LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்!

மூளைச்சாவு அடைந்த தனது மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்க கணவர் முன்வந்தது அனைவரது உள்ளங்களையும் உருக்கியது.

பிப்.14 உலக காதலர் தினத்தை காதலர்கள் உச்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தங்களுடைய அன்பின் வெளிப்பாடாக பூச்செண்டு  உள்ளிட்ட பரிசுப் பொருட்களை ஒருவருக்கொருவர் வழங்கி மகிழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் வேலூரில் மூளைச்சாவு அடைந்த தனது மனைவியில் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகளை தானமாக வழங்க வேலூரை சேர்ந்த கவுதம்ராஜ் என்பவர் முன்வந்தது அனைவரது உள்ளங்களையும் உருக்கியது.

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி கிராமத்தை சேர்ந்தவர கவுதம்ராஜ். பெங்களூரு ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோகிலா, இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. 

தற்போது கோகிலா கர்ப்பமாக இருந்து வந்துள்ளார் ஆனால் அவரை பரிசோதனை செய்த போது உடலில் ரத்த அணுக்கள் குறைவாக உள்ளது தெரிய வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள  சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. இருப்பினும் தாய் கோகிலாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இந்த நிலையில் அவரைப் பரிசோதனை செய்த போது அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த கணவர் கவுதம்ராஜ் மற்றும் உறவினர்கள், சோகத்தில் ஆழ்ந்தனர். 

ஆனாலும் கவுதம்ராஜ் மனதை ஒருநிலைப்படுத்தி தனது மனைவியின் உடல் உறுப்புகளை பிப்.14 காதலர் தினம் என்பதால் அதனை தானமாக வழங்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். 

அதிலும் குறிப்பாக காதலர் தினத்தன்று தன்னுடைய மனைவியின் இதயத்தை மற்றொரு இதயம் செயல்பாடு பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த வேண்டும் என்று கவுதம்ராஜ் மருத்துவர்களிடம் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து கோகிலாவின் உடல் உறுப்புகள் இதயம், நுரையீரல், கணையம், உள்ளிட்ட 5 உடல் உறுப்புகளை தானமாக செய்ய உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கோகிலாவின் உடல் உறுப்புகளை சட்டத்திற்கு உட்பட்டு அவை அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை வேலூரில் நடைபெற்று வருகிறது. 
காதலர் தினத்தன்று மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தையே தானமாக வழங்க முன்வந்த கவுதம்ராஜை பலரும் பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் மனைவியை இழந்து வாழும் அவரைத் தேற்றவும் மற்றவர்கள் தவறவில்லை. 

by Mani Bharathi   on 15 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.