ஜூம் செயலி மூலம் ஆன்லைனில் ‘தாய்மண்ணே வணக்கம்’ – கலந்துரையாடல் - அமெரிக்காவில் விவசாயத்தில் அசத்தும் தமிழர்களுடன் சந்திப்பு ‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம் ‘லேக் வியூ’ இயற்கை வேளாண்மை இணைந்து ‘தாய் மண்ணே வணக்கம்’ எனும் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் வாழும் தமிழ் மக்கள் வாட்ஸ்-அப் குழுவாக இணைந்து, தங்கள் வீடுகளில் தோட்டம் அமைத்து வேளாண்மையில் மூலிகைத் தோட்டம், இயற்கை வேளாண்மை என அசத்திவருவதோடு, மிகப்பெரிய முன்னெடுப்புக்கும் வழிகாட்டியுள்ளனர். ஒரே பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து பறைசாற்றிய விவசாயத்தின் பெருமையைப் பாராட்டவும், வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்க தமிழர்களிடையே பகிரவும் சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், ஆசிரியருமான சிகரம் சதிஷ் குமார் பங்கேற்று உரையாடுகின்றார். இந்நிகழ்வில் அமெரிக்க தமிழ் குடும்பங்களோடு பல்துறை பிரபலங்களும் உரையாட உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. இ்ந்தச் சந்திப்பில் இணைவதற்கான ஜூம் ஐடி – 227 061 8029 (பாஸ்வேர்ட் - SVM123). கூடுதல் விவரங்களுக்கு 9994119002 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
|