சமீபத்தில் பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை ஏர்ஆசியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது, ரூ 500 கட்டணத்தில், பெங்களூரு-கொச்சி நகரங்களுக்கிடையே இடையே மற்றொரு வழித்தடத்தை ஏர்ஆசியா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
மற்ற விமான சேவை நிறுவனங்களை விட 35 சதவீதம் குறைவான கட்டணத்தில் பயணிகளுக்கு பறக்கும் அனுபவத்தை வழங்கப்போவதாக அறிவித்துள்ள ஏர்ஆசியா நிறுவனம் கடந்த 12-ம் தேதி பெங்களூரு-கோவா நகரங்களுக்கிடையே அன்றாட வழித்தட சேவையை தொடங்கியது. வரும் 19-ம் தேதி பெங்களூரு-சென்னை இடையே அன்றாடம் இருமுறை என இருவழிப் பாதை வழித்தட சேவையை தொடங்கவுள்ளது.
மேலும் பெங்களூரு-கொச்சி இடையே தினசரி இருவழி வழித்தட சேவையை வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இதற்கான கட்டணம் ரூ.500 எனவும் ஏர்ஆசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
|