தமிழ்த் திரையுலகின் வெற்றி இயக்குனராக வலம் வந்த மணிரத்னத்தின் சமீபத்திய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன.
தற்போது அவற்றிலிருந்து மீண்டு ‘ஓகே கண்மணி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் நம்ம மணிரத்தினம்.
இதில், துல்கர் சல்மானும், நித்யா மேனனும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகிறது ஓகே கண்மணி.
இந்நிலையில் ஓகே கண்மணி தொடர்பாக அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஓகே கண்மணி படத்தை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். ஆனாலும் இந்த படத்தின் கதை புதுமையாக இருக்கும். இப்போதைய கால கட்டத்தில் ஏற்றார் போல் கதை இருக்கும். சிறந்த காதல் கதை'' எனத் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பதினான்கு வருடங்களுக்கு முன்பு வெளியாகியது மாதவன் அறிமுகமாகிய அலைபாயுதே படம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஓகே கண்மணி என்ற பெயரில் மணிரத்னம் படமாக்குகிறார்
|