சென்னை, நுங்கம்பாக்கம் லலித் கலா அகாடமியில் பெண்ணின் கிராமியத்தை வெளிப்படுத்தும் ஓவியக் கண்காட்சி தொடங்கி உள்ளது. அதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
அதே போல் சைவசமயக் குரவரான திருநாவுக்கரசரின் ஓவியங்கள், பெண்கள் சந்திக்கும் பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வுகளை ஓவியமாக, மிக நேர்த்தியாக சுட்டிக்காட்டி உள்ளனர். நாட்டியம் ஆடும் பெண்களின் முத்திரைகள். ஓடித் திரியும் சேவல்கள், துள்ளித் திரியும் காளைகள் எனத் தத்ரூபமான ஓவியங்கள் அனைத்தும் சென்னை நுங்கம்பாக்கம் லலித் கலா அகாடமியில் உள்ள ஓவிய கண்காட்சியில் இடம்பிடித்து, மக்கள் மனதிலும் இடம் பிடித்தன.
சிறு வயதில் தான் கண்ட காட்சிகளை ஓவியமாக வரைந்து இருக்கிறார் கிருபானந்தம். விளையாடிய வயல் வெளிகளையும் தான் கண்ட காட்சிகளையும் ஓவியமாக வரைந்திருக்கிறார், 20 வருடங்களாக பெண்ணியத்தை ஓவியமாக வரைந்து வரக்கூடிய ஓவியர் திருநாவுக்கரசு.
இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் சமீபகாலமாக, பெண்களுக்கு நிகழ்ந்து வரும் பிரச்சனைகளையும், அவர்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்த ஓவிய கண்காட்சி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தலை சிறந்த ஓவியர்கள், இளைஞர்கள் என பலரும் இந்த கண்காட்சியை பார்த்து வியந்து வருகிறார்கள்.
|