LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிலை விளக்கம்

அரவிந்த் கேஜ்ரிவால் சற்றுமுன் அழைத்தார். சுமார் பதினைந்து நிமிடங்கள் நாடாளுமன்றத் தேர்தல், ஹரியானா (ரோடக்) பேரணி, தமிழக அரசியல் சூழல் உள்ளிட்ட விடயங்கள் குறித்துப் பேசினோம். ஏழு தமிழர் விடுதலை குறித்த அனைத்துத் தகவல்களையும் சுருக்கமாகத் தெரிவித்து, உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமெனக் கோரினேன். 


தனது பத்திரிகையாளர் சந்திப்பு பொருளாதாரப் பிரச்சினை பற்றியது என்றும், ஒரு பத்திரிகையாளர் திடீரென ஏழு தமிழர் விடுதலை பற்றிக் கேட்டதும், என்னால் தெளிவாக சிந்தித்து பதில் சொல்ல முடியாமற் போயிற்று என்றும் சொன்னார். "உயிர்வலி" ஆவணப்படமும், வேறு சில ஆதாரங்களும் அனுப்புகிறேன் என்றேன்.


அந்த உண்மைகளை உள்வாங்கிவிட்டு, உளமார்ந்த நிலைப்பாட்டோடு தமிழ் மக்களை நேரில்
சந்தித்து (தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வரும்போது) நான் பேசுவதுதானே உண்மையாகவும், முறையாகவும் இருக்கும் என்றார். நான் முற்றிலுமாக உடன்பட்டேன். அவரது உண்மைத் தன்மையும், நேர்மைத் திறனும், "மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் நிலைப்பாடும் என்னைக் கவர்கின்றன.

 

-எஸ்பி. உதயகுமார்

by Swathi   on 24 Feb 2014  0 Comments
Tags: Aravind Kejriwal   Udhayakumar   SP Udhayakumar   அரவிந்த் கேஜ்ரிவால்   உதய குமார்        
 தொடர்புடையவை-Related Articles
சுப. உதயகுமார் மற்றும் மை. பா. ஜேசுராஜ் சொத்து விபரம் சுப. உதயகுமார் மற்றும் மை. பா. ஜேசுராஜ் சொத்து விபரம்
அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிலை விளக்கம் அரவிந்த் கேஜ்ரிவால் தன்னிலை விளக்கம்
டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்! டெல்லி முதல்வராக சனிக்கிழமை பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்! டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் கெஜ்ரிவால்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.