நவம்பர் 26-ந் தேதி முதல் வழக்கம் போல் என்ஜினீயரிங் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர்-டிசம்பரில் இரண்டாவது பருவ செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.
கஜா புயலினால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்று இயங்கும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு புதிய தேர்வுத் தேதிகள் 22ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 23 கல்லூரிகள் நீங்கலாக மீதமுள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது (குறிப்பிட்ட 23 கல்லூரிகளின் தேர்வு கோடு எண்: 8201, 8202, 8203, 8204, 8208, 8211, 8215, 8216, 8217, 8222, 8226, 8123, 828, 8144, 8302, 9103, 9109, 9112, 9114, 9116, 9117, 9124, 9126).
இந்நிலையில் வரும் 26- ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று இயங்கும் எல்லா என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
|