அரவிந்த் கேஜ்ரிவால் சற்றுமுன் அழைத்தார். சுமார் பதினைந்து நிமிடங்கள் நாடாளுமன்றத் தேர்தல், ஹரியானா (ரோடக்) பேரணி, தமிழக அரசியல் சூழல் உள்ளிட்ட விடயங்கள் குறித்துப் பேசினோம். ஏழு தமிழர் விடுதலை குறித்த அனைத்துத் தகவல்களையும் சுருக்கமாகத் தெரிவித்து, உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமெனக் கோரினேன்.
தனது பத்திரிகையாளர் சந்திப்பு பொருளாதாரப் பிரச்சினை பற்றியது என்றும், ஒரு பத்திரிகையாளர் திடீரென ஏழு தமிழர் விடுதலை பற்றிக் கேட்டதும், என்னால் தெளிவாக சிந்தித்து பதில் சொல்ல முடியாமற் போயிற்று என்றும் சொன்னார். "உயிர்வலி" ஆவணப்படமும், வேறு சில ஆதாரங்களும் அனுப்புகிறேன் என்றேன்.
அந்த உண்மைகளை உள்வாங்கிவிட்டு, உளமார்ந்த நிலைப்பாட்டோடு தமிழ் மக்களை நேரில்சந்தித்து (தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வரும்போது) நான் பேசுவதுதானே உண்மையாகவும், முறையாகவும் இருக்கும் என்றார். நான் முற்றிலுமாக உடன்பட்டேன். அவரது உண்மைத் தன்மையும், நேர்மைத் திறனும், "மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் நிலைப்பாடும் என்னைக் கவர்கின்றன.
-எஸ்பி. உதயகுமார்
|