சுங்கவரி உயர்த்தப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால் இறக்குமதியை குறைக்கும் விதத்தில் அத்தியாவசிய தேவையற்ற 19 பொருட்களுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
ஏசி, வீட்டுப் பயன்பாட்டுக்கான ஃபிரிட்ஜ், 10 கிலோவுக்கு குறைவான அளவு கொண்ட வாஷிங்மெஷின் ஆகியவற்றின் சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை உயருகிறது. ஸ்பீக்கர்கள், காலணிகள், கார் டயர் ஆகியவற்றுக்கான சுங்க வரி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
விமான எரிபொருளுக்கு இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்த நிலையில், 5 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. 2017 - 2018 நிதி ஆண்டில் ரூ.86,000 கோடி அளவிற்கு இந்த 19 பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி சுங்க வரிஉயர்வு அமலுக்கு வந்துள்ளது.
|