அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஹூஸ்டன் தமிழ் இருக்கை பாராட்டி பரிசுகள் வழங்கியது.
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு 15-க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கியதற்காக 23 வயது இளைஞர் ரஞ்சித்குமார், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளின் சார்பில் பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்பான ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை அறக்கட்டளை சார்பில் அதன் ஆலோசகர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி கோ.பாலசந்திரன், சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்ட ரஞ்சித் குமாருக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு நேரில் வழங்கினார். குடும்ப வாழ்வாதாரத்திற்காக கறவை மாடுகள் வாங்கிதருவதாக தெரிவித்தார். தற்போதய நிலையில்
தமிழர்களின் வீரத்திற்கும், பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கியமானதாகத் திகழும் ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மதுரை காமராஜ் பல்கலைக்கழக தமிழியியல் துறை தலைவர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|