|
||||||||
அரிசி அப்பளம்(arisi papad) |
||||||||
தேவையானவை : பச்சை அரிசி - 1 கிலோ
பெருங்காயம் - சிறிதளவு
எலுமிச்சம்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
எள்ளு - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் அரிசியை அரைமணி நேரம் நீர்விட்டு ஊறவிட வேண்டும், நீரை வடிய வைத்து அரிசியை எடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசியை வறுத்து எடுக்கவும். தேவையான நீரில் உப்பையும், பெருங்காயத்தையும் கரைத்துக் கொள்ளவும்.
2. நீரையும் தேய்த்த எள்ளையும், வறுத்து வைத்திருக்கும் அரிசியுடன் சேர்த்துப் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டி, உரலில் போட்டு புரட்டிக் கொடுத்து இடித்துக் கொள்ளவேண்டும்.
3.அரிசியை இடிக்கும்போது எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அம்மியில் வைத்து தேங்காய் எண்ணெய்த் தொட்டுக் கொண்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
4.இடித்து வைத்துள்ள மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அரிசிமாவில் தோய்த்து அப்பளக் கட்டையினால் உருட்டி வட்ட வடிவமான அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும்.சுத்தமான துணியை நிழலில் பரப்பி அதன் மீது அப்பளங்களைக் காயவிட வேண்டும்.
|
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|