LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !!

ஐ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் எந்திரன் 2 ம் பாகத்தை இயக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

மிகவும் பிரமாண்டமாக, ஹாலிவுட் தரத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளதாம்.

இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் ஷங்கருக்கு ஒரு சில நிபந்தனைகளை விதித்திருக்கிறதாம். அதாவது, எந்திரன் படத்தில் வில்லனும் ரஜினிதான். ஆனால் எந்திரன் 2ல் வில்லன் ரஜினி இல்லை. எனவே ஒரு பவர்புல் வில்லன் வேண்டும் அவர் ரஜினி அளவிற்கு பாப்புலராக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

எந்திரன் 2ல் வில்லனுக்காக பரிசீலனையில் இருந்த கமலஹாசன், அமீர்கான் ஆகியோருடன் பேசப்பட்டது.ஆனால் இருவருமே உறுதியாக நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனம் நாங்கள் ஹாலிவுட் நடிகரை தேர்வு பண்ணுகிறோம் ஒகேவா என ஷங்கரிடம் கேட்க அவர் ஓகே சொன்னதோடு தனது விருப்பமாக அர்னால்டை கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அர்னால்ட் ஷங்கர் ஹாலிவுட் படம் இயக்க வேண்டும். அதில் நான் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.. அதை மனதில் வைத்தே ஷங்கர் தனது விருப்பத்தை சொல்லியிருக்கிறாராம்.

லைக்கா நிறுவனம் அர்னால்டுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by CinemaNews   on 05 Oct 2015  0 Comments
Tags: Enthiran 2   Enthiran 2 Villan   Arnold   Arnold Schwarzenegger   Enthiran 2 Arnold Schwarzenegger   Endhiran 2 Villain   Endhiran 2 Latest News  
 தொடர்புடையவை-Related Articles
எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !! எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !!
எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !! எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !!
எந்திரனாக அமீர்கானா ? எந்திரனாக அமீர்கானா ?
எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி சமதம் சொல்வாரா !! எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினி சமதம் சொல்வாரா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.