LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழறிஞர்கள் Print Friendly and PDF

1500 பாடல்கள் எழுதிய கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா!

கவிஞர் முத்துலிங்கம் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 1500 பாடல்கள் எழுதியவர். காதல், தத்துவம், பக்தி, கொண்டாட்டம் என்று எல்லா வகைப் பாடல்களும் எழுதியவர்.குறிப்பாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நிறையப் பாடல்கள்  எழுதி அவரின் அன்பைப் பெற்று அரசவைக் கவிஞராக இருந்தவர். நான்கு புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கணபதி நெய் நிறுவனம் இணைந்து நேற்று கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நாரத கான சபாவில் நடந்த விழாவில் அத்தனை இருக்கைகளும் நிரம்பியிருந்தன. தமிழ் சினிமா உலகின் முன்னணித் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் பிரபலங்கள். 

கவிஞரும், எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாக,செயற்குழுவினரும் கே.பாக்யராஜ் அவர்கள் வடிவமைப்பு செய்து, ராம்ராஜ் நிறுவனம் தயாரித்துத் தந்த தமிழ் எழுத்துக்கள் அச்சடித்த வேட்டி சட்டையில் இருந்தார்கள். 

மேடையில் எழுத்தாளர் சங்கம் சார்பாகக் கவிஞருக்கு மோதிரம் அணிவித்து, பதக்கம் அணிவிக்கப்பட்டது. அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
by hemavathi   on 02 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப்  புகழ் வணக்கம்  - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப் புகழ் வணக்கம் - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
'வைரமுத்தியம்' - கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கியம் குறித்து பன்னாட்டுக் கருத்தரங்கம் 'வைரமுத்தியம்' - கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கியம் குறித்து பன்னாட்டுக் கருத்தரங்கம்
ஜவ்வாதுமலையில் பிற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு. ஜவ்வாதுமலையில் பிற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு.
பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு. பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு.
வீரமாமுனிவர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர். வீரமாமுனிவர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.