பெயர்: திருமதி. மேகலா இராமமூர்த்தி பிறந்த ஊர்: காரைக்கால், புதுச்சேரி மாநிலம், இந்தியா வசிக்கும் ஊர் : லேக்லாந்து, புளோரிடா, வடஅமெரிக்கா பணி: பேராசிரியர், புளோரிடா பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (FL Polytechnic University, USA)
சிறந்த தமிழறிஞரான, காலஞ்சென்ற, முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்களின் மகளான மேகலா இராமமூர்த்தி, தமிழகத்தைச்சேர்ந்த பிரபலப் பட்டிமன்ற நடுவர்கள் பலரின் தலைமையில் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவமுடையவர். மேடைப் பேச்சில் மட்டுமல்லாது எழுத்துத் துறையிலும் ஆர்வமுடைய இவர், ‘பன்மணிக்கோவை’ என்ற பெயரில் தம்முடைய முதல் நூலை 2015-இல், விழிச்சுடர்ப் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியம், சமய இலக்கியம், தமிழர் பண்பாடு, ஷெல்லி, பாரதி, பாரதிதாசன் என்று பல்வேறு பொருண்மைகளில் தினமணி, திண்ணை, வல்லமை, தென்றல்முல்லைபோன்ற இதழ்களில் கட்டுரைகளாய் மலர்ந்தவற்றின் தொகுப்பு இந்நூல்.
இவருடைய இரண்டாவது நூல், ’அறிவோம் அறிஞர்களை’ என்ற தலைப்பில் 2020-ஆம் ஆண்டு அமேசான் கிண்டிலில் மின்னூலாக வெளிவந்திருக்கின்றது. மக்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாத உலக அறிஞர்கள் பற்றிய பல அரிய செய்திகளைத் தாங்கி நிற்கும் நூலிது. ’அறிவோம் அறிஞர்களை’ என்ற தலைப்பில் அமெரிக்கத் தமிழ் ஊடகத்தில் (American Tamil Media) ஒவ்வொரு வாரமும் தொடர் சொற்பொழிவுகளும்
நிகழ்த்தி வருகின்றார் இவர். இவருடைய வலைப்பூ: http://manimidaipavalam.blogspot.com
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
|