LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 862 - நட்பியல்

Next Kural >

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)
மணக்குடவர் உரை:
சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?.
தேவநேயப் பாவாணர் உரை:
அன்பு இலன் - தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; ஆன்ற துணை இலன் - சிறந்த துணையில்லதவனாகவும், தான் துவ்வான்-அவற்றோடுதானும் வலிமையில்லாதவனாகவும் உள்ள ஒருவன்; ஏதிலான் துப்பு என்பரியும்- பகைவன் வலிமையை எங்ஙனந் தொலைப்பான்? இம்மூன்று நிலைமையையும் ஒருங்கே யுடையவன் எளிதாய் வெல்லப்படுவான் என்பதாம், ஆனுதல் நிறைதல் அல்லது போதியதாதல், துத்தல் வலியுறுத்தல். ’துப்பு’ தொழிற்பெயரடிப் பண்புப் பெயர்.
கலைஞர் உரை:
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.
சாலமன் பாப்பையா உரை:
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.
Translation
No kinsman's love, no strength of friends has he; How can he bear his foeman's enmity?.
Explanation
How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?.
Transliteration
Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan Enpariyum Edhilaan Thuppu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >