LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன்

எங்காவது சென்று
நுழைவுச் சீட்டு வாங்க வேண்டுமா ?

பிரதான வாயிலில்
அதில் பாதியைக் கிழித்து உள்ளனுப்புவார்களா ?

உள்ளே கூட்ட நெரிசலா ?
இல்லை
வெறுமையாய் இருக்குமா ?

ஏதேனும் ஒரு கட்சியின்
உறுப்பினர் படிவம் நிரப்பி
அடையாள அட்டை பெறுவதா ?

மறியல் பொதுக்கூட்டம்
ஊர்வலம் மாநாடு
தவறாமல் பங்கேற்பதா ?

நாமே கருத்துதிர்த்து
நாமே சாலையை மறித்தால்
தனிக்குற்றவாளியாகி
சிறைக்கொட்டடி காண வேண்டியதுதானா ?

பாதிப்பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில்
உண்ணாவிரதமிருந்தால்
ஊரார் கவனிப்பார்களா ?

பத்தைம்பது அடியார்களோடு சென்று
தலைமை அலுவலகத்தில்
இணைவதுதான் வழியா ?

தனியொருவனுக்கென்று
அரசியல் இருக்க முடியாதா ?

அரசியலில் நுழைவது
அரசியலில் நுழைவது என்கிறார்களே...
அது எப்படி ஐயா ?

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  1 Comments
Tags: Arasiyal Kavithaigal   Political Kavithai   அரசியல் கவிதைகள்              
 தொடர்புடையவை-Related Articles
அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன் அரசியலில் நுழைவது - கவிஞர் மகுடேசுவரன்
செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன் செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன்
அரசியல்வாதிகளை அரசியல்வாதிகளை
கருத்துகள்
22-Feb-2020 13:10:19 J.syed Abuthahir said : Report Abuse
No
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.