளவும்கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்புயல்நெடுங் கூந்தல் புலம்பும் வயமான் தோன்றல் வல்லா தீமே. 304
களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராதுபசிதின வருத்தம் பைதறு குன்றத்துச்சுடர்தொடிக் குறுமகள் இனையஎனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே. 305
வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்பல்கழ் அல்குல் அவ்வரி வாடக்குழலினும் இனைகுவள் பெரிதேவிழவொலி கூந்தல் மாஅ யோளே. 306
ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்குன்றுடை அருஞ்சுரம் செலவயர்ந் தனையேநன்றில் கொண்கநின் பொருளேபாவை யன்னநின் துணைபிரிந்து வருமே. 307
பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்கால் எறுழ் ஒள்வி தாஅயமுருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே. 308
வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்துசெலவுஅயர்ந் தனையால் நீயே நன்றுநின்னயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்முறுவல் காண்டலின் இனிதோஇறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே. 309
பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்இலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப்பிரிதல் வல்லுவை ஆயின்அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே. 310

32. செலவுப் பத்து
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்காடுஇறந் தனரே காதலர்நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே. 311
அறஞ்சா லியரோ அறஞ்சா லியரேவறனுண் டாயினும் அறஞ்சா லியரோவாள்வனப் புற்ற அருவிக்கோள்வல் என்னையை மறிந்த குன்றே. 312
தெறுவது அம்ம நும்மகள் விருப்பேஉறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்ப்பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்கநாடுஇடை விலங்கிய வைப்பின்காடுஇறந் தனள்நம் காத லோனே 313
அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக்கர்ங்கண் காக்கையொடு கழுகுவிசும்பு அகலச்சிறுகண் யானை ஆள்வீழ்துத் திரித்ரும்நீளிடை அருஞ்சுரம் என்பநம் தோளிடை முனிநர் சென்ற ஆறே. 314
பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்பூசல் கேளார் சேயர் என்பவிழைநெகிழ் செல்லல் உறீஇக்கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே. 315
பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்தேரகல் அல்குல் அவ்வரி வாடஇறந்தோர் மன்ற தாமே பிறங்குலைப்புல்லரை ஓமை நீடியபுலிவழங்கு அதர கானத் தானே. 316
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்பைதற வெந்த பாலை வெங்காட்டுஅருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்சென்ர நெஞ்சம் நீடிய பொருளே. 317
ஆய்நலம் பசப்ப அரும்படர் நலியவேய்மருள் பணைத்தோள் வில்லிலை நெகிழநசைநனி கொன்றோர் மன்ற இசைநிமிர்ந்துஓடெரி நடந்த வைப்பின்கோடுயர் பிறங்கல் மலை இறந் தோரே. 318
கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்மண்புரை பெருகிய மரம்முளி கானம்இறந்தன ரோநம் காதலர்மறந்தன ரோதில் மறவா நம்மே. 319
முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூமுழங்கல் அசைவளி எடுப்ப வானத்துஉருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்கவலை அருஞ்சுரம் போயினர்தவலில் அருநோய் தலைதந் தோரே. 320

33. இடைச்சுரப் பத்து.
உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடைஅலறுதலை ஓமை அம்கவட் டேறிப்புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்துமொழிபெயர் பன்மலை இறப்பினும்ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே. 321
நெடுங்கழை முனிய வேனில் நீடிக்கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்வெய்ய வாயினை முன்னே இனியேஒண்ணுதல் அரிவையை யுள்ளுதொறும்தண்ணிய வாயின சுரட்திடை யாறே. 322
வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்வெஞ்சுரக் கவலை நீந்திவந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே. 323
எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச்சிறிதுகண் படுப்பினும் காண்குவென் மன்றநள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர்வேங்கை வென்ற சுணங்கின்தம்பாய் கூந்தல் மாஅ யோளே. 324
வேணில் அரையத்து இலையொலி வெரீஇப்போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும்வெம்பலை அருஞ்சுரம் நலியாதுஎம்வெம் காதலி பண்புதுணைப் பெற்றே. 325
அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாதுமடமான் அமபினை மறியொடு திரங்கநீர்மருங்கு அறுத்த நிரம்பா இயவின்இன்னா மன்ற சுரமேஇனிய மறையான் ஒழிந்தோள் பண்பே. 326
பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச்சிறுகண் யானை நிலந்தொடல் செல்வாவெயின்முளி சோலைய வேய்உயர் சுரனேஅன்ன ஆர்இடை யானும்தண்மை செய்தஇத் தகையோன் பண்பே. 327
நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த்தண்ணிய வாயினும் வெய்ய மன்றமடவரல் இந்துணை ஒழியக்கடமுதிர் சோலைய காடிறத் தேற்கே. 328
ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலைவெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடுமறுதரு வதுகொல் தானே செறிதொடிகழிந்துகு நிலைய வாகஒழிந்தோள் கொண்டஎன் உரங்கெழு நெஞ்சே. 329
வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்திவந்தனம் ஆயினும் ஒழிகஇனிச் செலவேஅழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்கதிர்தெறு வஞ்சுரம் நினைக்கும்அவிர்கொல் ஆய்தொடி உள்ளத்துப் படரே. 330

34. தலைவி இரங்கு பத்து.
அம்ம வாழி தோழி அவிழிணர்க்கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூஅருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ளஇனிய கம்ழும் வெற்பின்இன்னா என்பஅவர் சென்ற ஆறே. 331
அம்ம வாழி தோழி என்னதூஉம்அறநில மன்ற தாமே விறன்மிசைக்குன்றுகெழு கானத்<ட பண்பின் மாக்கணம்கொடிதே காதலிப் பிரிதல்செல்லல் ஐய என்னா தவ்வே. 332
அம்ம வாழி தோழி யாவதும்வல்லா கொல்லோ தாமே அவணகல்லுடை நன்னாட்டுப் புள்ளீனப் பெர்ந்தோடுயாஅம் துணைபுணர்ந்து உறைதும்யாங்குப் பிந்துறைதி என்னா தவ்வே. 333
அம்ம வாழி தோழி சிறியிலைநெல்லி நீடிய கல்வாய் கடத்திடைப்பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர்கல்லினும் வலியர் மன்றப்ல்லிதல் உண்கண் அழப்பிர்ந் தோரே. 334
அம்ம வாழி தோழி நம்வயின்நெய்தோ ரன்ன வெவிய எருவைகற்புடை மருங்கில் கடுமுடை யார்க்கும்கடுநனி கடிய என்பநீடி இவன் வருநர் சென்ற ஆறே. 335
அம்ம வாழி தோழி நம்வயின்பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்றநின்றதில் பொருட்பிணி முற்றியஎன்றூழ் நீடிய சுரன்இறந் தோரே. 336
அம்ம வாழி தோழி நம் வயின்மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும்இனிய மன்ற தாமேபனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே. 337
அம்ம வாழி தோழி சாரல்இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம்மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும்பிரிவருங் காலையும் பிரிதல்அரிதுவல் லுநர்நம் காத லோரே. 338
அம்ம வாழி தொழி சிறியிலைக்குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇயவாவல் உகக்கும் மாலையும்இன்றுகொல் காதலவர் சென்ற நாடே. 339
அம்ம வாழி தொழி காதலர்உள்ளார் கொல்நாம் மருள்உற் றனம்கொல்விட்டுச் சென்றனர் நம்மேதட்டைத் சென்றனர் நம்மேதட்டைத் தீயின் ஊரலர் எழவே. 340

35. இளவேனிற் பத்து.
அவரோ வாரார் தான்வந் தன்றேகுயிற்பெடை இன்குரல் அகவஅயிர்க்கேழ் நுண்ணறல் நுடங்கும் பொழுதே. 341
அவரோ வாரார் தான்வந் தன்றேசுரும்புகளித்து ஆலும் இருஞ்சினைக்கருங்கால் நுணவம் கமழும் பொழுதே. 342
அவரோ வாரார் தான்வந் தன்றேதிணிநிலைக் கோங்கம் பயந்தஅணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே. 343
அவரோ வாரார் தான்வந் தன்றேஎழில்தகை இஅள்முலை பொலியப்பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. 344
அவரோ வாரார் தான்வந் தன்றேவலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. 345
அவரோ வாரார் தான்வந் தன்றேஅஞ்சினைப் பாதிரி அலர்ந்தெனச்செங்கண இருங்குயில் அறையும் பொழுதே. 346
அவரோ வாரார் தான்வந் தன்றேஎழில்தகை இளமுலை பொலியப்பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. 347
அவரோ வாரார் தான்வந் தன்றேவலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்மண்ங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே. 348
அவரோ வாரார் தான்வந் தன்றேபொரிகால் மாஞ்சினை புதையஎரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே. 349
அவரோ வாரார் தான்வந் தன்றேவேம்பின் ஒண்பூ உறப்பத்தேம்படு கிளவியவர்த் தெளீக்கும் போதே. 350

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.