|
||||||||
அம்புலிப்பருவம் |
||||||||
451 நீடுசுப மங்கையென றன்னியற் பெயராலு நிறுவியிவள் பொலிவணீயு -
நிலவுஞ் சுபக்கிரக மென்றுரை செயப்பொலிவை நிகழ்கின்ற சமய மாறுங்,
கூடுமிட மாகக் குறித்தமர்வ ளிவள்பெருங் கும்பமுற் கடகம் வரையுங் -
கூடிய விராசியோ ராறுமம ரிடமெனக் கொண்டமர்வை நீயு மடமை,
சாடுநர்கள் பெண்ணரசி யாயபெண் ணென்னவிவ டழைவள்பெண் கிரகமென்னத் -
தழைவைநீயுந் தெரியினொப்பாக லுண்மையுயர் தவளமாடக் கொடிகண்மே,
லாடுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (1)
452 பாயநற வம்பொழியு மாம்பலை யுவப்பைநீ பற்பல்பம ரங்கண்மூசப் -
பரவுதா னம்பொழியு மொருமருப் பாம்பலைப் பண்புற வுவப்பாளிவண்,
மேயபல கமலமு முகங்கவிழ் தரப்பொலி வியன்கரங் கொண்டு ளாய்நீ -
விளம்புமக் கமலங்க ணாணினவ் வாறாம் வியன்கரங் கொண்டாளிவ, டோயமலி கடலக முதித்துளாய் நீபர சுகக்கட லுதித்தா ளிவள் -
சொல்லுமிவை தேரிலொப்பாகா திராய்வளமை தொக்கவள காபுரியின்மிக்,
காயகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (2)
453 ஏன்றவொரு கும்பமுளை நீயுண்மை ஞானநிறை யிருகும்ப முள்ளாளிவ -
ளியலுமொரு மீனமுளை நீகருணை வெள்ளநிறை யிருமீன முள்ளாளிவள்,
சான்றவோ ரேற்றினா னீதரும மாலெனத் தக்கவீ ரேற்றாளிவ -
டங்குகற் கடகமொன் றுடையனீ யிருளறச் சாடுகற் கடகநாளுந்,
தோன்றவொ ரிரண்டுடைய ளிவளின்ன திறலுடைத் தோகைநிற் கதிகமென்று -
சொல்லவேண் டுங்கொலோ வாவென் றழைத்தது சொலிற்கருணை யேவளத்தா,
லான்றகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே.
(3)
454 நிற்குரிய கும்பமொரு முடவன்விழை குவனிந்த நேரிழைக் குரியகும்ப -
நெடுமறை முடிக்குமெட் டாதவொரு கும்பேச நிமலப் பிரான் விழைகுவன்,
சொற்குலவு நிற்குரிய வேறுபுகர் கொள்ளத் தொலைத்தனை யிவட் குரியவை -
துங்கமுற் றெத்தகைய வானவரு மேத்தித் தொழப்பொலிவ வெந்த ஞான்றும்,
விற்குலவு நின்மீன் விரும்புமொரு பொன்னிவள் விசாலமீன் கடையை மண்ணும் -
விண்ணும்விழை யும்மிவ ணினக்கதிக மென்பதால் விளைவதொன்றில்லை யென்று,
மற்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (4)
455 செய்யகதி ராயிரம் விரித்திரு ளரித்துவரு செம்மனின் னோடொத்தவன் -
றிண்ணிய மடங்கலை விரும்பிய துணர்ந்துநீ சேற்றுநில மாக்கள்போல,
நொய்யசீ றலவனை விரும்பியப் பெயர்பூண்டு நோக்குறா குழல்வைசீய -
நோன்மையி னுதித்திடும் போதுமத யானைவலி நூறிச் செகுக்குஞெண்டு,
வெய்யதாயனையுயி ரழித்தளைக் குள்ளொளியும் விழுமிய துணர்ந்தாய் கொலோ -
வீபத்தெனும்பெயர் முதற்குறுக லடையாது மேலாய சார்புகோடற்,
கையகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (5)
456 தெரியவொரு கோளுண் டுமிழ்ந்திடப் பட்டுஞ் சிறந்தவா சாற்பிழைத்துத் -
தீயவெஞ்சாபத் தொடக்குண்டு மோகஞ் செறிக்குமல ரான்சாபமே,
புரியதென வேற்குமொரு கோட்டும்ப னால்வா யுறுத்துசா பத்தொடக்குண் -
டுழிதந்து மொழிதந்து நேர்தருமருங்குலா ரொள்ளணிகொண் ஞெள்ளன்மேவி,
விரியவெரு விட்டெறிய வெளிவந்து நீயுறுதன் மேதகைய விவளுணர்ந்து -
மெய்ம்மையுண ராளினுனை யாடவா வெனவிளித் தனள்விழை யறஞ்செயாருக்,
கரியகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.
(6)
457 எடுத்தவெஞ் செனவனல் கனன்றெழப் பொன்வெதுப் பேறிநிற் சுட்டகாலை -
யித்தலச் சோமேச நீர்படிந் தனுகூல மெய்திய தயர்த்துளாயோ,
விடுத்தபெரு விதியினான் பக்கபா தஞ்செயல் விடுத்தில னெனச்சிறுவிதி -
வெகுளத் தொடர்ந்தநோ யித்தளியுண் மேயநீர் வீட்டியது முட்கொண்டிலாய்,
தடுத்தபொறி யாளர்செறி யித்தல மகத்துவஞ் சற்றுமுண ராதவன்போற் -
றாமதஞ் செயறக்க தன்றுபகை வென்றுமிளிர் தருதுவசம் வானுலகமீ,
தடுத்தகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (7)
458 சாற்றொரு தலஞ்செய்த பாதகம் விசேடத் தலத்தடையின் மாயுமந்தத் -
தலத்துப் புரிந்தபா தகமிருங் காசித் தலத்தினைச் சாரமாயும்,
போற்றுமக் காசியிற் செய்தமா பாவமிப் புண்ணிய தலத்துமேவப் -
போமென வுரைக்கும் புராணமத் தகையவிப் பொருவாத் தலத்தையுற்றுத்,
தோற்றுமா மகநீர் துளைந்துபொற் றாமரைத் தோயமுந் தோய்ந்தம்மைபொற்,
றுணையடி வணங்கிநீ பெறுமிலா பத்தளவு சொல்லவல் லவரார்பொறை,
யாற்றுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (8)
459 துலங்குக்தன் றிருவடிக் கன்புபுரி யதிதிமுற் றோன்றப் புகன்றசாபத் -
தொடக்குண்ட காசிபன் மிகும்புனற் காவிரித் துறையிற் படிந்தெழுந்து,
கலங்குதலி லாததவ மாற்றமற் றவனுளங் களிகொளுங் காட்சிநல்கிக் -
கவற்றிய வலித்தன்மை யுந்தொலைத் தருள்செய்த கருணைப் பிராட்டியிவளான்,
மலங்குமன னோடவ மதித்தசிறு விதிசொற்ற வலியசா பத்தொடக்கான் -
மாறிமா றிக்குறைத றீர்ந்துநீ யுயவருள் வழங்குவா ளெனல்வேண்டுமோ,
வலங்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (9)
460 பொருள்செயிவள் வாவென்று திருவாய் மலர்ந்தவப் பொழுதுநீ வந்தாயிலை -
பொலியுநின் முகத்தெதிர்ப் படவஞ்சி னானெனப் போதவுரைசெய்து காத்தேந்,
தெருள்செயிவ ளின்னும்வந் திலனெனச் சிறிதுகண் சேந்திடிற் புவனத்துளோர் -
திக்கிலை நினக்கஞ்ச லென்பாரு மிலையிவள் சினந்தவிர்ப் பாருமில்லை,
வெருள்செய்பணி பலவுளொன் றிவள்கொழுந னேவிடின் விழுங்கியே விடுமரைத்த -
வீரனு முளானிவை யுணர்ந்துய்ய வேண்டிடின் விரைந்துவந் தடியர்யார்க்கு,
மருள்செய்குட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே -
யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (10)
451 நீடுசுப மங்கையென றன்னியற் பெயராலு நிறுவியிவள் பொலிவணீயு - நிலவுஞ் சுபக்கிரக மென்றுரை செயப்பொலிவை நிகழ்கின்ற சமய மாறுங், கூடுமிட மாகக் குறித்தமர்வ ளிவள்பெருங் கும்பமுற் கடகம் வரையுங் - கூடிய விராசியோ ராறுமம ரிடமெனக் கொண்டமர்வை நீயு மடமை, சாடுநர்கள் பெண்ணரசி யாயபெண் ணென்னவிவ டழைவள்பெண் கிரகமென்னத் - தழைவைநீயுந் தெரியினொப்பாக லுண்மையுயர் தவளமாடக் கொடிகண்மே, லாடுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (1)
452 பாயநற வம்பொழியு மாம்பலை யுவப்பைநீ பற்பல்பம ரங்கண்மூசப் - பரவுதா னம்பொழியு மொருமருப் பாம்பலைப் பண்புற வுவப்பாளிவண், மேயபல கமலமு முகங்கவிழ் தரப்பொலி வியன்கரங் கொண்டு ளாய்நீ - விளம்புமக் கமலங்க ணாணினவ் வாறாம் வியன்கரங் கொண்டாளிவ, டோயமலி கடலக முதித்துளாய் நீபர சுகக்கட லுதித்தா ளிவள் - சொல்லுமிவை தேரிலொப்பாகா திராய்வளமை தொக்கவள காபுரியின்மிக், காயகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (2)
453 ஏன்றவொரு கும்பமுளை நீயுண்மை ஞானநிறை யிருகும்ப முள்ளாளிவ - ளியலுமொரு மீனமுளை நீகருணை வெள்ளநிறை யிருமீன முள்ளாளிவள், சான்றவோ ரேற்றினா னீதரும மாலெனத் தக்கவீ ரேற்றாளிவ - டங்குகற் கடகமொன் றுடையனீ யிருளறச் சாடுகற் கடகநாளுந், தோன்றவொ ரிரண்டுடைய ளிவளின்ன திறலுடைத் தோகைநிற் கதிகமென்று - சொல்லவேண் டுங்கொலோ வாவென் றழைத்தது சொலிற்கருணை யேவளத்தா, லான்றகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாட வாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாட வாவே. (3)
454 நிற்குரிய கும்பமொரு முடவன்விழை குவனிந்த நேரிழைக் குரியகும்ப - நெடுமறை முடிக்குமெட் டாதவொரு கும்பேச நிமலப் பிரான் விழைகுவன், சொற்குலவு நிற்குரிய வேறுபுகர் கொள்ளத் தொலைத்தனை யிவட் குரியவை - துங்கமுற் றெத்தகைய வானவரு மேத்தித் தொழப்பொலிவ வெந்த ஞான்றும், விற்குலவு நின்மீன் விரும்புமொரு பொன்னிவள் விசாலமீன் கடையை மண்ணும் - விண்ணும்விழை யும்மிவ ணினக்கதிக மென்பதால் விளைவதொன்றில்லை யென்று, மற்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (4)
455 செய்யகதி ராயிரம் விரித்திரு ளரித்துவரு செம்மனின் னோடொத்தவன் - றிண்ணிய மடங்கலை விரும்பிய துணர்ந்துநீ சேற்றுநில மாக்கள்போல, நொய்யசீ றலவனை விரும்பியப் பெயர்பூண்டு நோக்குறா குழல்வைசீய - நோன்மையி னுதித்திடும் போதுமத யானைவலி நூறிச் செகுக்குஞெண்டு, வெய்யதாயனையுயி ரழித்தளைக் குள்ளொளியும் விழுமிய துணர்ந்தாய் கொலோ - வீபத்தெனும்பெயர் முதற்குறுக லடையாது மேலாய சார்புகோடற், கையகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (5)
456 தெரியவொரு கோளுண் டுமிழ்ந்திடப் பட்டுஞ் சிறந்தவா சாற்பிழைத்துத் - தீயவெஞ்சாபத் தொடக்குண்டு மோகஞ் செறிக்குமல ரான்சாபமே, புரியதென வேற்குமொரு கோட்டும்ப னால்வா யுறுத்துசா பத்தொடக்குண் - டுழிதந்து மொழிதந்து நேர்தருமருங்குலா ரொள்ளணிகொண் ஞெள்ளன்மேவி, விரியவெரு விட்டெறிய வெளிவந்து நீயுறுதன் மேதகைய விவளுணர்ந்து - மெய்ம்மையுண ராளினுனை யாடவா வெனவிளித் தனள்விழை யறஞ்செயாருக், கரியகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (6)
457 எடுத்தவெஞ் செனவனல் கனன்றெழப் பொன்வெதுப் பேறிநிற் சுட்டகாலை - யித்தலச் சோமேச நீர்படிந் தனுகூல மெய்திய தயர்த்துளாயோ, விடுத்தபெரு விதியினான் பக்கபா தஞ்செயல் விடுத்தில னெனச்சிறுவிதி - வெகுளத் தொடர்ந்தநோ யித்தளியுண் மேயநீர் வீட்டியது முட்கொண்டிலாய், தடுத்தபொறி யாளர்செறி யித்தல மகத்துவஞ் சற்றுமுண ராதவன்போற் - றாமதஞ் செயறக்க தன்றுபகை வென்றுமிளிர் தருதுவசம் வானுலகமீ, தடுத்தகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (7)
458 சாற்றொரு தலஞ்செய்த பாதகம் விசேடத் தலத்தடையின் மாயுமந்தத் - தலத்துப் புரிந்தபா தகமிருங் காசித் தலத்தினைச் சாரமாயும், போற்றுமக் காசியிற் செய்தமா பாவமிப் புண்ணிய தலத்துமேவப் - போமென வுரைக்கும் புராணமத் தகையவிப் பொருவாத் தலத்தையுற்றுத், தோற்றுமா மகநீர் துளைந்துபொற் றாமரைத் தோயமுந் தோய்ந்தம்மைபொற், றுணையடி வணங்கிநீ பெறுமிலா பத்தளவு சொல்லவல் லவரார்பொறை, யாற்றுகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (8)
459 துலங்குக்தன் றிருவடிக் கன்புபுரி யதிதிமுற் றோன்றப் புகன்றசாபத் - தொடக்குண்ட காசிபன் மிகும்புனற் காவிரித் துறையிற் படிந்தெழுந்து, கலங்குதலி லாததவ மாற்றமற் றவனுளங் களிகொளுங் காட்சிநல்கிக் - கவற்றிய வலித்தன்மை யுந்தொலைத் தருள்செய்த கருணைப் பிராட்டியிவளான், மலங்குமன னோடவ மதித்தசிறு விதிசொற்ற வலியசா பத்தொடக்கான் - மாறிமா றிக்குறைத றீர்ந்துநீ யுயவருள் வழங்குவா ளெனல்வேண்டுமோ, வலங்குகுட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (9)
460 பொருள்செயிவள் வாவென்று திருவாய் மலர்ந்தவப் பொழுதுநீ வந்தாயிலை - பொலியுநின் முகத்தெதிர்ப் படவஞ்சி னானெனப் போதவுரைசெய்து காத்தேந், தெருள்செயிவ ளின்னும்வந் திலனெனச் சிறிதுகண் சேந்திடிற் புவனத்துளோர் - திக்கிலை நினக்கஞ்ச லென்பாரு மிலையிவள் சினந்தவிர்ப் பாருமில்லை, வெருள்செய்பணி பலவுளொன் றிவள்கொழுந னேவிடின் விழுங்கியே விடுமரைத்த - வீரனு முளானிவை யுணர்ந்துய்ய வேண்டிடின் விரைந்துவந் தடியர்யார்க்கு, மருள்செய்குட மூக்கெங்கண் மங்களாம் பிகையுட னம்புலீ யாடவாவே - யலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|