LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

அமைதி நிலைக்க

 

உயிரினங்கள் எல்லாவற்றிலும் மனிதன் சிறந்தவன். பிறர்படும் துன்பத்தைக் கூர்ந்துணரும் நுண்ணறிவு மனிதனுக்கே சிறப்பாக அமைந்துள்ளது. வருந்துவோர்களிடம் இரக்கம் கொண்டு உதவி வாழும் தகைமை மனிதனுக்கே உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் பல. எனினும், அவற்றை விரைவாகவும், எளிதாகவும், பெருத்த அளவிலும் உற்பத்தி செய்து கொள்ள ஏற்ற இயந்திர விஞ்ஞான அறிவிலும் நாளுக்கு நாள் மனிதன் முன்னேறிக் கொண்டு வருகிறான். எனினும், மனித சமுதாயத்தில் ஏன் அமைதி இல்லை. மனிதரிடையே அச்சம், பிணக்கு, பகை, போர் இவை ஏன் அடிக்கடி ஆங்காங்கு எழுகின்றன. வாழ்வைச் சீர் குலையச் செய்கின்றன. மனித மன இயல்பையும், விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தே இதற்கு முடிவு காண வேண்டும்.
மனிதனுக்கு நான்கு வித தேவைகள் உண்டு.
1) உணவு, உடை, உறைவிடம், பருவத்தே பால் உறவு, இவை காலத்தோடும்,
தேவை நிறைவு பெறும் அளவிலும் கிடைக்க வேண்டும்.
2) பலவாறாக அமைந்த இயற்கை அழகுகளையும், காட்சிகளையும் கண்டுகளிக்கும்
வாய்ப்பு வேண்டும்.
3) இயற்கை இரகசியங்களை அறியவும், பிறர்க்கு உணர்த்தவும் வாய்ப்பும்
சூழ்நிலையும் வேண்டும்.
4) பிரபஞ்ச இயக்கத்திற்கும் தனக்கும் மூல ஆற்றலை அறிய வாய்ப்பும்
சூழ்நிலையும் வேண்டும்.
காலத்தோடும், முறையோடும் தேவைக்கேற்ப இந்நான்கு வகையும் கிட்டாத போது அவன் அறிவு, உடல் ஆற்றல்கள் திசை மாற்றம் பெறுகின்றன. போட்டியுணர்வும், பிறர் வளம் பறித்து வாழும் பழிச் செயல்களும், பாதுகாப்புப் பொறுப்பும் மிகுதியாகின்றன. அச்சம், பகை, பிணக்கு, போர் இவையாக உருப் பெறுகின்றன. இத்தேவைக்குரிய பொருட்களையும் வசதிகளையும் ஈட்டவும், காக்கவும், துய்க்கவும், பிறர்க்கு உதவவும் உலகில் பிறந்த எல்லோருக்கும் உரிமையுண்டு. இதுவே பிறப்புரிமை எனப்படும்.
இந்த உரிமையை பிறர் தடுக்காமலும், பறிக்காமலும் காக்க அமையும் சமுதாயப் பாதுகாப்புச் சூழ்நிலையே சுதந்திரம் ஆகும். உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் இந்தத் தெய்வீகமான பிறப்புரிமையும், சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால் தான், உறுதி செய்யப்பட்டால் தான் மனிதன் வாழ்வில் அமைதி கிட்டும். அது நிலைக்கவும் முடியும். 
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உயிரினங்கள் எல்லாவற்றிலும் மனிதன் சிறந்தவன். பிறர்படும் துன்பத்தைக் கூர்ந்துணரும் நுண்ணறிவு மனிதனுக்கே சிறப்பாக அமைந்துள்ளது. வருந்துவோர்களிடம் இரக்கம் கொண்டு உதவி வாழும் தகைமை மனிதனுக்கே உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் பல. எனினும், அவற்றை விரைவாகவும், எளிதாகவும், பெருத்த அளவிலும் உற்பத்தி செய்து கொள்ள ஏற்ற இயந்திர விஞ்ஞான அறிவிலும் நாளுக்கு நாள் மனிதன் முன்னேறிக் கொண்டு வருகிறான். எனினும், மனித சமுதாயத்தில் ஏன் அமைதி இல்லை. மனிதரிடையே அச்சம், பிணக்கு, பகை, போர் இவை ஏன் அடிக்கடி ஆங்காங்கு எழுகின்றன. வாழ்வைச் சீர் குலையச் செய்கின்றன. மனித மன இயல்பையும், விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தே இதற்கு முடிவு காண வேண்டும்.

 

மனிதனுக்கு நான்கு வித தேவைகள் உண்டு.

 

1) உணவு, உடை, உறைவிடம், பருவத்தே பால் உறவு, இவை காலத்தோடும்,

தேவை நிறைவு பெறும் அளவிலும் கிடைக்க வேண்டும்.

 

2) பலவாறாக அமைந்த இயற்கை அழகுகளையும், காட்சிகளையும் கண்டுகளிக்கும்

வாய்ப்பு வேண்டும்.

 

3) இயற்கை இரகசியங்களை அறியவும், பிறர்க்கு உணர்த்தவும் வாய்ப்பும்

சூழ்நிலையும் வேண்டும்.

 

4) பிரபஞ்ச இயக்கத்திற்கும் தனக்கும் மூல ஆற்றலை அறிய வாய்ப்பும்

சூழ்நிலையும் வேண்டும்.

 

காலத்தோடும், முறையோடும் தேவைக்கேற்ப இந்நான்கு வகையும் கிட்டாத போது அவன் அறிவு, உடல் ஆற்றல்கள் திசை மாற்றம் பெறுகின்றன. போட்டியுணர்வும், பிறர் வளம் பறித்து வாழும் பழிச் செயல்களும், பாதுகாப்புப் பொறுப்பும் மிகுதியாகின்றன. அச்சம், பகை, பிணக்கு, போர் இவையாக உருப் பெறுகின்றன. இத்தேவைக்குரிய பொருட்களையும் வசதிகளையும் ஈட்டவும், காக்கவும், துய்க்கவும், பிறர்க்கு உதவவும் உலகில் பிறந்த எல்லோருக்கும் உரிமையுண்டு. இதுவே பிறப்புரிமை எனப்படும்.

 

இந்த உரிமையை பிறர் தடுக்காமலும், பறிக்காமலும் காக்க அமையும் சமுதாயப் பாதுகாப்புச் சூழ்நிலையே சுதந்திரம் ஆகும். உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் இந்தத் தெய்வீகமான பிறப்புரிமையும், சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால் தான், உறுதி செய்யப்பட்டால் தான் மனிதன் வாழ்வில் அமைதி கிட்டும். அது நிலைக்கவும் முடியும். 

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 20 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.