பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது, பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் பிசியாகி விட்டார் ராஜமௌலி. இதனைத் தொடர்ந்து மகேஷ்பாபு படம் அதனை அடுத்து தமிழ்,தெலுங்கில் ஒரு படம் என எடுக்கும் முடிவில் உள்ளாராம் ராஜமௌலி. இந்த படத்தில் அஜித் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் ஹீரோவாக நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது தென்னிந்திய ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். முக்கியமாக தமிழகத்தில் தல என மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள அஜித்தின் ரசிர்களுக்கு இனிப்பான செய்தியும் கூட என அந்த பேட்டியில் ராஜமௌலியின் தந்தை கூறியுள்ளார்.
இந்த படம் 2016 இறுதியில் வெளியிடலாம் என பேசி வருவதாகவும் பதிவு செய்துள்ளார் ராஜமௌலியின் தந்தை.
|