இசை புயல் ஏ.ஆர் ரகுமான் நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி தனது முகநூல் பக்கத்தில் நேரடியாக ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் என தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது.
இந்நிலையில் லைவ் ஸ்ட்ரீமில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் நிகழ்ச்சி தொகுப்பாளார் சலீம் சுலைமான் ரசிகர்களின் கேள்விகளை படிக்க, அவர் பதில் சொல்ல ரசிகர்கள் படு உற்சாகமாக கேள்விகளை நிறப்பினர். அதில் சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் இதோ உங்கள் பார்வைக்கு,
பாம்பே திரைப்படம் போல் மீண்டும் ஒரு படத்திற்கு இசையமைக்க விரும்புகிறீர்களா?
இல்லை. அந்த தருணம் முடிந்து விட்டது. மாற்றங்கள் நிகழ்கின்றன.
ஆனால் ரசிகர்கள் ’ரோஜா’, ’பாம்பே’ படங்கள் போல் எதிர்பார்க்கின்றனரே?
இசை, கான்செப்ட், ஸ்க்ரீன்ப்ளே பொருத்தது. எல்லாவற்றிர்கும் மேல் இப்போது மக்களை ஓரிடத்தில் தக்க வைப்பது மிகவும் கடினம். இசை கேட்கும் முறையே மாறிவிட்டது.
உங்களுக்கு தற்போது மாறி வரும் டிஜிட்டல் உலகை பிடித்திருக்கிறதா ?
கண்டிப்பாக அடுத்து அடுத்து நடப்பது உடனுக்குடன் தெரிகிறது. மக்களின் மனநிலையை உடனுக்குடன் புரிந்து கொள்ள முடிகிறது.
உங்களை கதாநாயகனாக பார்க்க ஆசை...
கண்டிப்பா நோ. எனக்கு இசை போதும். மகிழ்ச்சி. ஆனாலும் வேண்டாம். ஒரு படத்திற்கு கதை எழுதுகிறேன். நானே தயாரிக்க போகிறேன் அதுவே போதும். ஆனால் உங்கள் கேள்வியால் நான் க்ளீன் போல்ட்.
நன்றி
நீங்கள் இயக்குநரின் சாய்சை ஏற்றுக்கொள்வீர்களா? அவர்களை நம்புவீர்களா?
கண்டிப்பாக, சில நேரங்களில் அப்படி இயக்குநர் சாய்ஸில் வெளிவந்த பாடல் தான் ‘முன்பே வா அன்பே வா’. காதல் பாடல் ஆனால் சோகமாக இருப்பது போல் எனக்கு தோன்றியது. ஆனால் இயக்குநருக்கு பிடித்திருந்தது. அந்த வெளியாகி பாடல் செம ஹிட் பெற்றது.
|