ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் நடித்த எந்திரன் திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்து சாதனைப் படைத்தது.
எந்திரன் படத்தை தொடர்ந்து ஷங்கர் விஜய் நடித்த நண்பன், விக்ரம் நடித்த ஐ ஆகிய படங்களை இயக்கினர். இவ்விரண்டு படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.
இந்நிலையில், ஷங்கர் மீண்டும் ரஜினியுடன் இணைந்து புதிய படம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த படம் எந்திரன் 2 வாகவும் இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
ஷங்கர் எந்திரனின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வேறு நடிகையை நடிக்க வைக்கவே திட்டமிட்டிருந்த ஷங்கர், இப்போது ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருப்பதால் அவரையே ரஜினிக்கு ஜோடியாக்க முடிவு செய்துள்ளாராம். அது மட்டுமல்லாமல், அமீர்கானையும் படத்தில் இன்னொரு ஹீரோவாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
தற்போது ரஜினி-ஷங்கர் இருவருமே புதிய படம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதால் விரைவில் எந்திரன் 2 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|