LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதட்டம் நீடிக்கிறது!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேலும் பல இளம்பெண்கள் வர இருப்பதாக தகவல் வெளியானதால்  பதட்டம் நிலவிய வண்ணம் உள்ளது.  உளவுத்துறை, அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கேரளாவில் போராட்டம் வெடித்துள்ளது. 

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. தொலைக்காட்சி நிருபர் கவிதா, ரஹ்னா பாத்திமா ஆகிய 2 பெண்களையும் போலீசார் கவச உடை அணிவித்து சன்னிதானம் வரை அழைத்துச் சென்றனர். பக்தர்களின் எதிர்ப்பு மற்றும் தந்திரிகளின் போராட்டம் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 

இந்த நிலையில்  மேலும் பல இளம்பெண்கள் சபரிமலைக்கு வர இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பக்தர்களையும் தீவிர விசாரணைக்கு பின்னரே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழி முழுவதும் ஆங்காங்கே உளவுத்துறை போலீசாரும்,  கமாண்டோ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 இதற்கிடையே சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக மத ஒற்றுமையை சீரழிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்படுவதாக திருவனந்தபுரம் கமிஷனர் பிரகாஷ்ஷூக்கு ஏராளமான புகார்கள் வந்தன. 

 இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மியூசியம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீஸ் விசாரணையில், போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரவி வருவது தெரியவந்தது. இதுதொடர்பாக 12 பேர் மீது மியூசியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர்கள் பயன்படுத்திய செல்போன் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் கோயிலை மூடிவிடுவேன் என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தந்திரியில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

இதுகுறித்து, தேவசம்போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் கூறியதாவது:

 ‘சபரிமலை கோயிலை மூடிவிடுவேன் என்று தந்திரி கூறியது கடும் கண்டனத்திற்கு உரியது. சபரிமலை கோயிலை மூட பந்தளம் அரண்மனைக்கோ, தந்திரிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. 18ம் படிக்கு அருகே மேல்சாந்தியின் உதவியாளர்கள் பூஜைகளை நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தியது சபரிமலை கோயிலுக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது’ 

இவ்வாறு அவர் கூறினார்.

மாளிகைபுரம் மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி கூறும் போது, "சபரிமலை கோயில் நடையை மூடுவேன் என்று தந்திரி கூறியதில் எந்த தவறும் இல்லை. சபரிமலை கோயில் ஆச்சாரம் மீறப்பட்டால் கோயிலை மூடுவதற்கு தந்திரிக்கு முழு உரிமை உண்டு. 18ம் படிக்கு அருகே எங்கள் உதவியாளர்கள் போராட்டம் நடத்தியதில் எந்த தவறும் இல்லை. மோசமான சூழ்நிலை ஏற்படும் போது வேறு வழியில்லாமல் தான் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இந்த போராட்டத்தில் சபரிமலை கோயிலுக்கு எந்த களங்கமும் ஏற்படவில்லை" என்றார். 

இதற்கிடையில் சபரிமலையில் போராட்டம் நடத்திய பக்தர்களுக்கு தேவசம் போர்டு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிய ரஹ்னாபாத்திமா பம்பையில்  கூறுகையில், ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சபரிமலை வந்தாகவும், முடியாததால் தான் கொண்டுவந்த இருமுடிக் கட்டை அங்கேயே விட்டுச் செல்வதாகவும் கூறினார். பம்பையில் ரஹ்னா விட்டுச் சென்ற இருமுடிக் கட்டை போலீசார் பரிசோதித்தனர். அதில் நெய்த் தேங்காய், அரிசி போன்ற பூஜைப் பொருட்களுக்குப் பதிலாக ஆரஞ்சு மற்றும் கொய்யாப் பழங்கள் இருந்தன.

சபரிமலைக்கு செல்ல முயன்ற மாடலிங் அழகி ரஹ்னா பாத்திமா கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பிஎஸ்என்எல் குடியிருப்பில் தான் குடும்பத்துடன் தங்கி உள்ளார். 

இந்த நிலையில் அவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற கூறி பி.எஸ்.என்.எல். பேஸ்புக் பக்கத்தில் மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

 இதுகுறித்து பி.எஸ்.என்.எல். விடுத்துள்ள அறிக்கையில், "அலுவலகத்திற்கு வெளியே தங்களது ஊழியரின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்க முடியாது" என்று தெரிவித்து உள்ளது.

இந்த பரபரப்பிற்கு இடையே  பிற்பகல் 2 மணியளவில் பம்பை போலீஸ் நிலையத்திற்கு 2 இளம்பெண்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் கொல்லம் மாவட்டம் சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சு (38). இவர் கேரள தலித் மகளிர் கூட்டமைப்பு தலைவர் ஆவார். 

இருவரும் தரிசனத்திற்கு வந்திருப்பதாகவும், தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டுமென்றும் போலீசாரிடம் கூறினர். போலீசார் முந்தைய தினங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து அவர்களிடம் விளக்கினர்.

இதையடுத்து மஞ்சுவுடன் வந்தவர் திரும்பிச் சென்று விட்டார். ஆனால் மஞ்சு, தரிசனத்திற்கு சென்றே தீருவேன் என்று பிடிவாதமாக கூறினார். 

இதனால் மஞ்சுவை அழைத்துச் செல்வது பறறி போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால், தொடர் பிரச்னை, விசாரணை ஆகியவற்றை தொடர்ந்து அவரும் மாலையில் திரும்பிச் சென்றார். 

சபரிமலைக்கு செல்ல முயன்ற ரஹ்னா பாத்திமா, பேஸ்புக்கில் மத உணர்வைத் தூண்டியதாக ராதாகிருஷ்ணன் என்பவர் பத்தனம்திட்டா போலீஸ் எஸ்பி நாராயணனிடம் புகார் அளித்தார். இதையடுத்து ரஹ்னா பாத்திமா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சியைச் சேர்ந்த லதா என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருமுடி கட்டிக்கொண்டு,  சன்னிதானம் வந்தார். அவருக்கு 50 வயதுக்கு குறைவாக இருக்கும்் என்று நினைத்து பக்தர்கள் தடுத்தனர். ஆனால், அவர் தனது ஆதார் கார்டைக்  காட்டிய பின்னரே அனுமதித்தனர்.

by Mani Bharathi   on 21 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.