கடந்த பொங்கல் அன்று வெளியான வீரம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்த என்னை அறிந்தால் இறுதி கட்ட பணிகள் மற்றும் கிடைக்கும் தியேட்டர் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதி ஜனவரி 29க்கு மாற்றப்பாட்டுள்ளது.
தற்போது ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு அடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படம் என்ன? என்ற கேள்விக்கு பதிலாக மீண்டும் இயக்குனர் சிவா மற்றும் அஜித் இணைகின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.
அஜித் , சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரம் படத்தை கிராமத்துப் பின்னணியில் கொடுத்த சிவா தனது அடுத்தப் படத்தை நகர பின்னனியில் ஆக்ஷன் கதைக்களமாக அமைக்க இருக்கிறாராம்.
இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
|