LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பசுமை அதிகரிப்பில் இந்தியா- சீனா முன்னணி வகிக்கிறது- நாசாவின் பாராட்டு!

இந்தியாவும், சீனாவும் பசுமை அதிகரிப்பிலும் முன்னணி நாடுகளாக திகழ்ந்து வருகின்றன என்று நாசா பாராட்டு தெரிவித்து உள்ளது.

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் 20 லட்சம் சதுர மைல்கள் தொலைவிற்கு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றும், இதனால் அமேசான் மலைக்காடுகள் அளவிற்கு பசுமை அதிகரித்து உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

அதே சமயம் இதுவரை அழிக்கப்பட்டுள்ள காடுகளே அதிகம் என்ற கருத்தையும் நாசா முன்வைத்து உள்ளது. மரம் வளர்க்கும் திட்டம், வேளாண் தொழில் உள்ளிட்ட அடுத்தடுத்த திட்டங்களை இந்தியா மற்றும் சீனா மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

காடுகள் வளர்ப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு சீனாவிலும், இந்தியாவிலும் தான் காணப்படுகிறது என்றும், இருப்பினும் ஒட்டுமொத்த உலக அளவில் பார்க்கும்போது இது வெறும் 9 சதவிகிதம் மட்டுமே இருப்பதால் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகளை தற்போது தடுக்க முடியாது என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 செயற்கைக்கோள்கள் மூலம் 2000 மற்றும் 2017ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரோ ரேடியோ மீட்டர் என்ற நுண்சாதனம் வழியான புவியின் மேற்பரப்பை நாசா ஆராய்ந்தது. அதன்மூலம் பசுமைக் காடுகள் அதிகரிப்பில் சுமார் நான்கில் ஒரு பங்கை சீனா மட்டுமே அளித்துள்ளது தெரியவந்துள்ளது. 
உலக அளவில் உள்ள காடுகளின் வளர்ச்சி 42 சதவிகிதமாகவும், வயல் வெளிகளின் வளர்ச்சி 32 சதவிகிதமாகவும் இருக்கிறது என்று நாசா குறிப்பிட்டுள்ளது. காடுகள் வளர்ப்பை சீனா அதிகரித்துள்ளதன் மூலம் தற்போது காடுகள் பாதுகாப்பாக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் காற்றுமாசு, மண் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஓரளவுக்கு சரி செய்ய முடியும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்து உள்ளது. 

மேலும் உணவு உற்பத்தியிலும் சீனாவும், இந்தியாவும் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரே நிலத்தில் பல்வேறு பயிர்களை பயிரிடும் முறைகளை 2 நாடுகளும் பின்பற்றி வருவதே இதற்கு காரணம் என்றும், இந்த முறைகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே என்று நாசா கூறியுள்ளது. 


தானியங்கள், காய்கறிகள், பழங்கள் கடந்த 2000 ஆண்டிலிருந்து 35 முதல் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது என்றும் இந்த வகை விளைச்சல் 2 நாடுகளின் மக்கள் தொகைக்கு போதுமானதாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. வயல் வெளிகள் காடுகள் இருக்கும் பகுதிகளில் கரியமில வாயுகள் படிவது வெகுவாக குறைந்துள்ளதாக நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் விளக்குகின்றன.

by Mani Bharathi   on 15 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.