LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உங்கள் மாவட்டத்தின் முக்கிய அனைத்து முக்கிய இடங்கள் குறித்த சிறப்பை, வரலாற்று பெருமைகளை அறிந்திருக்கிறீர்களா?

உங்கள் மாவட்டத்தின் முக்கிய அனைத்து முக்கிய இடங்கள் குறித்த சிறப்பை, வரலாற்று பெருமைகளை அறிந்திருக்கிறீர்களா?
கொரோனா காலக்கட்டத்தில் முகநூலை திறந்தால், தொலைக்காட்சியை திறந்தால் மனம் வருத்தமடைகிறது. என்ன செய்யலாம், கவலைகளை விடுத்து ஆக்கபூர்வமாக உங்கள் மாவட்டங்களைக் குறித்து சிந்திக்கலாம். நம் சக்தி கூடும். நேர்மறையான எண்ணங்கள் நம்மை பலமாக்கும். நம் மாவட்டத்தை பற்றி தெரியாத சிறப்புகளை அறிந்துகொள்ளவும் வாய்ப்பு. வாருங்கள்..
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு சிறப்பு வாய்ந்தது. நாம் அறிந்திராத பெருமை மிக்க இடங்கள் பல உள்ளன. நம் மாவட்டத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்று நமக்கே தெரியாது. மேற்கத்திய நாடுகளில் 25-50 ஆண்டுகளில் நடந்த ஒரு சிறு நிகழ்வைக்கூட ஆவணப்படுத்தி பாதுகாக்கிறார்கள். நாம் எத்தனை நூறு, ஆயிரம் ஆண்டுகள் பெருமைவாய்ந்தது என்று கூட தெரியாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நம் மாவட்டத்தில் உள்ளதை அறிந்துகொள்ள இன்னும் முயற்சிக்கவில்லை. பாதுகாக்க முயற்சிக்கவில்லை.
என்ன செய்யலாம்? வலைத்தமிழ் செய்திகள் பகுதியில்->மாவட்ட சிறப்புகள் என்ற பகுதியை உருவாக்கி 38 மாவட்டங்களை சேர்த்துள்ளது. உங்கள் மாவட்டத்தை தேர்தெடுத்து ஒவ்வொரு மாவட்டத்தின் ஒவ்வொரு சிறப்பையும் ஒரு கட்டுரையாக்குவோம். இது பல பக்கங்கள் இருக்கவேண்டுமென்பதில்லை. முதல்கட்ட தகவல் சேர்த்து பின்பு அதனை மேம்படுத்தலாம்.
வேறுபாடுகள் இல்லாத அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வரலாற்று இடமாக , ஆளுமைகள் வாழ்ந்த இடமாக இருக்கவேண்டும்.
உதாரணம்: மயிலாடுதுறை மாவட்டதை தேர்ந்தெடுத்து அதன் தலைப்புகளை பார்க்கலாம். இன்னும் கட்டுரைகள் தயார் செய்யப்படுகிறது. மாவட்டத்தின் சிறப்புகள் ஓரளவு சேர்க்கப்பட்டுள்ளது.
இது செய்வதால் என்ன பயன்?
1. ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்புகள் பல மில்லியன் தமிழ் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் வலைத்தமிழ் தமிழ் தகவல் களஞ்சியத்தில் ஆவணப்படுத்தப்படுகிறது.
2. அடுத்தக் கட்டமாக இவைகளை மாவட்ட நண்பர்கள் மூலம் ஆராய்ந்து, உரிய அனுமதி பெற்று , மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள் மூலம் அவைகளை ஐந்து முதல் பத்து விளம்பர பலகைகளாக வைத்து மாவட்டத்தில் உள்ளே வரும் அனைத்து பகுதிகளிலும் , மாவட்டத்தின் உள்ளே முக்கிய இடத்தில் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
3. மாவட்டத்தில் உள்ள பள்ளி ,கல்லூரிகளில் இதை ஒரு நூலகத் தொகுத்து கொண்டுசேர்த்து அவைகளை தொடர்ந்து பராமரிக்க, பாதுகாக்க , அவர்கள் ஊரின் பெருமையை அறிந்துகொள்ள முயற்சிக்கப்படும்.
4. உதாரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில், தில்லையாடி வள்ளியம்மை (நினைவகம் உள்ளது ), சிந்தனையாளர் டாக்டர் . எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோர் குறித்து அவர்கள் பிறந்த ஊரில் சிறு விவரக்குறிப்பு இல்லாத இடங்களில் வைத்து நினைவு நாட்களில் மாணவர்கள், இளையோர் அவர்கள் குறித்து அறிந்துகொள்ள அங்குள்ள தன்னார்வ அமைப்புகள் முயற்சிமேற்கொள்ளலாம்.
5. சுற்றுலா செல்பவர்கள் முதலில் தமிழ்நாட்டில் சித்தர் சமாதிகள், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள், ஆளுமைகள் வாழ்ந்த மண் என்று அறிந்துகொள்ளவும், சுற்றுலா பொருளாதாரம் அந்தந்த இடங்களை வளர்க்கவும் வாய்ப்பாக இருக்கும்.
6. உள்ளூரில், வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு வரும்போது சுற்றிப்பார்க்க, தகவல் அறிந்துகொள்ள எதுவாக இருக்கும்.
7. இதுகுறித்து மாவட்டங்களை தேர்ந்தெடுத்து செல்லும் இடங்களை, தூரங்களை, வழிகளை எளிதாகக் கூற ஒரு செயலி (mobile app ) வெளியிடவும் முயற்சிக்கப்படும்.
என்ன? உங்கள் மாவட்டத்தின் பெருமைகளை ஆவணப்படுத்த தயாரா?
இங்கே உள்ளே சென்று உங்கள் செய்திகள் ->மாவட்ட சிறப்புகள் -> <உங்கள் மாவட்டம்> தேர்ந்தெடுத்து உங்களுக்கு தெரிந்த மாவட்ட முக்கிய வரலாற்று இடங்களை , தகவல்களை பதிவிடவும். ஆசிரியர் குழு ஆராய்ந்து உங்கள் பெயரில் அப்படியே வெளியிடும்.

by Swathi   on 12 May 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.