இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று விளக்கமளித்தார். அப்போது நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் . எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து வருவதாகப் பேசினார். அவர்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில், அவையில் உறுப்பினர்கள் நடந்து கொள்வதாக பிரதமர் குற்றம்சாட்டினார். மேலும் பாஜக வை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் பிரதமருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பிரதமரை திருடன் என அருண் ஜேட்லி கூற, கோபம் அடைந்த பிரதமர் மன்மோகன் சிங், எந்த நாட்டிலாவது, பிரதமரை, எம்.பிக்கள் திருடன் என கூறியது உண்டா என ஆக்ரோசமாக பேசினார். அதற்கு பதில் அளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி, எம்.பி.க்களுக்கு, எந்த ஒரு பிரதமரும் பணம் கொடுத்தது உண்டா என பதிலடி கொடுத்தார்.மேலும் நிலக்கரி சுரங்க அமைச்சக கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக பதில் அளித்த பிரதமர், நிலக்கரி அமைச்சக கோப்புகளுக்கு தாம் பாதுகாவலர் அல்ல என்று தெரிவித்தார். எனினும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு முயற்சிக்கவில்லை என்றும் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
|