கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால், இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர்.கங்காதேவி இடது காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டபடி, ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள்.
கீழே சிம்ம வாகனம் இருக்கிறது. கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது. பிரதான அம்பிகைக்குப் பின்புறம் அம்பிகையின் சுதை வடிவமும் வடித்துள்ளனர். தீர்த்த வழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி, மாசி மகம் ஆகிய நாட்களில் கங்காதேவிக்கு விசேஷ பூஜை நடக்கும்.
கங்காதேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே இங்கு பிரதான பிரசாதமாகத் தருகின்றனர். தண்ணீர் வடிவ தெய்வமான கங்கைக்கே, பூஜை செய்த தீர்த்தமென்பதால், இதை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர். இதை சிறிது வாங்கிச்சென்று, வீட்டில் வைத்துக் கொள்ள ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. |