LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்

அம்புலிப் பருவம்

 

898 கலையமைதி கொடுகடுங் காரிருள் கடிந்துபைங் கழுநீ ருவந்திடுதலாற்
      காகோ தரத்துதர பந்தங் கழிந்துகதிர் காலுரு வமைந்திடுதலா
லிலையமக றண்ணளி யமைந்தெவரு மாலோ னெனப்பொலி தருந்திறத்தா
      லெழிம்பு யங்கவிழ் தரக்கரந் தலைவைத் திலங்குயிர்ப் பயிரருடலான் 
மலைவரு கதிர்ப்பருதி மண்டிலத் தெய்தலான் மதியோ னெனப்பொலிதலான்
      மானேந்தி யாகலா னெங்கள்குரு சாமிதனை மானுவா யாதலாலே
யலைவிலா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலி யாடவாவே. 
(1)
899 வண்ணமா மேருவை வளைத்தலாற் பன்னாளு மகிழப் பொலிந்திடுதலால்
      வான்புலவர் பலர்சூழ் தரப்புது விருந்தாக வாய்ச்சுவை மருந்துதவலா
லெண்ணலா காதசத் துவகுணப் பிரதான னென்னத் திகழ்ந்திடுதலா
      லெக்காலு மிவருரிமை யாயவெறுழ் மிக்கவிமி லேறுபுகர் கொளவிடுதலான்
மண்ணலால் வானகமு மேத்தவுய ரரசுநிழல் வைகலா லெங்கள்குரவன்
      வானகத் துலவுநினை நமையொப்ப னென்றாட வருகவென் றானாதலா
லண்ணலா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 
(2)
900 கூடுநாண் முப்பத்து மூவருக் கமுதுதவு கொள்கையுடை யவனீயிவன் -
      குலவுபல நாள்கடொறு மெண்ணிலார்க் கமுதுதவு கொள்கையுடையவ னிதுவலான்,
மூடுபுற விருடபச் சிறிதுசிறி தாச்சில முருக்கிவரு வாய்நீயிவன் -
      மொய்த்தவக விருள்வலி யொருங்குகெட் டொழிதர முருக்கிவரு பவனுடலிலா,
நாடுமொரு பணிகொளப் பட்டுழல்வை நீயளவி னகுவலிப் பாம்புபூண்டு -
      நவையிலா னிவனிவனை நீயொப்ப தெங்ஙனமதி னட்டகொடி வானளாவி,
யாடுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே -
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலீ யாடவாவே. 
(3)
901 துன்னவரு மடவார் குழர்த்தனீ யிவனளவி றூயமா தவர்குழாத்தன் -
      றொக்கவொரு வருணமுடை யவனீ யிவன்கருணை சூழுமை வருணமுடையா,
னன்னரீ ரெண்கலைய னீயிவனொ ரறுபத்து நான்குகலை யுடையனீயோர் -
      நகுமுய லுளாயிவன் விருதுமுதல் யாவையினு நண்ணுபல சிங்கமுடையான்,
முன்னவுங் கூடாக் களங்கனீ யெவருளமு முன்னுமக ளங்கனிவனான் -
      முத்தனிவ னுக்குநினை யொப்பென மொழிந்திடார் மூடருஞ் சிவலோகமே,
யன்னவா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 
(4)
902 துலங்குபே ரருள்கொளுவி மலமாயை கன்மந் தொலைத்தள விலாதவின்ப -
      சுகவாரி யெவ்வுயிரு மூழ்கச் செயுங்குரவர் சூளா மணிக்குநாளுங்,
கலங்குநிலை யுடையையாய்க் குரவனில் விழைந்துபழி கைக்கொண்ட பாவியாய -
      காமுகா நின்னையொப் பென்றவெம் வாய்க்குமொரு கழுவா யியற்றல்வேண்டு,
மிலங்குநெடு மாதவர்கள் பல்லா யிரங்கோடி யென்னவய னிற்கநின்னை -
      யிவன்வருக வென்றுகட் டளையிட்ட னன்கருதி னெத்தவ மியற்றினாய்மு,
னலங்குமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 
(5)
903 செய்யநங் குருநாத னினையாட வாவென்று திருவாய் மலர்ந்த பொழுதே 
      திருந்தக் குடந்தமுற் றடியனேன் வந்தனென் றிருவுள மெவன் கொலென்று,
நையவுளம் விரையவந் தான்றதிரு வடிபணியி னகுகருணை பூத்துநீறு -
      நளினத் திருக்கரத் தள்ளியுன் னுதலிடுவ னாடுமப் பெரியபேற்றால்,
வெய்யநின் கயரோக மும்பழியு மாறியுயர் மேன்மையும் பெறுவைமுன்போன் -
      மேவமுடி வைத்திடினும் வைக்கும் பெருங்கருணை விள்ளத் தெரிந்தவர்கள்யா,
ரையனா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.
(6)
904 போற்றுநாம் வருகென் றழைத்தபொழு தெய்திலான் புகலிவனெனத்திருக்கண் -
      போதச் சிவந்துழிக் குரவற்பிழைத்ததன் புகரெண்ணி யிருவினைகளுங்,
காற்றுதிரு முன்னர்வர வஞ்சினா னென்றருகு கவினமே வுற்றவனையான் -
      கண்மணியை யனையசுப் பிரமணிய தேவனக் கண்சிவப் பாற்றுவித்தான்,
மாற்றுவா னின்னமு மெனத்தா மதிப்பையேன் மற்றவனு மனையனாவன் -
      வாழ்வகை நினக்குமப் பாலுமுண் டோசெம்பொன் மாடமுடி மேலண்டம்வைத்,
தாற்றுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.
(7)
905 தீட்டுமா புகழுடைச் சின்மய னிவன்கலச் சேடமுகி லினுமுன்னைநாட் -
      சேர்ந்துநீ ருவரகற் றியபழங் கதையமரர் செப்பத் தெரிந்திலாயோ,
கூட்டுமிப் போதுமச் சேடமணு வத்தனை கொடுத்திடப் பெற்றாயெனிற் -
      கொடியகய நோயொழிவ தற்கைய மில்லையிக் கூற்றுண்மை யென்றுணர்தியா,
லீட்டுமா பாதகமும் வேறிடம் பார்க்குமினி யாஞ்சொன்ன வழிவருதியே -
      லெய்தாத மேன்மையிலை மாடத் துகிற்கொடி யெழுந்தசைந் தைந்தருவையு, 
மாட்டுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 
(8)
906 எங்கணா யகன்வருதி யென்றபடி வாரா திருத்தியேல் வெய்யசாப -
      மிடுவனச் சாபநின் குரவனிடு சாபமென் றெண்ணாதி யதுவாழ்த்ததால்,
வெங்கணா டரலிவ னணிந்தவைகள் பலவுண்டு வெய்துயிர்த் தொன்றைநோக்கின் -
      விரையவந் துன்னைப் பிடித்துக் கடித்துடன் விழுங்கியிடு மீளாமலே,
திங்கணா யகயா முரைப்பதுவும் வேண்டுமோ சிறுவிதி மகச்சாலையிற் -
      றேய்ப்புண்ட தத்தனையு மின்றயர்த் தாய்கொலோ செங்கண்மால் கைகுவிக்கு,
மங்கணா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலி யாடவாவே. 
(9)
907 வார்க்குங்கு மக்கொங்கை யுமையாள் பசுக்கோல மாற்றிமுற் கோலமுதவு - 
      மாத்தல மிதன்கணொளிர் குருதரிச னங்கருது வார்க்குமள வாதவின்பம்,
போர்க்குமொரு சிவலிங்க தரிசன மருட்பெருமை பூண்டசங் கமதரிசனம்,
      பொற்பக் கிடைக்குமித் தலமனைய தலமெவண் போய்ப்பெறுவ தோதுமதியே,
சீர்க்குமொரு நவகோடி சித்தபுர மென்பதுந் தேர்ந்திலாய் தேருமாறு -
      செப்பவுந் தேர்கிலா யிதுநன்மை யன்றெழு திரைக்கட லெனப்பன்முரச,
மார்க்குமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே 
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 
(10)

 

898 கலையமைதி கொடுகடுங் காரிருள் கடிந்துபைங் கழுநீ ருவந்திடுதலாற்

      காகோ தரத்துதர பந்தங் கழிந்துகதிர் காலுரு வமைந்திடுதலா

லிலையமக றண்ணளி யமைந்தெவரு மாலோ னெனப்பொலி தருந்திறத்தா

      லெழிம்பு யங்கவிழ் தரக்கரந் தலைவைத் திலங்குயிர்ப் பயிரருடலான் 

மலைவரு கதிர்ப்பருதி மண்டிலத் தெய்தலான் மதியோ னெனப்பொலிதலான்

      மானேந்தி யாகலா னெங்கள்குரு சாமிதனை மானுவா யாதலாலே

யலைவிலா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலி யாடவாவே. 

(1)

899 வண்ணமா மேருவை வளைத்தலாற் பன்னாளு மகிழப் பொலிந்திடுதலால்

      வான்புலவர் பலர்சூழ் தரப்புது விருந்தாக வாய்ச்சுவை மருந்துதவலா

லெண்ணலா காதசத் துவகுணப் பிரதான னென்னத் திகழ்ந்திடுதலா

      லெக்காலு மிவருரிமை யாயவெறுழ் மிக்கவிமி லேறுபுகர் கொளவிடுதலான்

மண்ணலால் வானகமு மேத்தவுய ரரசுநிழல் வைகலா லெங்கள்குரவன்

      வானகத் துலவுநினை நமையொப்ப னென்றாட வருகவென் றானாதலா

லண்ணலா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 

(2)

900 கூடுநாண் முப்பத்து மூவருக் கமுதுதவு கொள்கையுடை யவனீயிவன் -

      குலவுபல நாள்கடொறு மெண்ணிலார்க் கமுதுதவு கொள்கையுடையவ னிதுவலான்,

மூடுபுற விருடபச் சிறிதுசிறி தாச்சில முருக்கிவரு வாய்நீயிவன் -

      மொய்த்தவக விருள்வலி யொருங்குகெட் டொழிதர முருக்கிவரு பவனுடலிலா,

நாடுமொரு பணிகொளப் பட்டுழல்வை நீயளவி னகுவலிப் பாம்புபூண்டு -

      நவையிலா னிவனிவனை நீயொப்ப தெங்ஙனமதி னட்டகொடி வானளாவி,

யாடுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே -

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலீ யாடவாவே. 

(3)

901 துன்னவரு மடவார் குழர்த்தனீ யிவனளவி றூயமா தவர்குழாத்தன் -

      றொக்கவொரு வருணமுடை யவனீ யிவன்கருணை சூழுமை வருணமுடையா,

னன்னரீ ரெண்கலைய னீயிவனொ ரறுபத்து நான்குகலை யுடையனீயோர் -

      நகுமுய லுளாயிவன் விருதுமுதல் யாவையினு நண்ணுபல சிங்கமுடையான்,

முன்னவுங் கூடாக் களங்கனீ யெவருளமு முன்னுமக ளங்கனிவனான் -

      முத்தனிவ னுக்குநினை யொப்பென மொழிந்திடார் மூடருஞ் சிவலோகமே,

யன்னவா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 

(4)

902 துலங்குபே ரருள்கொளுவி மலமாயை கன்மந் தொலைத்தள விலாதவின்ப -

      சுகவாரி யெவ்வுயிரு மூழ்கச் செயுங்குரவர் சூளா மணிக்குநாளுங்,

கலங்குநிலை யுடையையாய்க் குரவனில் விழைந்துபழி கைக்கொண்ட பாவியாய -

      காமுகா நின்னையொப் பென்றவெம் வாய்க்குமொரு கழுவா யியற்றல்வேண்டு,

மிலங்குநெடு மாதவர்கள் பல்லா யிரங்கோடி யென்னவய னிற்கநின்னை -

      யிவன்வருக வென்றுகட் டளையிட்ட னன்கருதி னெத்தவ மியற்றினாய்மு,

னலங்குமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 

(5)

903 செய்யநங் குருநாத னினையாட வாவென்று திருவாய் மலர்ந்த பொழுதே 

      திருந்தக் குடந்தமுற் றடியனேன் வந்தனென் றிருவுள மெவன் கொலென்று,

நையவுளம் விரையவந் தான்றதிரு வடிபணியி னகுகருணை பூத்துநீறு -

      நளினத் திருக்கரத் தள்ளியுன் னுதலிடுவ னாடுமப் பெரியபேற்றால்,

வெய்யநின் கயரோக மும்பழியு மாறியுயர் மேன்மையும் பெறுவைமுன்போன் -

      மேவமுடி வைத்திடினும் வைக்கும் பெருங்கருணை விள்ளத் தெரிந்தவர்கள்யா,

ரையனா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.

(6)

904 போற்றுநாம் வருகென் றழைத்தபொழு தெய்திலான் புகலிவனெனத்திருக்கண் -

      போதச் சிவந்துழிக் குரவற்பிழைத்ததன் புகரெண்ணி யிருவினைகளுங்,

காற்றுதிரு முன்னர்வர வஞ்சினா னென்றருகு கவினமே வுற்றவனையான் -

      கண்மணியை யனையசுப் பிரமணிய தேவனக் கண்சிவப் பாற்றுவித்தான்,

மாற்றுவா னின்னமு மெனத்தா மதிப்பையேன் மற்றவனு மனையனாவன் -

      வாழ்வகை நினக்குமப் பாலுமுண் டோசெம்பொன் மாடமுடி மேலண்டம்வைத்,

தாற்றுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.

(7)

905 தீட்டுமா புகழுடைச் சின்மய னிவன்கலச் சேடமுகி லினுமுன்னைநாட் -

      சேர்ந்துநீ ருவரகற் றியபழங் கதையமரர் செப்பத் தெரிந்திலாயோ,

கூட்டுமிப் போதுமச் சேடமணு வத்தனை கொடுத்திடப் பெற்றாயெனிற் -

      கொடியகய நோயொழிவ தற்கைய மில்லையிக் கூற்றுண்மை யென்றுணர்தியா,

லீட்டுமா பாதகமும் வேறிடம் பார்க்குமினி யாஞ்சொன்ன வழிவருதியே -

      லெய்தாத மேன்மையிலை மாடத் துகிற்கொடி யெழுந்தசைந் தைந்தருவையு, 

மாட்டுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 

(8)

906 எங்கணா யகன்வருதி யென்றபடி வாரா திருத்தியேல் வெய்யசாப -

      மிடுவனச் சாபநின் குரவனிடு சாபமென் றெண்ணாதி யதுவாழ்த்ததால்,

வெங்கணா டரலிவ னணிந்தவைகள் பலவுண்டு வெய்துயிர்த் தொன்றைநோக்கின் -

      விரையவந் துன்னைப் பிடித்துக் கடித்துடன் விழுங்கியிடு மீளாமலே,

திங்கணா யகயா முரைப்பதுவும் வேண்டுமோ சிறுவிதி மகச்சாலையிற் -

      றேய்ப்புண்ட தத்தனையு மின்றயர்த் தாய்கொலோ செங்கண்மால் கைகுவிக்கு,

மங்கணா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலி யாடவாவே. 

(9)

907 வார்க்குங்கு மக்கொங்கை யுமையாள் பசுக்கோல மாற்றிமுற் கோலமுதவு - 

      மாத்தல மிதன்கணொளிர் குருதரிச னங்கருது வார்க்குமள வாதவின்பம்,

போர்க்குமொரு சிவலிங்க தரிசன மருட்பெருமை பூண்டசங் கமதரிசனம்,

      பொற்பக் கிடைக்குமித் தலமனைய தலமெவண் போய்ப்பெறுவ தோதுமதியே,

சீர்க்குமொரு நவகோடி சித்தபுர மென்பதுந் தேர்ந்திலாய் தேருமாறு -

      செப்பவுந் தேர்கிலா யிதுநன்மை யன்றெழு திரைக்கட லெனப்பன்முரச,

மார்க்குமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே 

      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே. 

(10)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.