இன்று 74-வது சுதந்திர தின கொண்டாட்டம் - தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி
இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 8.45 மணிக்குத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி அவர்கள். தொடர்ந்து பல விருதுகளையும் வழங்க உள்ளார். முதல்வரின் உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன தணிக்கைகள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பது போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
|