தமிழக காவல் புலனாய்வு பிரிவில் சிறப்பான பணிக்காக 5 பெண் அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு பதக்கம் - மத்திய உள்துறை அமைச்சகம் வழங்குகிறது
குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
அதன்படி 2020ம் ஆண்டுக்கான பதக்கம் பெறுவோர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்திய அளவில் காவல் துறையைச் சேர்ந்த 121 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 6 பேரில் 5 பேர் பெண் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
|