|
||||||||
அனுதினமும் |
||||||||
அனுதினமும்
நாம் பம்பரமாய் சுத்தும்போது கூட நம் கவனத்தில் கட்டாயமாக சிக்கிகொள்ளும் பல்வேறு அற்புத மனிதர்கள் அவர்கள்….
ஏதோ ஒரு நெடுஞ்சாலை நிறுத்தத்தில் வாட்டும் வறுமையின் இறுக்கத்தில் கிடைத்த இரண்டு நிமிட இடைவெளியில் கையில் பலா சுளைகளோடு படபடவென்று ஏறி பேருந்தினை மொய்க்கும் பெருமக்கள் கூட்டத்தோர் !!!
ஓட்டிச் செல்லும் இருசக்கர வாகனத்தின் சைடு ஸ்டேண்டினை , கண்சிவக்க கோபமேறி கண்டிப்புடன் எடுத்துவிடச் சொல்லும் அந்த முன் பின் தெரியாத நண்பர்கள் !!!
தலை நறைத்துப் போன மனிதர் தன் மகனோடு தார்ச்சாலையில் செல்வதை பூத்த கண்களுடன் ஏக்கமாய்ப் பார்த்து உடல் மெலிந்த நாதியற்ற முதியவர்கள் !!!
உலக நடப்புகளில் மூக்கைத் திணிக்க முயன்று, முடியாமல் தங்கள் எழுத்துக்களில் திணித்து ஆதங்கத்தை தேற்றிக்கொள்ளும் பல நூறு விளிம்பு நிலை எழுத்தாளர் கூட்டம் !!!
தாமதமாக வந்திறங்கும் ஐ.டி பெண்ணிற்கு பாதுகாப்பாக இரவு பதினோரு மணி வரை பணியில் ஈடுபடும் குறிப்பிட்ட பகுதியின் பரிவுடைய மளிகைக் கடை அண்ணாச்சிகள் !!!
நெடுந்தூர நள்ளிரவு பயணித்தின் போது குக்கிராம நெடுவாயிலில் இறங்க வேண்டிய ஒரே ஒரு பயணியை சரியாக இறக்கிவிடும் விரைவுப்பேருந்துகளின் நேசமுள்ள நடத்துனர்கள் !!!
யாவரும் காய்ச்சிய இரும்பினை சுத்தியலால் அடித்தாற்போல் அனுதினமும் நம் நெஞ்சில் தடம் பதித்து நீங்கா இடம் பிடிக்கும் மறக்க முடியாதவர்கள் !!!!
- துங்கபுரம் K சிவசங்கர். |
||||||||
by Swathi on 2014-04-10 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|