*பாவலர் அறிவுமதிக்கு கவிக்கோ விருது (2019), பரிசுத் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் பாவலர் அறிவுமதி*
2019 ஆம் ஆண்டிற்கான கவிக்கோ விருது பாவலர் அறிவுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கவிக்கோ விருது விழாவானது கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை மற்றும் தமிழியக்கம் சார்பாக காணொலி கூட்டமாக நடைபெற்றது. இதில் கவிக்கோ அறக்கட்டளைச் செயலாளர் அயாஸ் பாஷா அவர்கள் 2019 ஆம் ஆண்டிற்கான 'கவிக்கோ விருது' பாவலர் அறிவுமதி அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார்.வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தரும் தமிழியக்கம் நிறுவன தலைவருமான கோ.விஸ்வநாதன் அவர்கள் பொற்கிழி அளித்து விருது வழங்கினார்.விருதினைப் பெற்றுக் கொண்ட பாவலர் அறிவுமதி அவர்கள் பேசும்போது தனக்கு வழங்கப்பட்ட பொற்கிழி தொகை ரூ.1 லட்சத்தினை முதல்வரின் கொரோனா நிதிக்கு வழங்குவதாக தெரிவித்தார். இவ்விழாவிற்கு கவிக்கோ அறக்கட்டளை பொருளாளர்சோலைநாதன் அவர்கள் தலைமை வகிக்க ,பதிப்பாளர் எஸ். எஸ் ஷாஜகான், தமிழியக்கம் மாநிலச் செயலாளர் சுகுமார், பொருளாளர் புலவர். பதுமனார் , இதழாளர் ஜே.வி நாதன், கவியருவி அப்துல்காதர், திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, பிருந்தாசாரதி ,கவிஞர் பழனிபாரதி ,கவிஞர் இசாக், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களது மகன் அஷ்ரப், பேராசிரியர் நை.மு.இக்பால் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
|