|
||||||||
அம்மானைப்பருவம் |
||||||||
461 ஒளிதங்கு திருநுதற் பகையாகி மாற்றவளொ டுங்கூடி யும்பர்பெருமா
னொண்முடியி னமர்பிழையை நம்பாக விழியாய தோர்ந்தயர்த் தனமாயினுங்
களிதங்கு தோழிய ரிருக்கையை யழித்திடக் கண்டிரே மென்றுபற்றிக்
கலைமதி யினைப்பிசைந் துண்டைபல செய்துமேற் காணவெறி வதுகடுப்பத்
துளிதங்கு மறிதிரை நெருங்குங் கருங்கடற் றொடுகுழி யிடைப்பிறந்து
தூயபல கழுநீ ரரும்புமுகை யவிழத் துலங்குவெண் ணிலவுவீசி
யளிதங்கி குணனமையு முத்திட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே
யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே.
(1)
462 துலங்குபனி வரையாய வெந்தைமாற் றலனெனத் தோன்றும் பெரும்பிழையைநந்
தோழியர் மனைக்குதவி செய்குண முணர்ந்துளந் தொகவமைத் தனமாயினு
மிலங்குகரு மச்சான் றெனப்பொலிந் தும்பரனை யெண்ணா திகழ்ந்தவொருவ
வியற்றுகரு மக்களம் புக்கபிழை யாற்றே மெனப்பிசைத் துண்டைசெய்து
மலங்குதல் கொளப்பரிதி தனைமே லெடுத்தெறிதன் மானவுத யப்பொருப்பின்
வழிசெம்மை யருவியி னுகம்பல வழுந்தியொளி மாட்சிமிக் குற்றுமேன்மே
லலங்குசெங் கதிர்வீசு மணியிட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே
யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (2)
463 மலர்செறி கருங்குழற் பகையாய பிழைநமை மதிக்குமடி யாரகத்து
மன்னா தொழிந்துமதி யாருட் செறிந்திடன் மதிதிதயர்த் தனமாயினு
முலர்தலில் வினோதத்தி னும்பர்நா யகன்முகத் துறுவிழி புதைத்தநாளி
லுயிர்கணித் தியமாதி யொழிதர நமக்குமாங் கொழியாத பழிவிராவக்
கலர்தொழிலினணுகிய துளம்பொறோ மென்றுவெங் காரிருளை யுண்டைசெய்து
கதிரவன் கூட்டுண்டு தேக்கெறியு மாறுமேற் கடுகவிட் டெறிதலேய்ப்ப
வலர்விலிந் திரநீல மணியிட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே
யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (3)
464 எண்ணிய பசுங்கிரணம் வீசுமர கதமிட் டிழைத்தது மிசைச்செலுத்தி
யிலகுற வதன்கிழக் குற்கமல ராகத் திழைத்தது செலச்செலுத்தி
நண்ணிய வதன்கிழக் கொளிவயிர மாற்றிய நலத்தது செலச்செலுத்தி
நாடிய வதன்கிழக் கோங்குசெம் பொன்செய்த நல்லது செலச்செலுத்திப்
புண்ணிய மலிந்தநீ யாடுதிற னோக்கினோர் பொங்குகதிர் மண்டலமுதற்
போற்றுமண்டல நான்கும் வரிசையி னிருத்தியது போலுமென் றுவகைபூப்ப,
வண்ணிய விடைக்கொடி துவண்டிட வெடுத்தெடுத் தம்மானை யாடியருளே
யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (4)
465 ஒள்ளொளிய வயிரத் திழைத்ததை யெடுத்துமே லுயர்தர வெறிந்திடும் போழ்
தொருபாதி யறமுழு வதுங்குடிகொ ளுஞ்செங்கை யொளிவிராய்ச் சேத்தன்மேவ,
நள்ளொளிய மற்றையொரு பாதிநின் றிருமேனி நக்கபா சொளிவிராவி -
நன்றுபச் சென்னவத னடியொன்றி நினதுவெண் ணகையொளி கலந்ததோற்றந்,
துள்ளொளிய வெள்விடையின் மீதந்தி வண்ணரொடு துரிசில்பச் சுருவமான -
தோகைநீ யடியவர் மகிழ்ந்திடக் காட்சிதர றுணையுமென் றுலகுவப்ப,
வள்ளொளிய வெள்வளை கலிப்பமிசை நோக்கெய்த வம்மானையாடி யருளே -
யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (5)
வேறு
466 சொற்பொலி முன்கை வளைக்குல முழுதுந் துள்ளி முழக்கமெழத்
துடியிடை யென்னுங் கொடியிடை நொந்து துவண்டெழு தலைமேவ
விற்பொலி முத்தினிழைத்த தெடுத்து மிசைச்செல வீசிடுகால்
வேல்புரை யங்கட் காரொளி யதனடு விரவப் பொலிதோற்ற
முற்பொலி வெள்ளிய மதியமு மதனடு மூசு களங்கமுமாய்
முற்றிய வென்று வியந்து புகழ்ந்தொரு மூவுல கும்போற்ற
வற்பொலி கண்ட ரிடத்தம ருங்கொடி யாடுக வம்மனையே
யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (6)
467 சொல்லமு துந்திரை யெறியும் பரவைத் துறையிற் றோன்றமுதுந்
தொக்கிரு பாலு மிமைத்திலர் நின்று துனைந்திரு கைநீட்ட
வல்லவர் கைக்கு மகப்பட லின்றிநின் வண்கைத் தலமுறுவான்
வண்பவளத்தி னியன்ற தெடுத்து மதித்தெறி யக்கவலா
நல்லநி னங்கைச் சேயொளி யுந்தொடர் நலமொரு செங்கதிரை
நாடியொர் செவ்வர வுறனே ரும்மென நானில மும்போற்ற
வல்லமர் கண்ட ரிடத்தம ருங்கொடி யாடுக வம்மனையே
யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (7)
468 முத்த மிழைத்த தெடுத்தெறி யக்கடி மொய்த்த குழற்றலையொண்
முத்த மணிப்பிறை யிட்ட கதிர்த்த முழுப்பட லைக்கணுறீஇ
யொத்த கலப்புற வுற்பல வக்குழ லுற்ற கறுப்புறமே
லொட்ட மிசைப்பொதி வுற்ற திறத்தை யுணர்த்தின் வனத்துளவக்
கொத்தன் விளர்த்தமெ யுற்ற பயக்கடல் குறுகி விடந்தாக்கல்
கொண்டு கறுத்தது நேரு மெனப்பலர் கூறி யுவப்பெய்த
வத்தர் குடத்த ரிடத்தம ருங்கிளி யாடுக வம்மனையே
யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (8)
469 விம்ம லுறாவெகு ளித்தழன் மூண்டு வெருக்கொள வெதிர்வந்த
வெய்ய விராவண னோர்காற் கற்பக விடபத் தறையுணவு
நம்மறி வின்மையெ னாயிற் றென்று நடுங்கியொர் கால்வான
நாட்டுக் குடிஞை துளைந்தனன் மீளவு நக்கொரு கான்மதியைச்
செம்ம லினன்றனை யொருகாற் றீண்டுபு செத்தோ மெனவுறவுஞ்
செங்கை விரற்றலை யொன்றுற வுந்திச் சிறுநகை வாய்த்தோற்றி
யம்மனை யாடிய வொருமழ வீன்றவ ளாடுக வம்மனையே
யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (9)
470 எண்ணுத லுற்றவ ருள்ளக் கமல மிருக்கு மனப்பேடே
யெப்பொழு துந்துதி பாடுநர் நாவி லினிக்கும் பைந்தேனே
கண்ணுதல் பக்க மிருப்பா யென்றடி கைதொழு பவர்வாழ்வே
கார்தவ ழும்பனி மால்வரை பெற்ற கருங்கண் மடப்பிடியே
யொண்ணுதல் வீக்கிய பட்டம்வில் வீச வொளிக்குழை தோள்வருட
வுத்தரி யத்தலை யார முறழ்ந்திட வொண்முக முத்தமெழ
வண்ணுத லுற்றிரு நோக்கமு மேலெழ வாடுக வம்மனையே
யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (10)
461 ஒளிதங்கு திருநுதற் பகையாகி மாற்றவளொ டுங்கூடி யும்பர்பெருமா னொண்முடியி னமர்பிழையை நம்பாக விழியாய தோர்ந்தயர்த் தனமாயினுங் களிதங்கு தோழிய ரிருக்கையை யழித்திடக் கண்டிரே மென்றுபற்றிக் கலைமதி யினைப்பிசைந் துண்டைபல செய்துமேற் காணவெறி வதுகடுப்பத் துளிதங்கு மறிதிரை நெருங்குங் கருங்கடற் றொடுகுழி யிடைப்பிறந்து தூயபல கழுநீ ரரும்புமுகை யவிழத் துலங்குவெண் ணிலவுவீசி யளிதங்கி குணனமையு முத்திட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (1)
462 துலங்குபனி வரையாய வெந்தைமாற் றலனெனத் தோன்றும் பெரும்பிழையைநந் தோழியர் மனைக்குதவி செய்குண முணர்ந்துளந் தொகவமைத் தனமாயினு மிலங்குகரு மச்சான் றெனப்பொலிந் தும்பரனை யெண்ணா திகழ்ந்தவொருவ வியற்றுகரு மக்களம் புக்கபிழை யாற்றே மெனப்பிசைத் துண்டைசெய்து மலங்குதல் கொளப்பரிதி தனைமே லெடுத்தெறிதன் மானவுத யப்பொருப்பின் வழிசெம்மை யருவியி னுகம்பல வழுந்தியொளி மாட்சிமிக் குற்றுமேன்மே லலங்குசெங் கதிர்வீசு மணியிட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (2)
463 மலர்செறி கருங்குழற் பகையாய பிழைநமை மதிக்குமடி யாரகத்து மன்னா தொழிந்துமதி யாருட் செறிந்திடன் மதிதிதயர்த் தனமாயினு முலர்தலில் வினோதத்தி னும்பர்நா யகன்முகத் துறுவிழி புதைத்தநாளி லுயிர்கணித் தியமாதி யொழிதர நமக்குமாங் கொழியாத பழிவிராவக் கலர்தொழிலினணுகிய துளம்பொறோ மென்றுவெங் காரிருளை யுண்டைசெய்து கதிரவன் கூட்டுண்டு தேக்கெறியு மாறுமேற் கடுகவிட் டெறிதலேய்ப்ப வலர்விலிந் திரநீல மணியிட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (3)
464 எண்ணிய பசுங்கிரணம் வீசுமர கதமிட் டிழைத்தது மிசைச்செலுத்தி யிலகுற வதன்கிழக் குற்கமல ராகத் திழைத்தது செலச்செலுத்தி நண்ணிய வதன்கிழக் கொளிவயிர மாற்றிய நலத்தது செலச்செலுத்தி நாடிய வதன்கிழக் கோங்குசெம் பொன்செய்த நல்லது செலச்செலுத்திப் புண்ணிய மலிந்தநீ யாடுதிற னோக்கினோர் பொங்குகதிர் மண்டலமுதற் போற்றுமண்டல நான்கும் வரிசையி னிருத்தியது போலுமென் றுவகைபூப்ப, வண்ணிய விடைக்கொடி துவண்டிட வெடுத்தெடுத் தம்மானை யாடியருளே யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (4)
465 ஒள்ளொளிய வயிரத் திழைத்ததை யெடுத்துமே லுயர்தர வெறிந்திடும் போழ் தொருபாதி யறமுழு வதுங்குடிகொ ளுஞ்செங்கை யொளிவிராய்ச் சேத்தன்மேவ, நள்ளொளிய மற்றையொரு பாதிநின் றிருமேனி நக்கபா சொளிவிராவி - நன்றுபச் சென்னவத னடியொன்றி நினதுவெண் ணகையொளி கலந்ததோற்றந், துள்ளொளிய வெள்விடையின் மீதந்தி வண்ணரொடு துரிசில்பச் சுருவமான - தோகைநீ யடியவர் மகிழ்ந்திடக் காட்சிதர றுணையுமென் றுலகுவப்ப, வள்ளொளிய வெள்வளை கலிப்பமிசை நோக்கெய்த வம்மானையாடி யருளே - யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (5)
வேறு 466 சொற்பொலி முன்கை வளைக்குல முழுதுந் துள்ளி முழக்கமெழத் துடியிடை யென்னுங் கொடியிடை நொந்து துவண்டெழு தலைமேவ விற்பொலி முத்தினிழைத்த தெடுத்து மிசைச்செல வீசிடுகால் வேல்புரை யங்கட் காரொளி யதனடு விரவப் பொலிதோற்ற முற்பொலி வெள்ளிய மதியமு மதனடு மூசு களங்கமுமாய் முற்றிய வென்று வியந்து புகழ்ந்தொரு மூவுல கும்போற்ற வற்பொலி கண்ட ரிடத்தம ருங்கொடி யாடுக வம்மனையே யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (6)
467 சொல்லமு துந்திரை யெறியும் பரவைத் துறையிற் றோன்றமுதுந் தொக்கிரு பாலு மிமைத்திலர் நின்று துனைந்திரு கைநீட்ட வல்லவர் கைக்கு மகப்பட லின்றிநின் வண்கைத் தலமுறுவான் வண்பவளத்தி னியன்ற தெடுத்து மதித்தெறி யக்கவலா நல்லநி னங்கைச் சேயொளி யுந்தொடர் நலமொரு செங்கதிரை நாடியொர் செவ்வர வுறனே ரும்மென நானில மும்போற்ற வல்லமர் கண்ட ரிடத்தம ருங்கொடி யாடுக வம்மனையே யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (7)
468 முத்த மிழைத்த தெடுத்தெறி யக்கடி மொய்த்த குழற்றலையொண் முத்த மணிப்பிறை யிட்ட கதிர்த்த முழுப்பட லைக்கணுறீஇ யொத்த கலப்புற வுற்பல வக்குழ லுற்ற கறுப்புறமே லொட்ட மிசைப்பொதி வுற்ற திறத்தை யுணர்த்தின் வனத்துளவக் கொத்தன் விளர்த்தமெ யுற்ற பயக்கடல் குறுகி விடந்தாக்கல் கொண்டு கறுத்தது நேரு மெனப்பலர் கூறி யுவப்பெய்த வத்தர் குடத்த ரிடத்தம ருங்கிளி யாடுக வம்மனையே யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (8)
469 விம்ம லுறாவெகு ளித்தழன் மூண்டு வெருக்கொள வெதிர்வந்த வெய்ய விராவண னோர்காற் கற்பக விடபத் தறையுணவு நம்மறி வின்மையெ னாயிற் றென்று நடுங்கியொர் கால்வான நாட்டுக் குடிஞை துளைந்தனன் மீளவு நக்கொரு கான்மதியைச் செம்ம லினன்றனை யொருகாற் றீண்டுபு செத்தோ மெனவுறவுஞ் செங்கை விரற்றலை யொன்றுற வுந்திச் சிறுநகை வாய்த்தோற்றி யம்மனை யாடிய வொருமழ வீன்றவ ளாடுக வம்மனையே யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (9)
470 எண்ணுத லுற்றவ ருள்ளக் கமல மிருக்கு மனப்பேடே யெப்பொழு துந்துதி பாடுநர் நாவி லினிக்கும் பைந்தேனே கண்ணுதல் பக்க மிருப்பா யென்றடி கைதொழு பவர்வாழ்வே கார்தவ ழும்பனி மால்வரை பெற்ற கருங்கண் மடப்பிடியே யொண்ணுதல் வீக்கிய பட்டம்வில் வீச வொளிக்குழை தோள்வருட வுத்தரி யத்தலை யார முறழ்ந்திட வொண்முக முத்தமெழ வண்ணுத லுற்றிரு நோக்கமு மேலெழ வாடுக வம்மனையே யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|