கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார் George L.Hart. தமிழ்த் துறையை அங்கு நிறுவியதே அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1979 இல், பழந்தமிழ்ப் பாடல்களைத் தொகுத்து, “The Poems of the Tamil Anthologies” என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
“புறநானூறு” எனும் தமிழிலக்கியக் கருவூலத்தை ஆங்கிலத்தில், “Four Hundred Songs of War and Wisdom (1999” என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
சமஸ்கிருதத்திலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழுக்கும், சமஸ்கிருதத்துக்கும் இருக்கும் கொடுக்கல் வாங்கல்களைப் பற்றி ஆராய்ந்தவர்,
“”தென் கிழக்கு ஆசியாவில், தமிழைத் தவிர்த்து, மற்ற அனைத்து மொழிகளுமே சமஸ்கிருதத்தையோ அரபியையோ தழுவியுள்ளது. சமஸ்கிருதத் தாக்கம், தமிழ் மொழியில் காணப்பட்டாலும் தமிழ் மொழி அதன் வேரை விட்டு என்றுமே விலகியதில்லை” என்கிறார்.
அவர் எழுதிய நூல்கள்:
The Poems of Ancient Tamil, Their Milieu and Their Sanskrit Counterparts
A Rapid Sanskrit Method
The Forest Book of the Ramayana of Kampan
கம்பரின் ராமாயணம், அதன் சமஸ்கிருத மூலங்களை விட பன்முகத் தன்மை கொண்டிருக்கிறது எனவும் பாராட்டியுள்ளார். தமிழின் பெருமையை உலகறியச் செய்ததோடு மட்டுமின்றி, தமிழ் செவ்வியல் மொழியென அறிவிக்கப்பட வேண்டுமென 2000 இல் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்தே, இந்திய அரசு செப்டம்பர் 18, 2004 இல் தமிழ்க்கு செவ்வியல் மொழி அந்தஸ்தினைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களாகிய நாம் இதைக் கொண்டாட வேண்டும் நண்பர்களே! தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவரை, தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள்.
|