இங்குள்ள மூலவர் சங்கு சக்கரத்துடன் விஷ்ணு துர்கையாக அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு.இந்தத் தலத்தில் கையில் சங்கு-சக்கரத்துடன், விஷ்ணு துர்கையாக அருள்பாலிக்கிறாள் அம்மன். துர்கையை ராகு கால வேளையில், தரிசித்து வழிபட, வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும் என்பது ஐதீகம் ! செவ்வாய்-வெள்ளிக்கிழமைகளில், ராகு காலத்தில் அம்மனுக்கு எலுமிச்சையில் நெய் விளக்கேற்றி வழிபட, எப்பேர்ப்பட்ட துன்பமும் பனிபோல் விலகும்.
ஆடி மாதம் வந்துவிட்டாலே, துர்கையம்மன் கோயிலில் தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டம்தான்! வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சந்தனக்காப்பு செய்து, நேர்த்திக்கடனைச் செலுத்தி மகிழ்கின்றனர். |