LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அனுதினமும்

அனுதினமும்

 

நாம் பம்பரமாய் சுத்தும்போது கூட

நம் கவனத்தில் கட்டாயமாக சிக்கிகொள்ளும்

பல்வேறு அற்புத மனிதர்கள் அவர்கள்….

 

ஏதோ ஒரு நெடுஞ்சாலை நிறுத்தத்தில்

வாட்டும் வறுமையின் இறுக்கத்தில்

கிடைத்த இரண்டு நிமிட இடைவெளியில்

கையில் பலா சுளைகளோடு படபடவென்று ஏறி

பேருந்தினை மொய்க்கும் பெருமக்கள் கூட்டத்தோர் !!!

 

ஓட்டிச் செல்லும் இருசக்கர வாகனத்தின்

சைடு ஸ்டேண்டினை , கண்சிவக்க கோபமேறி

கண்டிப்புடன் எடுத்துவிடச் சொல்லும்

அந்த முன் பின் தெரியாத நண்பர்கள் !!!

 

தலை நறைத்துப் போன மனிதர்

தன் மகனோடு தார்ச்சாலையில் செல்வதை

பூத்த கண்களுடன் ஏக்கமாய்ப் பார்த்து

உடல் மெலிந்த நாதியற்ற முதியவர்கள் !!!

 

உலக நடப்புகளில் மூக்கைத் திணிக்க முயன்று,

முடியாமல் தங்கள் எழுத்துக்களில் திணித்து

ஆதங்கத்தை தேற்றிக்கொள்ளும் பல நூறு

விளிம்பு நிலை எழுத்தாளர் கூட்டம் !!!

 

தாமதமாக வந்திறங்கும் ஐ.டி பெண்ணிற்கு

பாதுகாப்பாக இரவு பதினோரு மணி வரை

பணியில் ஈடுபடும் குறிப்பிட்ட பகுதியின்

பரிவுடைய மளிகைக் கடை அண்ணாச்சிகள் !!!

 

நெடுந்தூர நள்ளிரவு பயணித்தின் போது

குக்கிராம நெடுவாயிலில் இறங்க வேண்டிய

ஒரே ஒரு பயணியை சரியாக இறக்கிவிடும்

விரைவுப்பேருந்துகளின் நேசமுள்ள நடத்துனர்கள் !!!

 

யாவரும் காய்ச்சிய இரும்பினை

சுத்தியலால் அடித்தாற்போல்

அனுதினமும் நம் நெஞ்சில் தடம் பதித்து

நீங்கா இடம் பிடிக்கும் மறக்க முடியாதவர்கள் !!!!

 

-    துங்கபுரம் K சிவசங்கர்.

by Swathi   on 2014-04-10  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.