LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

அரிமா நம்பி - திரை விமர்சனம் !!

நடிப்பு : விகரம் பிரபு, பிரியா ஆனந்த்


இயக்கம் : ஆனந்த் ஷங்கர்


இசை : டிரம்ஸ் சிவமணி 


ஓளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்


தயாரிப்பு : கலைபுலி எஸ் தாணு



இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விகரம் பிரபு நடித்து வெளிவந்திருக்கும் படம் அரிமா நம்பி. இப்படத்தை ரசனை மிக்க படமாக இயக்கியிருக்கிறார் ஆனந்த் ஷங்கர். இதற்காக இவரை பாராட்டியே ஆக வேண்டும்.


சரி வாங்க கதைக்குள் செல்லலாம்....


கதாநாயகன் விக்ரம் பிரபு சென்னையில் உள்ள கார் ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒருநாள் பப்பில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார். அங்கு பிரியா ஆனந்தைப் பார்க்கிறார் விக்ரம் பிரபு. பிரியா ஆனந்தை கண்டவுடன் காதல் வயப்பட்டு விடுகிறார். அவரிடம் எப்படியாவது போன் நம்பரை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்யும் விக்ரம் பிரபு, நைசாக பேச்சு கொடுத்து போன் நம்பரை வாங்கிவிடுகிறார்.


மறுநாள் பிரியா ஆனந்திடம் எப்படி பேசுவது என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், இவருடைய நம்பருக்கு நாயகியே எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறார். பதிலுக்கு இன்று இரவு விருந்தில் இருவரும் நேரில் சந்திப்போம் என பதில் எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறார். பிரியா ஆனந்தும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் அன்று இரவு ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார்கள். அங்கு இருவரும் மது அருந்துகிறார்கள். ஹோட்டலை மூடும் நேரம் வருகையில், இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வருகிறார்கள். 


எங்கு செல்லலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில், பிரியா ஆனந்த், விக்ரம் பிரபுவை தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். விக்ரம் பிரபுவும் பிரியா ஆனந்த் அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் செல்கிறார். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் பிரியா ஆனந்தின் வீட்டிற்கு செல்லும் இவர்கள், அங்கேயும் மது அருந்துகிறார்கள். இடையில் விக்ரம் பிரபு ரெஸ்ட் ரூம் சென்று திரும்பும்போது, இரண்டு பேர் அந்த வீட்டுக்குள் புகுந்து பிரியா ஆனந்தை கடத்த முயற்சி செய்கிறார்கள். 


பிரியா ஆனந்தை காப்பாற்ற முயற்சிக்கும் விக்ரம் பிரபுவை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவளை கடத்தி சென்று விடுகிறார்கள். உடனே, அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இதுகுறித்து புகார் கொடுக்கிறார். இவரது புகாரை ஏற்றுக்கொள்ளும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்கிறார் விக்ரம் பிரபு.

 

அங்கு பிரியா ஆனந்த் கடத்தப்பட்டதாக விக்ரம் பிரபு கூறும் எந்த அடையாளமும் இல்லை. வாட்ச் மேனும் பிரியா ஆனந்த் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், அவள் கடத்தப்படவில்லை என்றும் மர்ம முடிச்சு போடுகிறார். அங்கிருக்கும் சிசிடிவி கேமராவிலும் பிரியா ஆனந்த் கடத்தப்பட்டதற்கான எந்த வீடியோவும் பதிவாகவில்லை. இதனால், இருவரும் குழம்பி போகின்றனர்.


இறுதியில், பிரியா ஆனந்த் கடத்தப்பட்டார்ரா? அவரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? விக்ரம் பிரபு பிரியா ஆனந்தை கண்டுபிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.


மொத்தத்தில் அரிமா நம்பி சுவாரஸ்யம் நிறைந்த படம்.

அரிமா நம்பி திரை விமர்சனம் !!
நடிப்பு : விகரம் பிரபு, பிரியா ஆனந்த்
இயக்கம் : ஆனந்த் ஷங்கர்
இசை : டிரம்ஸ் சிவமணி 
ஓளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்
தயாரிப்பு : கலைபுலி எஸ் தாணு
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விகரம் பிரபு நடித்து வெளிவந்திருக்கும் படம் அரிமா நம்பி. இப்படத்தை ரசனை மிக்க படமாக இயக்கியிருக்கிறார் ஆனந்த் ஷங்கர். இதற்காக இவரை பாராட்டியே ஆக வேண்டும்.
சரி வாங்க கதைக்குள் செல்லலாம்....
கதாநாயகன் விக்ரம் பிரபு சென்னையில் உள்ள கார் ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒருநாள் பப்பில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார். அங்கு பிரியா ஆனந்தைப் பார்க்கிறார் விக்ரம் பிரபு. பிரியா ஆனந்தை கண்டவுடன் காதல் வயப்பட்டு விடுகிறார். அவரிடம் எப்படியாவது போன் நம்பரை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்யும் விக்ரம் பிரபு, நைசாக பேச்சு கொடுத்து போன் நம்பரை வாங்கிவிடுகிறார்.
மறுநாள் பிரியா ஆனந்திடம் எப்படி பேசுவது என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், இவருடைய நம்பருக்கு நாயகியே எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறார். பதிலுக்கு இன்று இரவு விருந்தில் இருவரும் நேரில் சந்திப்போம் என பதில் எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறார். பிரியா ஆனந்தும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் அன்று இரவு ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார்கள். அங்கு இருவரும் மது அருந்துகிறார்கள். ஹோட்டலை மூடும் நேரம் வருகையில், இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வருகிறார்கள். 
எங்கு செல்லலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில், பிரியா ஆனந்த், விக்ரம் பிரபுவை தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். விக்ரம் பிரபுவும் பிரியா ஆனந்த் அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் செல்கிறார். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் பிரியா ஆனந்தின் வீட்டிற்கு செல்லும் இவர்கள், அங்கேயும் மது அருந்துகிறார்கள். இடையில் விக்ரம் பிரபு ரெஸ்ட் ரூம் சென்று திரும்பும்போது, இரண்டு பேர் அந்த வீட்டுக்குள் புகுந்து பிரியா ஆனந்தை கடத்த முயற்சி செய்கிறார்கள். 
பிரியா ஆனந்தை காப்பாற்ற முயற்சிக்கும் விக்ரம் பிரபுவை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவளை கடத்தி சென்று விடுகிறார்கள். உடனே, அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இதுகுறித்து புகார் கொடுக்கிறார். இவரது புகாரை ஏற்றுக்கொள்ளும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்கிறார் விக்ரம் பிரபு. அங்கு பிரியா ஆனந்த் கடத்தப்பட்டதாக விக்ரம் பிரபு கூறும் எந்த அடையாளமும் இல்லை. வாட்ச் மேனும் பிரியா ஆனந்த் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், அவள் கடத்தப்படவில்லை என்றும் மர்ம முடிச்சு போடுகிறார். அங்கிருக்கும் சிசிடிவி கேமராவிலும் பிரியா ஆனந்த் கடத்தப்பட்டதற்கான எந்த வீடியோவும் பதிவாகவில்லை. இதனால், இருவரும் குழம்பி போகின்றனர்.
இறுதியில், பிரியா ஆனந்த் கடத்தப்பட்டார்ரா? அவரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? விக்ரம் பிரபு பிரியா ஆனந்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
மொத்தத்தில் அரிமா நம்பி சுவாரஸ்யம் நிறைந்த படம்.
by Swathi   on 05 Jul 2014  0 Comments
Tags: Arima Nambi Vimarsanam   Arima Nambi Review   அரிமா நம்பி விமர்சனம்              
 தொடர்புடையவை-Related Articles
அரிமா நம்பி - திரை விமர்சனம் !! அரிமா நம்பி - திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.