|
|||||
அக்கார அடிசில் |
|||||
தேவையானவை : அரிசி – 1 கப் பயத்தம் பருப்பு – 1/4 கப் பச்சைக் கற்பூரம் – சிறிது பால் - தேவைகேற்ப நெய் -தேவைகேற்ப வெல்லம் – 2 1/2 கப் ஏலப்பொடி – 2 டீஸ்பூன் செய்முறை : 1.பயத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு கழுவி நீரை வடித்துவிடவும் 2.வாணலியில் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்க்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். 3.வாணலியில் மாவு பதத்தில் வேகவைத்த அரிசிக் கலவை, வெல்லக் கரைசலுடன் 2 கப் பால் சேர்த்து மிதமான தீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும். 4.இறுக இறுக மேலும் மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 5.சிறிது நேரத்திற்கு பிறகு நெய்யைச் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும். 6.நெய் சேர்த்த பிறகு ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறவும் பிறகு அடுப்பிலிருந்து இறக்கலாம். |
|||||
by Swathi on 17 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|