பொதுவாக சந்தோஷி மாதாவிற்கு வடஇந்தியாவில் தான் கோயில்கள் உண்டு. தென்னிந்தியாவில் சந்தோஷி மாதாவுக்கென வழிபாடுகள் மிகவும் குறைவு. விநாயகரின் புதல்வியான சந்தோஷி மாதாவுக்கு இத்தலத்தில் தனிச்சன்னதி இருப்பதும் இத்துடன் சித்ரகுப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் சிறப்பு.கண்ணகி தனது கணவன் கோவலனை கொன்றதற்காக பாண்டிய மன்னன் மீதும், பாண்டிய நாட்டின் மீதும் கோபம் கொண்டு மதுரையை எரித்தாள்.
இனிவரும் காலங்களில் மதுரை எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க பாண்டிய நாட்டு மக்கள் பார்வதியை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பார்வதி அசரீரியாக, பஞ்ச பாண்டவர்களின் துணைவி திரவுபதி. பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் சக்தியாக இவள் கருதப்படுகிறாள்.
பஞ்சபூத சீற்றங்களினால் மதுரை நகரம் பாதிப்படையாமல் இருப்பதற்காக இவளுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள் என்று கூறியதாகவும் அதன் அடிப்படையில் இப்பகுதி மக்கள் திரவுபதிக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருவதாகவும் தல வரலாறு கூறுகிறது. |