LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படம் தான் : சொல்கிறார் அமீர் !!!

திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு பிறகு சூர்யாவின் படங்களைத்தான், மக்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கிறார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

 

கரு பழனியப்பன் இயக்கத்தில், உருவாகிவரும் ஜன்னல் ஓரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

 

இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் பேசியதாவது, இந்த மேடையே நன்றி சொல்லும் மேடை மாதிரிதான் தெரிகிறது. கரு பழனியப்பன் தன் முதல் தயாரிப்பாளர் தியாகராஜனை மேடை ஏற்றி நன்றியைக் காட்டினார். அடுத்து இயக்குநர்கள் எழில், பார்த்திபன் என மேடை ஏற்றிய விதம், நன்றியறிவிப்பு மாதிரிதான் தெரிந்தது. நானும் இந்த இடத்தில் ஒருவருக்கு நன்றியைச் சொல்ல விரும்புகிறேன். அவர் சூர்யா. ஒரு இயக்குநராக நான் இந்த மேடையில் நிற்கக் காரணமே சூர்யாதான். என்னை ஒரு இயக்குநர் என்று நம்பிய முதல் கதாநாயகனும் அவர்தான். 

 

மவுனம் பேசியதே படத்துக்குப் பிறகு நாங்கள் எந்த மேடையிலும் சந்தித்துக் கொண்டதில்லை.. சகஜமான பேச்சுவார்த்தையும் இல்லை. அதனால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த மேடையில் நன்றி சொல்கிறேன். தமிழ் நாட்டில் இன்றைக்கு ரஜினி சார் படங்களுக்குப் பிறகு மக்கள் குடும்பத்தோட பார்க்க விரும்புவது சூர்யாவோட படங்களைத்தான். இதை எந்த அளவுக்கு அவர் கவனிக்கிறார்னு எனக்குத் தெரியல. ஆனால் நான் இதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரோ தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்துகிறார். சூர்யாகிட்ட நான் கேட்டுக் கொள்வதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத இந்த சிறப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். குடும்பக் கதைகளிலும் நடித்து வேறு தளத்துக்கு அவர் செல்ல வேண்டும். ஏதோ நான் அவரிடம் கால்ஷீட் கேட்கப் போவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கரு பழனியப்பனிடம் கூட ஒரு அற்புதமான கதை உள்ளது. சூர்யா அதையும் கேட்டால் நன்றாக இருக்கும் என இயக்குனர் அமீர் கூறினார்.

by Swathi   on 18 Oct 2013  2 Comments
Tags: அமீர்   இயக்குனர் அமீர்   சூர்யா   ரஜினி   குடும்பப்படம்   தமிழ் குடும்பம்   அமீர் நன்றி  
 தொடர்புடையவை-Related Articles
இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு... இந்த அரையாண்டில் தெறி தான் டாப்பு...
ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!! ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!!
எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !! எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
கருத்துகள்
14-Nov-2013 02:59:47 bala said : Report Abuse
நல்ல ஒரு நெட்வொர்க் லைக்
 
31-Oct-2013 08:55:22 vijay said : Report Abuse
இவனுக்கு வேற வேலையே இல்ல சும்மா குழி தோண்டுவ ஒரு படம் ஹிட் அனா போதுமா முதல்ல ஹிட் குடுய அப்புறம் பாக்கள
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.