ஒரு வேண்டுதலின் மூலம் இந்தியாவையே தன் பக்கம் திரும்பச் செய்த முத்துக்குழி அம்மன் மிகப்பெரிய காவல் தெய்வம். தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், அம்மனுக்கு "நேர்த்திக்கடனாக' குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உயிரோடு குழி தோண்டி புதைத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உயிரோடு எடுக்கின்றனர்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி அமாவாசையை அடுத்து வரும் இரண்டாவது புதன் கிழமையில் இவ்விழா நடக்கிறது. இதற்காக விழாவை நடத்துபவர்கள் ஆடி 1ம் தேதியில் இருந்து ஒரு மாத காலத்திற்கு காலில் செருப்பு அணியாமலும், பீடி, சிகரெட், மது குடிக்காமலும், சினிமா பார்க்காமலும் கடுமையான விரதம் இருக்க வேண்டும். |