|
|||||
ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படம் தான் : சொல்கிறார் அமீர் !!! |
|||||
திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு பிறகு சூர்யாவின் படங்களைத்தான், மக்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கிறார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
கரு பழனியப்பன் இயக்கத்தில், உருவாகிவரும் ஜன்னல் ஓரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் பேசியதாவது, இந்த மேடையே நன்றி சொல்லும் மேடை மாதிரிதான் தெரிகிறது. கரு பழனியப்பன் தன் முதல் தயாரிப்பாளர் தியாகராஜனை மேடை ஏற்றி நன்றியைக் காட்டினார். அடுத்து இயக்குநர்கள் எழில், பார்த்திபன் என மேடை ஏற்றிய விதம், நன்றியறிவிப்பு மாதிரிதான் தெரிந்தது. நானும் இந்த இடத்தில் ஒருவருக்கு நன்றியைச் சொல்ல விரும்புகிறேன். அவர் சூர்யா. ஒரு இயக்குநராக நான் இந்த மேடையில் நிற்கக் காரணமே சூர்யாதான். என்னை ஒரு இயக்குநர் என்று நம்பிய முதல் கதாநாயகனும் அவர்தான்.
மவுனம் பேசியதே படத்துக்குப் பிறகு நாங்கள் எந்த மேடையிலும் சந்தித்துக் கொண்டதில்லை.. சகஜமான பேச்சுவார்த்தையும் இல்லை. அதனால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த மேடையில் நன்றி சொல்கிறேன். தமிழ் நாட்டில் இன்றைக்கு ரஜினி சார் படங்களுக்குப் பிறகு மக்கள் குடும்பத்தோட பார்க்க விரும்புவது சூர்யாவோட படங்களைத்தான். இதை எந்த அளவுக்கு அவர் கவனிக்கிறார்னு எனக்குத் தெரியல. ஆனால் நான் இதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரோ தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்துகிறார். சூர்யாகிட்ட நான் கேட்டுக் கொள்வதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத இந்த சிறப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். குடும்பக் கதைகளிலும் நடித்து வேறு தளத்துக்கு அவர் செல்ல வேண்டும். ஏதோ நான் அவரிடம் கால்ஷீட் கேட்கப் போவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கரு பழனியப்பனிடம் கூட ஒரு அற்புதமான கதை உள்ளது. சூர்யா அதையும் கேட்டால் நன்றாக இருக்கும் என இயக்குனர் அமீர் கூறினார். |
|||||
by Swathi on 18 Oct 2013 2 Comments | |||||
Tags: அமீர் இயக்குனர் அமீர் சூர்யா ரஜினி குடும்பப்படம் தமிழ் குடும்பம் அமீர் நன்றி | |||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|