LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

அம்மானைப்பருவம்

 

461 ஒளிதங்கு திருநுதற் பகையாகி மாற்றவளொ டுங்கூடி யும்பர்பெருமா
      னொண்முடியி னமர்பிழையை நம்பாக விழியாய தோர்ந்தயர்த் தனமாயினுங்
களிதங்கு தோழிய ரிருக்கையை யழித்திடக் கண்டிரே மென்றுபற்றிக்
      கலைமதி யினைப்பிசைந் துண்டைபல செய்துமேற் காணவெறி வதுகடுப்பத்
துளிதங்கு மறிதிரை நெருங்குங் கருங்கடற் றொடுகுழி யிடைப்பிறந்து
      தூயபல கழுநீ ரரும்புமுகை யவிழத் துலங்குவெண் ணிலவுவீசி
யளிதங்கி குணனமையு முத்திட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே
      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. 
(1)
462 துலங்குபனி வரையாய வெந்தைமாற் றலனெனத் தோன்றும் பெரும்பிழையைநந்
      தோழியர் மனைக்குதவி செய்குண முணர்ந்துளந் தொகவமைத் தனமாயினு
மிலங்குகரு மச்சான் றெனப்பொலிந் தும்பரனை யெண்ணா திகழ்ந்தவொருவ
      வியற்றுகரு மக்களம் புக்கபிழை யாற்றே மெனப்பிசைத் துண்டைசெய்து
மலங்குதல் கொளப்பரிதி தனைமே லெடுத்தெறிதன் மானவுத யப்பொருப்பின்
      வழிசெம்மை யருவியி னுகம்பல வழுந்தியொளி மாட்சிமிக் குற்றுமேன்மே
லலங்குசெங் கதிர்வீசு மணியிட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே
      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (2)
463 மலர்செறி கருங்குழற் பகையாய பிழைநமை மதிக்குமடி யாரகத்து
      மன்னா தொழிந்துமதி யாருட் செறிந்திடன் மதிதிதயர்த் தனமாயினு
முலர்தலில் வினோதத்தி னும்பர்நா யகன்முகத் துறுவிழி புதைத்தநாளி
      லுயிர்கணித் தியமாதி யொழிதர நமக்குமாங் கொழியாத பழிவிராவக்
கலர்தொழிலினணுகிய துளம்பொறோ மென்றுவெங் காரிருளை யுண்டைசெய்து
      கதிரவன் கூட்டுண்டு தேக்கெறியு மாறுமேற் கடுகவிட் டெறிதலேய்ப்ப
வலர்விலிந் திரநீல மணியிட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே
      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (3)
464 எண்ணிய பசுங்கிரணம் வீசுமர கதமிட் டிழைத்தது மிசைச்செலுத்தி
      யிலகுற வதன்கிழக் குற்கமல ராகத் திழைத்தது செலச்செலுத்தி
நண்ணிய வதன்கிழக் கொளிவயிர மாற்றிய நலத்தது செலச்செலுத்தி
      நாடிய வதன்கிழக் கோங்குசெம் பொன்செய்த நல்லது செலச்செலுத்திப்
புண்ணிய மலிந்தநீ யாடுதிற னோக்கினோர் பொங்குகதிர் மண்டலமுதற்
      போற்றுமண்டல நான்கும் வரிசையி னிருத்தியது போலுமென் றுவகைபூப்ப,
வண்ணிய விடைக்கொடி துவண்டிட வெடுத்தெடுத் தம்மானை யாடியருளே
      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (4)
465 ஒள்ளொளிய வயிரத் திழைத்ததை யெடுத்துமே லுயர்தர வெறிந்திடும் போழ்
      தொருபாதி யறமுழு வதுங்குடிகொ ளுஞ்செங்கை யொளிவிராய்ச் சேத்தன்மேவ,
நள்ளொளிய மற்றையொரு பாதிநின் றிருமேனி நக்கபா சொளிவிராவி -
      நன்றுபச் சென்னவத னடியொன்றி நினதுவெண் ணகையொளி கலந்ததோற்றந்,
துள்ளொளிய வெள்விடையின் மீதந்தி வண்ணரொடு துரிசில்பச் சுருவமான -
      தோகைநீ யடியவர் மகிழ்ந்திடக் காட்சிதர றுணையுமென் றுலகுவப்ப,
வள்ளொளிய வெள்வளை கலிப்பமிசை நோக்கெய்த வம்மானையாடி யருளே -
      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (5)
வேறு
466 சொற்பொலி முன்கை வளைக்குல முழுதுந் துள்ளி முழக்கமெழத் 
      துடியிடை யென்னுங் கொடியிடை நொந்து துவண்டெழு தலைமேவ
விற்பொலி முத்தினிழைத்த தெடுத்து மிசைச்செல வீசிடுகால் 
      வேல்புரை யங்கட் காரொளி யதனடு விரவப் பொலிதோற்ற
முற்பொலி வெள்ளிய மதியமு மதனடு மூசு களங்கமுமாய்
      முற்றிய வென்று வியந்து புகழ்ந்தொரு மூவுல கும்போற்ற
வற்பொலி கண்ட ரிடத்தம ருங்கொடி யாடுக வம்மனையே
      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (6)
467 சொல்லமு துந்திரை யெறியும் பரவைத் துறையிற் றோன்றமுதுந்
      தொக்கிரு பாலு மிமைத்திலர் நின்று துனைந்திரு கைநீட்ட
வல்லவர் கைக்கு மகப்பட லின்றிநின் வண்கைத் தலமுறுவான்
      வண்பவளத்தி னியன்ற தெடுத்து மதித்தெறி யக்கவலா
நல்லநி னங்கைச் சேயொளி யுந்தொடர் நலமொரு செங்கதிரை
      நாடியொர் செவ்வர வுறனே ரும்மென நானில மும்போற்ற
வல்லமர் கண்ட ரிடத்தம ருங்கொடி யாடுக வம்மனையே
      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (7)
468 முத்த மிழைத்த தெடுத்தெறி யக்கடி மொய்த்த குழற்றலையொண்
      முத்த மணிப்பிறை யிட்ட கதிர்த்த முழுப்பட லைக்கணுறீஇ
யொத்த கலப்புற வுற்பல வக்குழ லுற்ற கறுப்புறமே
      லொட்ட மிசைப்பொதி வுற்ற திறத்தை யுணர்த்தின் வனத்துளவக்
கொத்தன் விளர்த்தமெ யுற்ற பயக்கடல் குறுகி விடந்தாக்கல்
      கொண்டு கறுத்தது நேரு மெனப்பலர் கூறி யுவப்பெய்த
வத்தர் குடத்த ரிடத்தம ருங்கிளி யாடுக வம்மனையே
      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (8)
469 விம்ம லுறாவெகு ளித்தழன் மூண்டு வெருக்கொள வெதிர்வந்த
      வெய்ய விராவண னோர்காற் கற்பக விடபத் தறையுணவு
நம்மறி வின்மையெ னாயிற் றென்று நடுங்கியொர் கால்வான
      நாட்டுக் குடிஞை துளைந்தனன் மீளவு நக்கொரு கான்மதியைச்
செம்ம லினன்றனை யொருகாற் றீண்டுபு செத்தோ மெனவுறவுஞ்
      செங்கை விரற்றலை யொன்றுற வுந்திச் சிறுநகை வாய்த்தோற்றி
யம்மனை யாடிய வொருமழ வீன்றவ ளாடுக வம்மனையே
      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (9)
470 எண்ணுத லுற்றவ ருள்ளக் கமல மிருக்கு மனப்பேடே
      யெப்பொழு துந்துதி பாடுநர் நாவி லினிக்கும் பைந்தேனே
கண்ணுதல் பக்க மிருப்பா யென்றடி கைதொழு பவர்வாழ்வே
      கார்தவ ழும்பனி மால்வரை பெற்ற கருங்கண் மடப்பிடியே
யொண்ணுதல் வீக்கிய பட்டம்வில் வீச வொளிக்குழை தோள்வருட
      வுத்தரி யத்தலை யார முறழ்ந்திட வொண்முக முத்தமெழ 
வண்ணுத லுற்றிரு நோக்கமு மேலெழ வாடுக வம்மனையே
      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (10)

 

461 ஒளிதங்கு திருநுதற் பகையாகி மாற்றவளொ டுங்கூடி யும்பர்பெருமா

      னொண்முடியி னமர்பிழையை நம்பாக விழியாய தோர்ந்தயர்த் தனமாயினுங்

களிதங்கு தோழிய ரிருக்கையை யழித்திடக் கண்டிரே மென்றுபற்றிக்

      கலைமதி யினைப்பிசைந் துண்டைபல செய்துமேற் காணவெறி வதுகடுப்பத்

துளிதங்கு மறிதிரை நெருங்குங் கருங்கடற் றொடுகுழி யிடைப்பிறந்து

      தூயபல கழுநீ ரரும்புமுகை யவிழத் துலங்குவெண் ணிலவுவீசி

யளிதங்கி குணனமையு முத்திட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே

      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. 

(1)

 

462 துலங்குபனி வரையாய வெந்தைமாற் றலனெனத் தோன்றும் பெரும்பிழையைநந்

      தோழியர் மனைக்குதவி செய்குண முணர்ந்துளந் தொகவமைத் தனமாயினு

மிலங்குகரு மச்சான் றெனப்பொலிந் தும்பரனை யெண்ணா திகழ்ந்தவொருவ

      வியற்றுகரு மக்களம் புக்கபிழை யாற்றே மெனப்பிசைத் துண்டைசெய்து

மலங்குதல் கொளப்பரிதி தனைமே லெடுத்தெறிதன் மானவுத யப்பொருப்பின்

      வழிசெம்மை யருவியி னுகம்பல வழுந்தியொளி மாட்சிமிக் குற்றுமேன்மே

லலங்குசெங் கதிர்வீசு மணியிட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே

      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (2)

 

463 மலர்செறி கருங்குழற் பகையாய பிழைநமை மதிக்குமடி யாரகத்து

      மன்னா தொழிந்துமதி யாருட் செறிந்திடன் மதிதிதயர்த் தனமாயினு

முலர்தலில் வினோதத்தி னும்பர்நா யகன்முகத் துறுவிழி புதைத்தநாளி

      லுயிர்கணித் தியமாதி யொழிதர நமக்குமாங் கொழியாத பழிவிராவக்

கலர்தொழிலினணுகிய துளம்பொறோ மென்றுவெங் காரிருளை யுண்டைசெய்து

      கதிரவன் கூட்டுண்டு தேக்கெறியு மாறுமேற் கடுகவிட் டெறிதலேய்ப்ப

வலர்விலிந் திரநீல மணியிட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே

      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (3)

 

464 எண்ணிய பசுங்கிரணம் வீசுமர கதமிட் டிழைத்தது மிசைச்செலுத்தி

      யிலகுற வதன்கிழக் குற்கமல ராகத் திழைத்தது செலச்செலுத்தி

நண்ணிய வதன்கிழக் கொளிவயிர மாற்றிய நலத்தது செலச்செலுத்தி

      நாடிய வதன்கிழக் கோங்குசெம் பொன்செய்த நல்லது செலச்செலுத்திப்

புண்ணிய மலிந்தநீ யாடுதிற னோக்கினோர் பொங்குகதிர் மண்டலமுதற்

      போற்றுமண்டல நான்கும் வரிசையி னிருத்தியது போலுமென் றுவகைபூப்ப,

வண்ணிய விடைக்கொடி துவண்டிட வெடுத்தெடுத் தம்மானை யாடியருளே

      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (4)

 

465 ஒள்ளொளிய வயிரத் திழைத்ததை யெடுத்துமே லுயர்தர வெறிந்திடும் போழ்

      தொருபாதி யறமுழு வதுங்குடிகொ ளுஞ்செங்கை யொளிவிராய்ச் சேத்தன்மேவ,

நள்ளொளிய மற்றையொரு பாதிநின் றிருமேனி நக்கபா சொளிவிராவி -

      நன்றுபச் சென்னவத னடியொன்றி நினதுவெண் ணகையொளி கலந்ததோற்றந்,

துள்ளொளிய வெள்விடையின் மீதந்தி வண்ணரொடு துரிசில்பச் சுருவமான -

      தோகைநீ யடியவர் மகிழ்ந்திடக் காட்சிதர றுணையுமென் றுலகுவப்ப,

வள்ளொளிய வெள்வளை கலிப்பமிசை நோக்கெய்த வம்மானையாடி யருளே -

      யாரண முழங்குங் குடந்தைமங் களவல்லி யம்மானை யாடியருளே. (5)

 

வேறு

466 சொற்பொலி முன்கை வளைக்குல முழுதுந் துள்ளி முழக்கமெழத் 

      துடியிடை யென்னுங் கொடியிடை நொந்து துவண்டெழு தலைமேவ

விற்பொலி முத்தினிழைத்த தெடுத்து மிசைச்செல வீசிடுகால் 

      வேல்புரை யங்கட் காரொளி யதனடு விரவப் பொலிதோற்ற

முற்பொலி வெள்ளிய மதியமு மதனடு மூசு களங்கமுமாய்

      முற்றிய வென்று வியந்து புகழ்ந்தொரு மூவுல கும்போற்ற

வற்பொலி கண்ட ரிடத்தம ருங்கொடி யாடுக வம்மனையே

      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (6)

 

467 சொல்லமு துந்திரை யெறியும் பரவைத் துறையிற் றோன்றமுதுந்

      தொக்கிரு பாலு மிமைத்திலர் நின்று துனைந்திரு கைநீட்ட

வல்லவர் கைக்கு மகப்பட லின்றிநின் வண்கைத் தலமுறுவான்

      வண்பவளத்தி னியன்ற தெடுத்து மதித்தெறி யக்கவலா

நல்லநி னங்கைச் சேயொளி யுந்தொடர் நலமொரு செங்கதிரை

      நாடியொர் செவ்வர வுறனே ரும்மென நானில மும்போற்ற

வல்லமர் கண்ட ரிடத்தம ருங்கொடி யாடுக வம்மனையே

      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (7)

 

468 முத்த மிழைத்த தெடுத்தெறி யக்கடி மொய்த்த குழற்றலையொண்

      முத்த மணிப்பிறை யிட்ட கதிர்த்த முழுப்பட லைக்கணுறீஇ

யொத்த கலப்புற வுற்பல வக்குழ லுற்ற கறுப்புறமே

      லொட்ட மிசைப்பொதி வுற்ற திறத்தை யுணர்த்தின் வனத்துளவக்

கொத்தன் விளர்த்தமெ யுற்ற பயக்கடல் குறுகி விடந்தாக்கல்

      கொண்டு கறுத்தது நேரு மெனப்பலர் கூறி யுவப்பெய்த

வத்தர் குடத்த ரிடத்தம ருங்கிளி யாடுக வம்மனையே

      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (8)

 

469 விம்ம லுறாவெகு ளித்தழன் மூண்டு வெருக்கொள வெதிர்வந்த

      வெய்ய விராவண னோர்காற் கற்பக விடபத் தறையுணவு

நம்மறி வின்மையெ னாயிற் றென்று நடுங்கியொர் கால்வான

      நாட்டுக் குடிஞை துளைந்தனன் மீளவு நக்கொரு கான்மதியைச்

செம்ம லினன்றனை யொருகாற் றீண்டுபு செத்தோ மெனவுறவுஞ்

      செங்கை விரற்றலை யொன்றுற வுந்திச் சிறுநகை வாய்த்தோற்றி

யம்மனை யாடிய வொருமழ வீன்றவ ளாடுக வம்மனையே

      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (9)

 

470 எண்ணுத லுற்றவ ருள்ளக் கமல மிருக்கு மனப்பேடே

      யெப்பொழு துந்துதி பாடுநர் நாவி லினிக்கும் பைந்தேனே

கண்ணுதல் பக்க மிருப்பா யென்றடி கைதொழு பவர்வாழ்வே

      கார்தவ ழும்பனி மால்வரை பெற்ற கருங்கண் மடப்பிடியே

யொண்ணுதல் வீக்கிய பட்டம்வில் வீச வொளிக்குழை தோள்வருட

      வுத்தரி யத்தலை யார முறழ்ந்திட வொண்முக முத்தமெழ 

வண்ணுத லுற்றிரு நோக்கமு மேலெழ வாடுக வம்மனையே

      யாக்க மிகுங்குட மூக்கமர் மங்களை யாடுக வம்மனையே. (10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.