ஐ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் எந்திரன் 2 ம் பாகத்தை இயக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
மிகவும் பிரமாண்டமாக, ஹாலிவுட் தரத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளதாம்.
இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் ஷங்கருக்கு ஒரு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறதாம். அதாவது, எந்திரன் படத்தில் வில்லனும் ரஜினிதான். ஆனால் எந்திரன் 2ல் வில்லன் ரஜினி இல்லை. எனவே ஒரு பவர்புல் வில்லன் வேண்டும் அவர் ரஜினி அளவிற்கு பாப்புலராக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
எந்திரன் 2ல் வில்லனுக்காக பரிசீலனையில் இருந்த கமலஹாசன், அமீர்கான் ஆகியோருடன் பேசப்பட்டது.ஆனால் இருவருமே உறுதியாக நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனம் நாங்கள் ஹாலிவுட் நடிகரை தேர்வு பண்ணுகிறோம் ஒகேவா என ஷங்கரிடம் கேட்க அவர் ஓகே சொன்னதோடு தனது விருப்பமாக அர்னால்டை கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அர்னால்ட் ஷங்கர் ஹாலிவுட் படம் இயக்க வேண்டும். அதில் நான் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.. அதை மனதில் வைத்தே ஷங்கர் தனது விருப்பத்தை சொல்லியிருக்கிறாராம்.
லைக்கா நிறுவனம் அர்னால்டுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|