LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

அமிருதரஞ்சனி

1.1:
தம்பரமென்றிரங்கித் தளராமனந்தருளால்
உம்பர்த்தொழுந்திருமால் உகந்தேற்குமுபாயமொன்றால்
நம்பிறவித்துயர் மாற்றிய ஞானப்பெருந்தகவோர்
சம்பிரதாயமொன்றிச் சதிர்க்கும்நிலை சார்ந்தனமே.

1.2
கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த
திருமாலடிகாட்டிய, நம்
தேசிகர்த்தம்நிலைபற்றிச்சேர்ந்தோமே.

1.3:
முத்திக்கருள்சூட மூன்றைத்தெளிமுன்னம்
இத்திக்காலேற்கும் இதம்.

1.4:
மூன்றிலொருமூன்றும் மூவிரண்டும்முந்நான்கும்
தோன்றத்தொலையுந்துயர்.

1.5:
உயிருமுடலும் உடலாகவோங்கித்
தயிர்வெண்ணை தாரணியோடுண்டான் பயிரிற்
களைபோல் அசுரரைக் காய்ந்தான் தன்கையில்
வளைபோலெம்மாசிரியர் வாக்கு.

1.6: அலையற்ற ஆரமுதக்கடல் அக்கடலுண்டமுகில்
விலையற்ற நன்மணிவெற்பு வெயில்நிலவோங்குபகல்
துலையுற்றனவென்பர் தூமறைசூடுந்துழாய்முடியார்க்கு
இலையொத்தன அவன்பாதம் பணிந்தவர்க்கெண்ணுதற்கே.

1.7:
உத்திதிகழும் உரைமூன்றின்மும்மூன்றுஞ்
சித்தமுணரத்தெளிவித்தார் முத்திதரு
மூலமறையின்முடிசேர் முகில்வண்ணன்
சீலமறிவார்சிலர்.

1.8:
எனக்குரிய னெனதுபரமென்றென்னாது
இவையனைத்தும் இறையில்லா இறைக்கடைத்தோம்
தனக்கிணையொன்றில்லாத திருமால்பாதஞ்
சாதனமும்பயனுமெனச் சலங்கள் தீர்ந்தோம்
உனக்கு இதமென்று ஒரு பாகனுரைத்ததுற்றோம்
உத்தமனாமவ னுதவியெல்லாங்கண்டோ ம்
இனிக்கவருமவை கவர இகந்தோம் சோகம்
இமையவரோ டென்று இனிநாமிருக்குநாளே.

1.9:
தத்துவங்களெல்லாம் தகவாலறிவித்து
முத்திவழிதந்தார் மொய்கழலே யத்திவத்தில்
ஆரமுதம் ஆறாமிருநிலத்திலென்றுரைத்தார்
தாரமுதலோதுவித்தார்தாம்.

1.10:
திருநாரணனெனுந்தெய்வமும் சித்தும் அசித்துமென்று
பெருநான்மறைமுடிபேசிய தத்துவம் மூன்றிவைகேட்டு
ஒருநாளுணர்ந்தவர் உய்யும் வகையன்றி யொன்றுகவார்
இருநாலெழுத்தின் இதயங்களோதிய வெண்குணரே.

1.11:
காரணமாயுயிராகி அனைத் துங்காக்குங்
கருணைமுகில் கமலை யுடனிலங்குமாறு
நாரணனார் வடிவான வுயிர்களெல்லா
நாமென்று நல்லடிமைக் கேற்குமாறுந்
தாரணிநீர் முதலான மாயைக்காலந்
தனிவானென்றிவை உருவாந்தன்மைதானுங்
கூரணி சீர்மதியுடைய குருக்கள் காட்டக்
குறிப்புடன் நாம்கண்டவகை கூறினோமே

1.12:
அப்படிநின்ற அமலன்படியெல்லம்
எப்படி எம்முள்ளத் தெழுதினார் - எப்படியும்
எரார் சுருதியொளியால் இருணீக்குந்
தாரபதி யனையார் தாம்.

1.13:
செம்பொற்கழலிணைச் செய்யாள மருந்திருவரங்கர்
அன்பர்க்கடியவராய் அடிசூடியநாமுரைத்தோம்
இன்பத் தொகையென எண்ணிய மூன்றிலெழுத்தடைவே
ஐம்பத்தொரு பொருள் ஆருயிர் காகுமமுதெனவே.

1.14:
யான் அறியுஞ்சுடராகி நின்றேன் மற்றும் யாதுமலேன்
வானமருந்திருமாலடியேன் மற்றொர் பற்றுமிலேன்
றானமுதா மவன்தன் சரணே சரணென்றடைந்தேன்
மானமிலா வடிமைப் பணி பூண்டமனத்தினனே.

1.15:
சீலங்கவர்ந்திடும் தேசிகர்தேசின் பெருமையினால்
தூலங்களன்ன துரிதங்கண் மாய்ந்தன, துஞ்சறருங்,
கோலங்கழிந்திடக் கூறியகாலங்குறித்துநின்றோம்
மேலிங்குநாம் பிறவோம் வேலைவண்ணனை மேவுதுமே.

1.16:
வண்மையுகந்த அருளால் வரந்தரு மாதவனார்
உண்மை யுணர்ந்தவர் ஓதுவிக்கின்ற உரைவழியே
திண்மைதருந்தெளிவொன்றாற் றிணியிருள் ணீங்கியநாந்
தண்மைகழிந்தனந் தத்துவங்காணுந்தரத்தினமே.

1.17:
நாராயணன்பரன் நாம் அவனுக்குநிலையடியோஞ்
சோராதனைத்தும் அவனுடம் பென்னுஞ்சுருதிகளாற்
சீரார் பெருந்தகைத்தேசிகர் எம்மைத் திருத்துதலாற்
தீராமயலகற்றும் திறம்பாத் தெளிவுற்றனமே.

1.18:
ஒன்றேபுகலென்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றேயடைக் கலங்கொண்ட நம்மத்திகிரித் திருமால்
என்றேஇசையின் இனையடிசேர்ப்பர் இனிப்பிறவோம்
நன்றேவருவதெல்லாம் நமக்குப் பரமொன்றிலதே

1.19:
சிறுபயனிற் படியாத தகவோரெம்மைச்
சேர்க்க அடைக்கலங்கொண்ட திருமால், றானே
மறுபிறவியறுத்து அழியாவானில் வைக்கு
மனமே நீ மகிழா தேயிருப்பதென்கொல்
உறுவதுனக்குரைக்கேன் இங்கிருக்குங்காலம்
ஒருபிழையும் புகுதாத வுணர்த்திவேண்டிப்
பெருவதெலாமிங்கே நாம் பெற்றுவாழப்
பேரடிமையாலே தென்றிகழே னீயே.

1.20:
சாக்கியர்சைனர்கள் சார்வாகர் சாங்கியர்சைவர், மற்றுந்
தாக்கியர்நூல்கள் சிதையத் தனிமறையின் கருத்தை
வாகியம்முப்பதினால் வகைசெய்து வியாகரித்தோந்
தேக்கி மனத்துள் இதனைத் திணியிருள் நீங்குமினே.

1.21:
தள்ளத்துணியினும் தாய்போலிரங்குந்தனிதகவால்
உள்ளத்துறைகின்ற உத்தமன் றன்மை யுனர்ந்துரைத்தோ
முள்ளொத்தவாதியர் முன்னேவரினெங்கண் முக்கியர்பால்
வெள்ளத்திடையில் னரிபோல் விழிக்கின்றவீணர்க்களே.

1.22:
செய்யேன்மறமென்ற தேசிகன் தாதையவனுரைத்த
மெய்யேயருள் பொருள் சூடிய வெண்மதிகாதலியாம்
பொய்யேபகைப்புலன் யிரண்டொன்று பொருங்கருவி
கையேறுசக்கரக் காவலன் காவலடைந்தவர்க்கே

1.23:
அந்தமிலாதி தேவனழி செய்தடைத்த
அலைவேலை யோத மடையச்
செந்தமிழ் _ல்வகுத்த சிறுமனிச்சர்
சிறுகைச் சிறாங்கையது போற்
சந்தமெலா முரைப்ப இவையென்று தங்கள்
இதயத் தடக்கி, அடியோம்
பந்தமெலாமறுக்க அருள் தந்துகந்து
பரவும் பொருள்கள் இவையே

1.24:
முக்குணமாயையின் மூவெட்டின் கீழ்வருமூவகையும்
இக்குணமின்றியிலங்கிய காலச்சுழியினமும்
நற்குணமொன்றுடை நாகமும்நாராயணனுடம்பாய்ச்
சிற்குணமற்றவையென்று உரைத்தா ரெங்கள்தேசிகரே.

1.25:
எனதென்பதும் யானென்பதுமின்றித்
தனதென்றுதன்னையுங்காணாது உனதென்று
மாதவத்தான் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்பதனிற்
கைத்தான் கைவளரான்காண்.

1.26:
பல்வினைவன்கயிற்றால் பந்த முற்றுழல்கின்றனரு
நல்வினைமூட்டியநாரணனார்ப்பதம் பெற்றவருந்
தொல்வினையென்றுமில்லாச் சோதிவானவ ருஞ்சுருதி
செல்வினையோர்ந்தவர் சீவரென்றோதச் சிறந்தனமே.

1.27:
ஆரணங்களெல்லாம் அடிசூடமேனின்ற
காரணமாய் ஒன்றால் கலங்காதான் னாரணனே
நம்மேல்வினைகடியும் நல்வழியிற் றானின்று
தன்மேனி தந்தருளும் தான்.

1.28:
குடன்மிசையொன்றியும் கூடியும் நின்ற கொடுந்துயரும்
உடல்மிசைத் தோன்றுமுயிரும் உயிர்க்குயிருமிறையுங்
கடல்மிசைக் கண்டதரளத்திரள் அவைகோத்த பொன்னூன்
மடல் மிசைவார்த்தையதன் பொருளென்ன வகுத்தனமே

1.29:
தத்துவந்தன்னில் விரித்திடத்தோறுமிரண்டுதனிற்
பத்திவிலக்கிய பாசண்டர் வீசுறும் பாசமுறார்
எத்திசையுந்தொழுதேத்திய கீர்த்தியர், எண்டிசையார்
சுருத்தருரைத்த சுளகமருந்திய தூயவரே

1.30:
வினைத்திரண் மாற்றிய வேதியர்தந்த நல்வாசகத்தால்
அனைத்துமறிந்தபின் ஆறும்பயனுமெனவடைந்தோ
மனத்திலிருந்து மருத்தமுதாகியமாதவனார்
நினைத்தன் மறத்தல் அரிதாய நன்னிழனீள் கழலே

1.31:
ஓதுமறை நான்கதனி லோங்குமொரு மூன்றினுள்ளே
நீதி நெறிவழுவா நிற்கின்றோம்- போதமரும்
பேரா யிரமுந் திருவும் பிரியாத
நாரா யணனருளா னாம்.

1.32:
ஊன்றந்து நிலைநின்ற வுயிருந் தந்தோ
ருயிராகி யுள்ளொளியோ டுறைந்த நாதன்
றான்றந்த வின்னுயிரை யனதென் னாம
னல்லறிவுந் தந்தகலா நலமுந் தந்து
தான்றந்த நல்வழியாற் றாழ்ந்த வென்னைத்
தன்றனக்கே பாரமாகத் தானே யெண்ணி
வான்றந்து மலரடியுந் தந்து வானோர்
வாழ்ச்சிதர மன்னருளால் வரித்திட் டானே.

1.33:
திருமாலடையிணையே திண்சரணாக் கொண்டு
திருமாலடியிணையே சேர்வார்-- ஒருமால்
அருளால் அருளாத வானோர்கள் வாழ்ச்சி
அருளா னமக்களித் தாராய்ந்து.

1.34:
சேர்க்குந்திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப்பெரியோர்க்கு
ஏற்குங்குணங்கள் இலக்காம் வடிவி லிணையடிகள்
பார்க்குஞ்சரணதிற் பற்றுதனந்நிலைநாம்பெறும் பேறு
ஏற்கின்ற வெல்லைகள் எல்லாக்களையற வெண்ணினமே

1.35:
திருமாலடியிணை சேர்ந்து திகழ்ந்த அடிமைபெறத்
திருநாரணன் சரண் திண்சரணாகத் துணிந்தடைவோர்
ஒருநாளுரைக்க உயிர் தருமிந்திர மோதியநாம்
வருநாள் பழுதற்று வாழும் வகையதில் மன்னுவமே

1.36:
மற்றொரு பற்றின்றி வந்தடைந்தார்க் கெல்லம்
குற்ற மறியாத கோவலனார்- முற்றும்
வினை விடுத்து விண்ணவரோடொன்ற விரைகின்றார்
நினைவுடைத் தாய்நீமனமேநில்லு

1.37:
எல்லத் தருமமும் என்னையிகழ்ந்திடத் தான் இகழாது
எல்லாந்தனதென எல்லாமுகந்தரு டந்த பிரான்
மல்லார் மதக்களிறொத்த வினைத்திரண் மாய்ப்பனென்ற
சொல்லால் இனியயொருகாற் சோகியாத் துணிவுற்றனமே.

1.38:
வினைத்திரண் மாற்றிய வேதியர் தந்தருள் வாசகத்தால்
அனைத்துமறிந்த பின் ஆறும் பயனுமென வடைந்தோ
மனத்திலிருந்து மருத்த முதாகிய மாதவனார்
நினைத்தன் மனத்தில் அரிதாகினின்றனநீள்கழலே.

1.39:
எட்டிலாறிரண்டிலொன்றில் எங்கும் ஆறியும்புவார்
விட்ட ஆறுபற்றும் ஆறு வீடுகண்டுமேவுவார்
சிட்டாரானதே சுயர்ந்த தேசிகர்க்குயர்ந்து மேல்
எட்டுமூறும் ஊடறுத்தது எந்தைமால் இரக்கமே

****அடிவரவு : தம்பரம், கடலமுத, முத்திக்கு
மூன்றில், உயிரும், அலையற்ற, உத்தி, எனக்கு,
தத்துவங்கள், திருநாரணன், காரணமாயுயிர்,
அப்படி, செம்பொன், யானறி, சீலம், வண்மை,
நாராயணன், ஒன்றே, சிறுபயன், சாக்கியர்,
தள்ள, செய்யேன், அந்தமிலாதி, முக்குணமாயை,
எனது, பல்வினை, ஆரணங்களெல்லாம், குடல்,
தத்துவந்தன்னில், வினைத்திரள், ஓதுமறை,
ஊன்றந்து, திருமாலடியிணையே, சேர்க்குந்திருமகள்,
திருமாலடையிணைசேர்ந்து, மற்றொரு, எல்லாத்தரும,
வினைத்திறள், எட்டிலாறு

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.