LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அறம் காப்போம் - வேளாண்மை காப்போம்

அச்சமில்லை அச்சமில்லை

முண்டாசு கவி முழங்கினான்  அன்று

அச்சமிங்கு துச்சமென்று

முண்டாசுகளால் குலுங்குது நாடு.

கலப்பை ஏந்தும் கரத்திலின்று

பதாகை ஏந்தும் பரிதாபம் காணீர்

துடிப்பை கண்டும் தூர நிற்கும்

செருக்குடன் சிந்தை சிரிப்பது காணீர்.

சுழன்றும் ஏர்ப்பின்னது  உலகென்றே

செப்பும் எம் மறைமொழி கூற்றாகும்

மறந்தும் பேணோம் மக்கள் நல மென்றே

பசப்பும் மதியிலிகாள் பேச்சாகும்.

தொழுதுண்டு வாழ்த்த வேண்டோம்  யாம்;

தடிகொண்டு   தாக்காததே  போதும்.

அழுதுண்டு அடமேற்று மறம் மறந்தாரே

வழியுண்டு வேட்கையுடன் அறம் காத்தீரே!

பெருவணிகன் பெருஞ்செல்வம் ஈட்டிடவே,

பார்த்து பார்த்து புனைவர் வெறுஞ்சட்டம்.

சிறுவிவசாயி செத்து விழும் நிலை மாற

குறுந்திட்டமும் நினைத்திடாத மூடர்காள்

உழவுக்கும் தொழிலுக்கும் யாம்

வந்தனை வேண்டோம் !

ஊழல் கார்போரேட்டுக்குதவி

நிந்தனை செய்யேல் !

குறள்  உரைத்து எமை ஏய்த்து !

யாது கண்டீர் மதியிலிகாள்!

குறள் கருத்துணர்ந் து வழி நடந்தே 

தீதொழிக்க திட்டம் காண்பீர்!

ஏரெழுபதீந்த  கம்பரை கேட்பீர்!

ஏரேந்திய தோள் உலகேந்து மென்பார் !

திரை போட்டு வரைவு இயற்றி

வெறுமுரல்  இடித்தல் தீதன்றோ?

கறை  போக்க மனந் திருந்தி

அருங்குரலை செவி மடுப்பீர்!

மறம் மறந்து  அறம்  பிறழ்ந்தால்,;

வரலாற்றின் கறை யாவீர் முடிதுறந்தே.

 

து.கிருஷ்ணமூர்த்தி

Aram kaappom- Velaanmai kappom
by D.Krishnamurthy   on 18 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.