LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!

ஒரு செடிக்கு அருகில்
நின்றுகொண்டு
அதில் பூக்கவிருக்கும் மலர்களைக் காண
காத்திருத்தல் எப்படிப்பட்ட ஒரு தவமோ
அப்படியெனக்கு,

உனை யொரு பொழுதில்
கண்டுவிடுவதும்..


அழகென்றால்
என்னவென்று நினைக்கிறாய் ?

இந்த உலகிலிருக்கும்
அத்தனைக் கண்ணாடிகளும்
அழகு தான்;

நீ பார்க்கையில் மட்டும்..


தினமும் உன்னிடம்
சாப்பிட்டாயா
தூங்கினாயா
வேலையா இருக்கியா
என்றெல்லாம் கேட்பதுண்டு;

அது நீ சாப்பிட்டதை
உறங்கியதைப் பற்றி அறிவதற்கல்ல,

உன்னிடம் நான் பேசியதாயும்
என்னிடம் நீ பேசியதாயும்
ஏதேனுமொரு கவிதைக்குள்
உனைப்பற்றி எழுதிவைக்க...


உனக்கொரு கோயில் கட்டவா
என்றுக் கேட்டால் நீ
சிரிப்பாய் தானே..?

ஆனால் உனக்கென கட்டிய
பல கோவில்கள்
மனதுள்ளே தினம் தினம் இடிந்துபோகிறது,

கோவிலில்லா விட்டாலென்ன
சாமியை தேடிப்பார் எனக்குள்ளே
எங்கும் நீயே நிறைந்திருப்பாய்..



ஏதேனுமொரு பறவைக்கு
தெரியுமா அந்த மொழி?
தெரிந்தால்
அதனிடமாவது சொல்லியனுப்பி விடுவேன்
உனக்கான நினைவையும்;

இந்த இரவின்
நீயில்லா கொடூர தனிமையைப் பற்றியும்..


வித்யாசாகர்

by Swathi   on 22 Mar 2018  0 Comments
Tags: Alagu   Aval   Alagu Kavithai   Kavithai about Beauty   Vidyasagar Kavithai   அழகு   அழகு கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
அ தரும் அழகுக்கவிதை அ தரும் அழகுக்கவிதை
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
அழகையே அலங்கரிப்பேன் ...! - கவிப்புயல் இனியவன் அழகையே அலங்கரிப்பேன் ...! - கவிப்புயல் இனியவன்
அவல்  வடை அவல் வடை
அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி
அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி
நீங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டுமா? நீங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டுமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.