LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

அன்னைப் பத்து - ஆத்தும பூரணம்

 

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் 
நாதப் பறையினர் அன்னே என்னும் 
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் 
நாதரிந் நாதனார் அன்னே என்னும். 338 
கண்ணஞ் சனத்தார் கருணைக் கடலினர் 
உள்நின் றுருக்குவர் அன்னே என்னும் 
உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் 
கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 339 
நித்த மணாளர் நிரம்ப அழகியர் 
சித்தத் திருப்பரால் அன்னே என்னும் 
சித்தத் திருப்பவர் தென்னன் பெரும்துறை 
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 340 
ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் 
வேடம் இருந்தவா றன்னே என்னும் 
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் 
வாடும் இதுவென்ன அன்னே என்னும். 341 
நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் 
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும் 
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை 
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 342 
உன்னற் கரியசீர் உத்தர மங்கையர் 
மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும் 
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் 
என்ன அதியசம் அன்னே என்னும். 343 
வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் 
பள்ளிக்குப் பாயந்தர் அன்னே என்னும் 
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டான் 
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 344 
தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் 
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் 
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் 
தாள மிருந்தவா றன்னே என்னும். 345 
தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் 
ஐயம் புகுவரால் அன்னே என்னும் 
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் 
நையுமிது வென்னே அன்னே என்னும். 346 
கொன்றை மதியமும் கூவின மத்தமும் 
துன்றிய சென்னியர் அன்னே என்னும் 
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே 
இன்றெனக் கானவா றன்னே என்னும். 347 

 

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் 

நாதப் பறையினர் அன்னே என்னும் 

நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் 

நாதரிந் நாதனார் அன்னே என்னும். 338 

 

கண்ணஞ் சனத்தார் கருணைக் கடலினர் 

உள்நின் றுருக்குவர் அன்னே என்னும் 

உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் 

கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 339 

 

நித்த மணாளர் நிரம்ப அழகியர் 

சித்தத் திருப்பரால் அன்னே என்னும் 

சித்தத் திருப்பவர் தென்னன் பெரும்துறை 

அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 340 

 

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் 

வேடம் இருந்தவா றன்னே என்னும் 

வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் 

வாடும் இதுவென்ன அன்னே என்னும். 341 

 

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் 

பாண்டிநன் னாடரால் அன்னே என்னும் 

பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை 

ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 342 

 

உன்னற் கரியசீர் உத்தர மங்கையர் 

மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும் 

மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் 

என்ன அதியசம் அன்னே என்னும். 343 

 

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் 

பள்ளிக்குப் பாயந்தர் அன்னே என்னும் 

பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டான் 

உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 344 

 

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் 

ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் 

ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் 

தாள மிருந்தவா றன்னே என்னும். 345 

 

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் 

ஐயம் புகுவரால் அன்னே என்னும் 

ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் 

நையுமிது வென்னே அன்னே என்னும். 346 

 

கொன்றை மதியமும் கூவின மத்தமும் 

துன்றிய சென்னியர் அன்னே என்னும் 

துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே 

இன்றெனக் கானவா றன்னே என்னும். 347 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.